19:43 | Author: அன்னைபூமி

கடைவீதி தெருமுனை திருப்பத்தில்
கல்லில் பட்டு காலில் இரத்தம்
வலியில் சுளித்த ஏதோ ஒரு முகம்,
மூன்றவது அடுக்கு மாடி வீட்டில்
முனகிக் கொண்டு மூச்சை பிடித்து
சன்னல் வழியே பறக்க எத்தனிக்கும்
உயிர்பறவையின் கடைசி பிரயத்தனங்கள்,
சாலையோரத்து குப்பைதொட்டியில்
எச்சில் இலைக்காக காத்திருக்கும் நாய்
அதனுடன் சண்டையிடும் கதறல்கள்,
சூரியனின் வெப்ப சவுக்கடிகள்,
கண் எரிக்கும் காரத்துகள்கள்,
மூச்சு திருப்ப பயமுறுத்தும்
அவலப்பட்ட காற்றின் அச்சம்....

எதுவும் இல்லாத தனிமையில்
சற்றே உயர மலைக்குன்றின்
கைப்பிடியில் உலகம் ரம்மியமானது
மற்றவற்றை மலையைவிட்டு
இறங்கும்போது பார்த்துக் கொள்வோம்
அதுவரை என்னை மறந்திடுங்கள்!
                                                  
                                                   சாகம்பரி, மதுரை



You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: