00:01 | Author: அன்னைபூமி
நாம் வாழ்வில் எத்தனையோ நபர்களை தினமும் நம் தொழில் முறை கருதியோ பழக்கத்தின் காரணமாக பலரை சந்திக்கின்றோம். இவர்களிடம் நாம் எப்படி நடந்துகொள்வது, அவர்களிடம் இருந்து நமக்கான நடத்தைகளை எப்படி கற்றுக்கொள்வது, ஏன்னென்றால் நாம் பழகும் ஒவ்வொருவரிடம் இருந்தும் அவர்களின் நடத்தைகளை நாம் அறியாமையே நாம் கற்றுக்கொள்கின்றோம். நம்மை போல் தான் அவர்களும் நம்மிடம் இருந்து ஏதோ ஒன்றை கற்றுகொள்கின்றனர். என்வே நாமும் நம் சுற்றத்தரும் செடயல் மற்றும் எண்ணங்களில் வளமைமிக்கவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.

"நிலத்துஇயல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
 இனத்துஇயல்பது ஆகும் அறிவு"

நிலத்தின் தன்மைக்கு ஏற்ப, பெய்த நீரின் தன்மை திரியும் அதுபோல் தாம் சேர்ந்த இனத்திற்குத் தக்கவாரே மனிதர்களுக்கு அறிவு திரியும்.
           
"மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணரிச்சி இனத்தான்ஆம்
 இன்னான் என்ப்படும் சொல்"

மாந்தர்க்கு பொது உணர்வு மனம் காரணமாக உண்டாகும். இவன் இப்படிப் பட்டவன் என்று சொல்லப்படும் சொல் இனம் காரணமாக உண்டாகும்.

இங்கு வள்ளுவர் இனம் என்று குறிப்பிடுவது நாம் பழகும் மனிதர்களை, அவர் தம் இயல்பை. 
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: