19:03 | Author: Ravi
 

     முடியாது என்று சொல்வது அவசியமா? தேவையான இடத்தில் தேவையான நேரத்தில் 'நோ' சொல்லத் தெரிய வேண்டும். பிடிக்காதவர்களிடம், பழக்கமில்லாதவர்களிடம் எளிதாக சொல்லக் கூடிய இந்த வார்த்தையை உறவினர், நண்பர் போன்றவர்களிடம் சொல்லமுடிவதில்லை. ஆனால் இந்த தடுமாற்றம்தான் பின்னர் பெரும் சிக்கலில் ஆழ்த்தும். எளிதில் வெளிவர முடியாத ஒரு சிக்காலான வலைக்குள் தெரிந்தே சிக்கிக் கொண்டு யாரிடம் மறுக்க முடியாமல் தவித்தோமோ அவர்களிடமே முரண்பாடாகி நிற்போம். இதுபோல சொல்லத் தெரிந்தவர்கள் சுயகட்டுப்பாடு உள்ளவர்களாகவும் ஆளுமைத் தன்மை மிக்கவர்களாகவும் இருப்பதாக மனோதத்துவம் சொல்கிறது. 

  பெரும்பாலும் முடியாது என்று சொல்ல முடியாமல் போனவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். சூழ்நிலை நம்மை சிக்கலில் கொண்டு சேர்க்கும் காரணிகளிடம் மறுப்பது மட்டுமே சிரமம். சரியான முறையில் மறுப்பு தெரிவித்துவிட்டோமென்றால், நம்முடைய கட்டுப்பாட்டுவிசை நம்மிடம்தான் உள்ளது என்று பொருள். முடியாது என்று மறுப்பதால், நம்முடைய எல்லைகளை புரிய வைக்கின்றோம். மற்றவர்களால் வெறுக்கப்பட்டவர்களாக மாட்டோம். சொல்லப் போனால் நம்முடைய எல்லைகளை வரையறுப்பதால் நம்மிடம் எளிதாக மற்றவர்களால் பழக முடியும். தவிர்க்கமுடியாமல் ஒப்புக் கொண்டுவிட்டு பிறகு துன்பப்பட்டு மற்றவர்களால்தான் இந்த நிலை என்று பழி போடுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். உனக்கென்று சுய சிந்தனை இல்லையா என்று கேட்பார்கள்.

மற்றவர்கள் மனம் நோகாமல் மறுப்பது எப்படி?
நேரிடையாக வார்த்தைகளால் 'முடியாது ' என்று கடினமாக சொல்ல முடியாவிடினும் " எனக்கு வேறு முக்கிய வேலை உள்ளது, தயவு செய்து புரிந்து கொள்", '"இப்போது என்னால் இயலாது. நாளை மறு நாள் முயற்சிக்கலாமா?" , " என்னுடைய நிலையில் இதெல்லாம் செய்ய முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்", "வேறு ஏதாவது மாற்று யோசனை சொல்லுங்கள்" போன்ற வார்த்தைகளை புன்சிரிப்புடன் சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். முடிந்தால் அடுத்த முறை உங்களால் செய்யக் கூடிய உதவிகளை செய்யுங்கள். நீங்கள் மறுப்பது குறிப்பிட்ட விசயத்தை மட்டும்தான் என்பதை உணர்த்துங்கள்.

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 comments:

On July 13, 2011 at 12:38 AM , kowsy said...

அற்புதமாகச் சொல்லியிருக்கின்றீர்கள். முடியாது என்று எவ்வகையிலும் வெளிப்படுத்தாதவர்கள் மனஅழுத்தத்திற்கு உள்ளாவார்கள்