19:05 | Author: அன்னைபூமி
விவசாயிகள்.....!!!!!!!

மண்ணைப் பார்த்த நாள்முதல்
உண்ண உணவில்லை இன்றுவரை. . .
உயிர் சிந்தி - உழைத்து உழைத்தே
கைகளின் உள்ளங்கை கூட
கருப்புத்தோல் போர்த்தியிருந்தது. . .

பசியறியா காலம்போய்
வாழ வழிகேட்கும்
வயிற்றுக்கு - இன்றோ
பதில்கூற முடியாத
ஊமைகளாய் இவர்கள். . .

கண்ணீரால் நனைந்து
இவர்களின் இதயங்கூட
இன்று ஊறிப்போன நிலமைதான். . .

நெஞ்சுக் கூட்டின் ஆழமும்
கொஞ்சம் அதிகப்படுத்தப்பட்டுதான் இருந்தது. . .

பசிசெய்த கொலையால்
அந்த ஆழங்கூட - இவர்களின்
ஆவி புதைக்கும் பிணப்படுகுழியாய்த்தான். . .

மழைதந்த வறட்சியால்
இவற்களின் ம்ண்ணும்
இன்று வாய்பிளந்து
உயிர் விட்டுக்கொண்டிருப்பதுதான்
இன்னும் கொடுமை. . .

இது தொடர்ந்தால்
இவர்கள் அணைவரும்
பிணமாவது சத்தியம். . .

இவர்கள் பிணங்கண்டு மனமுருகி
பணந்திண்ணும் முதலைகளும்
மண்வாசனை மறந்து மாக்களும்
இரக்கங்கொண்டு எரித்துத் தொலைவோம்
எனப் பிணங்களைத் தீயிட்டு
எரிப்பதும் நிச்சயம். . .

எரித்த சாம்பலைக் கரைக்கத்
தண்ணீர் வேண்டுமே....?
அப்பொழுதாவது
மழை வரும்......!!!!!

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: