12:15 | Author: அன்னைபூமி
எத்துனை உறவுகள் வந்தாலும், மனதிற்கு வலிமையாகவும், வாழ்க்கையின் இருதிவரை நம் தோழோடு தோழாக வரும் துணை தோழன் மட்டுமே. இந்த உழகத்தில எதிர்பார்ப்பும் பங்கீடும் இல்லாமல் உறவுகள் இல்லை. இவைகள் அணைத்தும் இருந்தாலும் இல்லாவிட்டாலும். என்றும் நம்முடன் வழித்துனையாய் வருவது நட்பு மட்டுமே. நட்பில் விரிசல்களும் புரிதல்களும் அதிகம். தேடுதலும் புரிதல் தன்மையும் இல்லாமல் எதுவும் கிடைப்பதும் இல்லை, எதுவும் நிலைப்பதும் இல்லை.

"பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை
செய்துஆங்கு அமையாக் கடை"

உரிமையோடு நண்பன் செய்தனவற்றிற்கு உடன்படாவிட்டால் பழகின நட்பினால் என்ன பயன்.

"கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாள்இழுக்கம் நட்டார் செயின்"

நண்பனின் குற்றத்தைப் பிறர் சொன்னாலும் நம்பாதவர்க்கு, தம் நண்பன் குற்றம் செய்தால், அது அன்றைய சூழலின் குற்றமாகவே தோன்றும், அவர் செய்ததாக கருதப்படாது. . .
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: