23:27 | Author: அன்னைபூமி
எந்த பிறவி என்றாலும் மானுடம் போல் வருமா? தனக்கு செய்த உதவிக்காக உயிரையும் துட்சமென அவர் தம் செய்த உதவிக்காக அவர்களுக்காக நீத்த பல உயர்ந்த உள்ளங்கள் வாழ்ந்து மடிந்த பூமி நம் தமிழ் மண் என்றால் அதில் மிகையில்லை. கெளரவர்களுக்காக கர்ணனும், பாரிக்காக கபிலரும் தங்கள் உயிரை செய்ந்நன்றிக்காக நீத்தனர் என்பது நம் அனைவரும் அறிந்ததே. . .
குறள்
             "காலத்தினால் செய்த நன்றி சிறிதுஎனினும்
             ஞாலத்தின் மாணப் பெரிது"
நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிரியதாக இருந்தாலும் பயன்பாட்டு நிலையில் உலகத்தைவிட மிகப்பெரியது.
குறள்
            "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுஉண்டாம் உய்வுஇல்லை
             செய்ந்நன்றி கொன்ற மகற்கு"
எத்தகைய அறத்தைக் கெடுத்தவர்க்கும் மன்னிப்பு உண்டு ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்தவருக்கு மன்னிப்பே கிடையது

மனிதத்தில் சமூகம் என்ற அமைப்பே ஒருவருக்கொருவர் பலவற்றையும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதாலும் திரும்பப்பெருதலாலும் தான் சமனிலை பெருகின்றது.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: