05:20 | Author: Ravi














வானுலக தேவதைகள்

வாயிற்படி தெய்வங்கள்

வண்ண வண்ண

பட்டாம் பூச்சிகள்

வாசம் மாறா

மலர்கள். . .

விண்வெளிப் பெண்கள்

வீராங்கனைகள் என

பெண்மையின் பரிமாணங்கள்

ஆதிகாலம் தொட்டு

நிகழ்காலம் வரை

பக்குவமாய் கிளை

விரித்துவிட்டன. . .



நிலம் நீர்

ஆகாயம் என

இந்திய இயற்கைத்தாயின்

அத்துனை படைப்புகளிலும்

பெண்மையின் அடையாளம்தான். . .



இருந்தும் சிவமில்லாத

சக்திக்கு  இங்கே

சரீர மதிப்பு

மட்டுமே. . .



கணவனை இழந்துவிட்ட

கைம்பெண் மீது

எத்துனை சமூதாயச்

சாயங்கள். . .



இரண்டே வர்ணத்தைக் கொண்டுள்ள

மனித பிறப்பில்

அர்த்த நாதீஸ்வரரைத் தவிர

வேறு எவருக்குத் தான்

சமபார்வை.?

பெண்மையின் மேல். . . 
        
    மூன்றாம் கோணம் கவிதைப் போட்டியில் பங்குபெற்ற கவிதை 
                                                  
                                               ........பிரணவன்
 


You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.