00:03 | Author: அன்னைபூமி
கூத்துகலையில் முதல் ஆறு வகை நின்று ஆடுவது. இதில் முதல் மூன்று, அவை பின்வறுவன.

அல்லியம் 
                    இது கண்ணன் யானையின் மருப்பை ஒடித்ததை காட்டும் ஆடல், இந்த ஆடலுக்கு ஆறு உறுப்புகள் உண்டு.


கொடுகொட்டி
                        சிவபெருமான் முப்புரத்தை எரித்து, அது எரியுண்டு எரிவதைக் கண்டு வெற்றிக் களிப்பினால் கைகொட்டி நின்று ஆடிய ஆடல் இது. கொட்டிச் சேதம் என்றும் இதற்குப் பெயர் உண்டு. இந்த ஆடலுக்கு நான்கு உறுப்புகள் உண்டு. இவ் ஆடலில் உட்கு (அச்சம்), வியப்பு, விழைவு, பொழிவு என்னும் குறிப்புகள் உண்டு.


குடைகூத்து
                       இது முருகன் அவுணரை வென்று ஆடிய ஆடல் இக் கூத்திற்கு நான்கு உறுப்புகள் உண்டு. காவடி என்னும் பெயருடன் இக்காலத்தில் ஆடுகிற கூத்து, குடைக் கூத்துப் போலும்.


நன்றி, மீதம் உள்ளவற்றை அடுத்த பதிப்பில் காண்போம்.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: