20:10 | Author: அன்னைபூமி

இவ்வளவு பெரிய
ஆத்து தண்ணில
எப்படி குதிக்கறது?
என்ன சிரிப்பு !
குட்டி ஆறு! குட்டி நான்!
இப்ப குளிச்சாதான்
பாதி உடம்பாவது
தண்ணில நனையும்.
மடை மாறிப்போச்சுனா...
உருண்டு புரளணும்
சிவப்பு சகதியில...!
குளிக்கலைனா....
புது சட்டை கிடையாது
எனக்கு பொறந்த நாள்
அதான்......
பொறந்த மாதியே நிக்கேன்
ரொம்ப பயமா இருக்கு
யாராச்சும் வந்தா
குதிச்சிடலாம்

அதோ அண்ணே வந்தாச்சு
இப்ப தண்ணில குதிக்கலாம்
போடலாம் குளியலை

 அண்ணனுக்கும்
சட்ட தருவாங்களா?





You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On April 8, 2011 at 8:49 PM , இராஜராஜேஸ்வரி said...

அற்புதக்குளியல்.அருமையான படங்கள்.பாராட்டுக்கள்.

 
On April 8, 2011 at 9:08 PM , அன்னைபூமி said...

கருத்துரைக்கு நன்றி

 
On April 13, 2011 at 7:55 AM , raji said...

அருமையான கற்பனை