15:33 | Author: அன்னைபூமி

என்னை வளர்த்து 
ஆளாக்கியவன் நீ
உன்னை இன்று 
அனாதையாய் விட்டுவிட்டேன் 
நான். . .

உன்இறுதி நாட்கள்
முதியோர் இல்லத்தில். . .
ஏதேதோ காரணத்தால் 
உன்னை தெரிந்தே 
தொலைத்தேன் நான். . .

மன்னித்துவிடு என்னை 
மறந்து விடாதே
மனித நேயம் 
எனக்கு இல்லையென

உந்தன் உதிரம்  
என்னுள் இன்றும் 
ஓடிக்கொண்டு தான் 
இருக்கின்றது. . . 

உந்தன் பிரிவை 
நினைவு படுத்திக்கொண்டே. . .
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 comments:

On March 15, 2011 at 9:14 AM , இராஜராஜேஸ்வரி said...

நினைவுகளால் நனைந்தோம்.
நன்று.