22:04 | Author: அன்னைபூமி

கதிர்வீச்சு சீவாட் என்ற கணக்கில் அளக்கப்படுகின்றது. ஒரு சீவாட் என்பது 1000 மில்லி சீவாட் ஆகும். தொலைக்காட்ச்சி பார்ப்பது, எக்ஸ்ரே எடுத்துக்கொள்வது போன்றவை மூலம் கதிர்வீச்சுக்கள் நம்மை தாக்குகின்றன.

ஒரு சீவாட் கதிர்வீச்சு தாக்கம் ஏற்பட்டால் வாந்தி, மயக்கம் ஏற்ப்படும் ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லை. 5 சீவாட் கதிர்வீச்சு தாக்கம் என்றால் ஒரு மாதத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

நமது உடலில் உள்ள செல்கள் ஒவ்வொன்றும் பலவாக பிரிந்து அதிகரிக்கும் தன்மை கொண்டவை. குறிப்பிட்ட காலத்தில் அந்த செல்கள் தாங்களாக இறந்துவிடுகின்றன. ஆனால் கதிர்வீச்சு தாக்கம் ஏற்பட்டால் அந்த செல்கள் அழியும் தன்மை நீங்கி புற்று கட்டியாக மாறிவிடுகின்றன. ஆண்டு ஒன்றுக்கு 100மில்லி சீவாட் கதிர்வீச்சு தாக்கினால் புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.  
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: