17:50 | Author: அன்னைபூமி

ஓரவஞ்சனை
அதென்ன .........
பௌர்ணமி வானத்திற்கு
மட்டும் தங்க மேகங்கள் !


புதன் கிழமை பாசஞ்சர்
பயணிகள் இன்றி தனித்து
செல்கிறது ரயில் பூச்சி !


ஹவுஸ் ஓனருக்கே பிராப்ளம்
வாடகைக்கு  இடம் தேடி
வீட்டுடன் அலைகிறது நத்தை!

மின் தடை
இருட்டென்றால் பயமா
விளக்குடன் மின்மினி பூச்சி!


சுமைதாங்கி
பனித்துளியின் பாரத்தால்
வளைகிறது புல், மலர்கிறது பூ.

விருந்தாளி
இலையுடன் விருந்திற்கு
காத்திருக்கிறது வாழைமரம்


தியாகி

காலடி நிழலில் குளிர்ச்சி
தலையின் சூரியனின் சுட்டெரிப்பு
     - தவிப்பில் ஆலமரம்.

கள்ளாட்டம்
அலையின் கல்லா மண்ணா
ஆட்டத்தில் வென்றது கடல்.

வெட்கம்
காற்றின் கவிதை கேட்டு
தலைகுனிந்ததா பன்னீர் பூ.
                                          - சாகம்பரி,மதுரை


You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On May 23, 2011 at 9:57 PM , Bavan said...

//மின் தடை
இருட்டென்றால் பயமா
விளக்குடன் மின்மினி பூச்சி//

//விருந்தாளி
இலையுடன் விருந்திற்கு
காத்திருக்கிறது வாழைமரம்//


மிகவும் ரசித்தேன்..:-)

 
On May 27, 2011 at 6:06 AM , நீச்சல்காரன் said...

ஹவுஸ் ஓனருக்கே பிராப்ளம்

ரசிக்கவைத்தது