00:10 | Author: அன்னைபூமி
பரிமாற்று விகிதத்தில் தான் பழக்கமும் பண்பாடும் வளர்ச்சியும் அடங்கியிருக்கின்றது. இன்றைய சூழலில் மனிதர்களின் மனம் எதை பின்பற்றுகின்றது?. நன்பகத்தன்மை நம்மிடையே குறைந்தமைக்கு தனி மனிதனாகிய நாம் ஒவ்வொருவரும் தான் காரணம். மற்றொரு பக்கம் புகழுக்கென்று அழையும் ஒரு கூட்டம். தற்பெறுமை இழவு வீட்டில் மார்ரடிப்பது போல வழக்கமாகிவிட்டது.
    
                  "ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லது
                   ஊதியம் இல்லை உயிர்க்கு"

ஏழைகளுக்கு உதவ வேண்டும் அதனால் புகழ் பெற்று வாழவேண்டும்; அதை தவிரப் பிறப்பின் பயன் வேறொன்றும் இல்லை.

                    "தோன்றின் புகழொடு தோன்றுக அஃதுஇலார்
                     தோன்றலின் தோன்றமை நன்று"

ஒரு செயலில் நுழைந்தால் புகழ் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு நுழைய வேண்டும் இல்லை யென்றால், அச்செயலில் நுழையாதிருப்பதே நல்லது.

புகழின் நோக்கம் அச்செயலை விரைந்து முடிக்க உந்துதல் செய்யும், அதே சமயம் புகழின் உச்சி தலை கணத்தை உருவாக்கிவிடாமல் இருந்தால் நல்லது.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: