18:49 | Author: அன்னைபூமி
சாலை கடக்கும்போது
எதிர்புற மரத்தடியில்
சாக்குப் பை விரிப்பின் மீது
நலிந்த தேகம்   
பையைப் போலவே
நைந்து நிறம் மாறி
நடுங்கி நீண்ட கை
பசிக்குரல்...!

கடிகார முட்கள்
துரத்த தயக்கத்துடன்
தாண்டிப் போனேன்
சற்று பொறுத்து
தெரு முனை
திரும்பும் முன்
இதயம் வலிக்க
அனிச்சையாய்
திரும்பிய கண்ணில்
யாரோ ஒருவர்
கையில் உணவுடன்
மரத்தடியில் நிற்க
சற்றே நிம்மதியுடன்
மூச்சு திருப்பினேன்.

    
கவிதை மட்டும் என்னுடையது. கவிதையின் கரு
உங்களுடையதாகக்கூட இருக்கலாம்.சாகம்பரி மதுரை
                                      -  
Category: |
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On March 19, 2011 at 7:08 PM , Pranavam Ravikumar said...

அருமை!

 
On March 19, 2011 at 7:15 PM , அன்னைபூமி said...

கருத்துரைக்கு நன்றி திரு.ரவிக்குமார்.

 
On March 20, 2011 at 4:56 PM , இராஜராஜேஸ்வரி said...

நிம்மதி.

 
On March 20, 2011 at 9:06 PM , அன்னைபூமி said...

//இராஜராஜேஸ்வரி said... நிம்மதி.//
கருத்துரைக்கு நன்றி