22:16 | Author: அன்னைபூமி
நின்று ஆடும் கூத்துக்கலையில் இறுதி மூன்று வகை

குடக்கூத்து
                    கண்ணனுடைய பேரனாகிய அநிருத்தனை வாணன் என்னும் அவுணன் சிறை வைத்தபோது, அவனை சிறை மீட்பதற்காகக் கண்ணன் ஆடிய ஆடல், மண்ணால் அல்லது பஞ்ச லோகத்தினால் செய்யப்பட்ட குடத்தைக் கொண்டு ஆடப்படுவது இக்கூத்து, குடக்கூத்துக்கு ஐந்து உறுப்புகள் உண்டு.

பாண்டரங்கம்
                           சிவபெருமான், திரிபுரத்தை எரித்துச் சாம்பலாக்கிய பின்னர், தேர்ப்பாகனாக இருந்த நான்முகன் காணும்படி ஆடியது இக்கூத்து இக்கூத்தில் தூக்கு என்னும் தாள உறுப்புச் சிறப்பாக இருக்கும். இக்கூத்து மொத்தம் ஆறு உறுப்புக்களை உடையது.

மல்
         கண்ணன், வாணன் என்னும் அவுணனுடன் மற்போர் செய்து அவனைக் கொன்றதைக் காட்டும் கூத்து மல்லாடல் எனப்படும். மல்லாடல் ஐந்து உறுப்புக்களை உடையது

நின்று ஆடும் கலை நிறைவுபெற்றது. இனி வீழ்ந்து ஆடுவது தொடரும். . .
Category: |
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: