19:17 | Author: Ravi

பட்டதெல்லாம் கஷ்டமாக
பாத்ததெல்லம் கானலாக
பாடாதி உலகத்துல
பகல்கூட இருட்டாக. . .

வல்லரசா ஆக்குறோமுன்னு
வரிஞ்சுகட்டி நிக்கிராக
குடிசையெல்லாம் கோபுரமாக்க
மல்லுகட்டி மருவுராக. . .

கூழக்குடிக்கும் சனங்களுக்கு
குடிசைகூட இங்கில்ல
வரிஞ்சுகட்டி நிப்பவரெல்லாம்
எதைத்தான் கோபுரமாக்க. . .

குலசாமி கோயிலுக்கு
குடும்பத்தோட புறப்பட்டு
ஒருநாள் கஞ்சிய காசாக்கி - ஏழைக
ஊருதாண்டி போராக. . .

சாப்பாடு கறிசமச்சு - சாமிக்கு
சந்தனமும் பொட்டுவச்சு
தருவாறு சந்தோசமுன்னு
தரிசனம் செஞ்சுவாறாக. . .

கண்தொறப்பார் சாமின்னு
காத்துக்குகிடக்கும் ஏழைக்கு
உடுத்திக்கிற கந்தைகூட
உருப்படியா ஒன்னும் இல்லை. . .

துக்கத்த மறைச்சுவைக்க
தூக்கங்கூடத் துணையில்ல
காக்கவேண்டிய கடவுள்மட்டும்
கலர்கலரா தெரியுறாரு. . .

தேடிவந்த ஏழைக்கெல்லாம்
சோறுபோட மறந்துபோய்
அவர்மட்டும் தினம்தினம்
அபிசேகத்தில் குளிக்கிறாரு . . .

எத்தனையோ ஜென்மமாக
ஏழைக்கு வாழ்வில்ல
கண்ணாமுச்சி உலகத்தில
கஷ்டம் மட்டும் சாகவில்ல. . .

என்னதான் நடந்தாலும்
எல்லாத்தையும் பாத்துகிட்டே
சாமிமட்டும் நிக்குதிங்க
ஒத்தையில கல்லாக. . .


இது ஒரு மீள் பதிவு...
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On April 27, 2011 at 7:52 PM , சாகம்பரி said...

காலம் மாறும் சகா. மழைக்கு வெள்ளம் , வெயிலுக்கு பஞ்சம் . எதுவானாலும் பாதிப்பு உணவு தொழில் செய்யும் கடவுளுக்குதான். வேதனை புரிகிறது.

 
On April 28, 2011 at 12:38 PM , இராஜராஜேஸ்வரி said...

காலமகள் கண்திறப்பாள்.காலம் ஒருநாள் மாறும். கவலைகள் யாவும் தீரும்..

 
On November 4, 2011 at 2:45 PM , Dhanalakshmi said...

//துக்கத்த மறைச்சுவைக்க
தூக்கங்கூடத் துணையில்ல
காக்கவேண்டிய கடவுள்மட்டும்
கலர்கலரா தெரியுறாரு. . .//

valimigundha varigal....

chandhan-lakshmi.blogspot.com

 
On November 10, 2022 at 11:22 AM , Home Generator San Bernardino said...

This is a greeat post