18:24 | Author: அன்னைபூமி
 விடிந்தும் விடியாத காலை
பார்வையின் குளிர்ச்சியில்
மலை முகடுகள்
இரண்டும் நாலுமாக
அடியெடுத்து விரைந்தால்...
தேயிலை குறுமரங்கள்
வேர்தான் தெரியாது
இங்கு மரமும் தெரியாமல்
இலை ஆடை உடுத்தி
புதுப் பெண்ணாய் நிற்க
காட்டெருமை வடித்த
இயற்கை பால் கட்டிகள்
பாறைகளில் விருந்தாய்
இன்னும்....
தெளிவான ஊற்று நீர்
பாதம் வருடும் மேகம்
சட்டென இருண்டதில்
யானை மிதி, கொசு கடி
ஓநாய் ஊளை .....
தோல்வியடைந்த காதலனின்
மனநிலையைப் போல்
காடே மாறிப் போனது
இருந்தாலும்
தொலைதூரத்து பச்சை
மறக்கவில்லை!
                       -  சாகம்பரி, மதுரை

 


You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 comments:

On February 19, 2011 at 8:00 PM , கவிதை வீதி... // சௌந்தர் // said...

கவிதை அருமை
வாழ்த்துக்கள்.