19:11 | Author: அன்னைபூமி
    கீதை பல நல்ல தத்துவங்களை சொல்கிறது. கீதோபதேசத்தின் முக்கிய சாரம் பெருபாலானோருக்குத் தெரியும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அருளியது. போர்களத்தில் அர்சுனனுக்கு உபதேசித்தது . ஏன் அர்சுனன்?

      பகவத் கீதைக்கு முந்தைய உபதேச நூல்கள் எல்லாம் வேத ரிஷிகள் தங்களுடைய சீடர்களுக்கு சொன்னதாக வரும். ஆனால் கீதை மட்டும்தான், ஒரு சத்திரியனுக்கு உபதேசிக்கப் பட்டது, சாமானியர்களுக்கும் நீதி சொன்ன நூல். இது சாமானியர்களை சென்றடைய வேண்டும் என்றால், உபதேசிக்கப்படுபவன் அதே ரகமாக இருக்க வேண்டும். அப்போதுதான், உலகத்தின் பார்வையை கொண்ட கேள்விகள் கிட்டும். மேலும் மேலும் கேள்விகள் கேட்பதானால் விரிவான, தெளிவான பதில்கள் கிட்டும்.

      தருமர் இது பற்றித் தெரிந்தவர், தெரிந்தவரிடம் கேள்வி எழாது. பீமன் செயல் வீரன் - கண்ணன் சொன்னதை செய்வான்,கேள்வி எழாது. நகுலன், சகாதேவன சகல் சாஸ்திரமும் தேர்ச்சி பெற்றவர்கள், சந்தேகமே எழாது. ஆனால், அர்சுனன், தன் செயல்களில் நம்பிக்கை வைத்திருப்பவன். அவன் மனம் ஒப்பினால்தான் செயலில் முழு மனதோடு இறங்குவான். நிறைய இடங்களில் தர்மர் அவனுக்கு விளக்கம் சொல்லியிருப்பார். எப்போதுமே கேள்வி கேட்டு பதில்களால் சமாதானம் ஆகிறவன். அதே சமயத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வத்தன்மையை உணர்ந்தவன் என்பதால், சரியான கேள்விகள் கேட்கப்படும். ஒரு மாணவன் எப்படியிருக்க வேண்டும் எனபதற்கு உதாரணமாக அர்சுனனை சொல்வார்கள். ஆசிரியரிடம் மரியாதையும், பாடத்தை புரிந்து கொள்வதில் தர்க்க ரீதியான அணுகுமுறையும் இருக்க வேண்டும்
. 
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 comments:

On May 3, 2011 at 12:21 PM , இராஜராஜேஸ்வரி said...

ஆசிரியரிடம் மரியாதையும், பாடத்தை புரிந்து கொள்வதில் தர்க்க ரீதியான அணுகுமுறையும் இருக்க வேண்டும். //
ஆழ்ந்த கருத்துக்கள்.பாராட்டுக்கள்.