23:19 | Author: பிரணவன்
தேசியக்கவி பாரதியின் படைப்புகளை அவ்வளவாக படித்து முடித்திடாதவன் என்ற மன அழுத்தம் எனக்குள் இருந்தாலும், இப்படைப்பின் மூலம் அவருடைய குருமார்கள் மற்றும் நன்பர்கள், அவர்களுக்கிடையேயான கருத்துப் பரிமாற்றம் பற்றி நான் அறியப்பட்டேன் என்பதில் மகிழ்ச்சிகொள்கின்றேன். இப்படைப்பை உங்களுடன் பகிர்ந்துகொள்வதிலும் நான் பெருமிதம் அடைகின்றேன்.

பாரதியின் குருமார்களும், நண்பர்களும். இந் நூலின் ஆசிரியர் ஆர்.சி.சம்பத், இந் நூலை பதிப்பு செய்தவர்கள் தாமரை பப்ளிகேஷன்(பி)லிட். சென்னை. மேலும் இவர் குருவியும் நாரியும், புண்ணியம் தேடி, சிறுவர்களுக்கு லெனின் போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார்.

பாரதியின் ஆன்மீக குருமார் நிவேதிதை தேவி, இவர் சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை ஆவார். இவர்களுக்கு இடையிலான முதல் அறிமுகம், நிவேதிதை அறிமுகத்திற்கு பிறகு பெண் அடிமைத்தனத்தை அறவே அழிக்க பாரதியார் எழுதிய கவிதைகள் அதன் காரணங்கள், நிவேதிதை பற்றிய பாரதியாரின் கவிதை, போன்றவற்றை மேற்கோள் காட்டியுள்ளார் ஆசிரியர்.

குள்ளச்சாமி பாரதியாரின் ஞான குரு, இவரைப் பற்றி பாரதியார் தனது  படைப்புகளான சும்மா, சிதம்பரம், கோபந்தா போன்றவற்றில் எழுதியுள்ளார்,
பாரதிக்கும், குள்ளச்சாமிக்கும் இடையேயான குருத்துப்பரிமாற்றம், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட நெருக்கமான நட்பு போன்றவற்றை எழுதியுள்ளார் ஆசிரியர்.

கோவிந்தசாமி பாரதியாரின் ஞானகுருக்களில் மிகவும் முக்கியமானவர், பாரதியாருக்கு தன் உடல் நலக்குறைவால் ஏற்பட்ட மரண பயத்தை நீக்கியவர்.

யாழ்பாணத்துச்சாமி இவரும் பாரதியாரின் ஞானகுருக்களில் ஒருவர்.

பாரதியாரின் அரசியல் குரு பாலகங்காதர திலகர், இவர்களுக்கு இடையேயான அறிமுகம், நடந்த விசயங்கள் போன்றவற்றை அழகாய் சொல்லியிருக்கின்றார் இப்பதிப்பில் ஆசிரியர்.

மேலும் இவரது நண்பர்கள் 29 பேர் பற்றியும் இந் நூலில் குறிப்பிட்டுள்ளார், இதன் மூலம் பாரதியின் வாழ்க்கையில் குருமார்களும், நண்பர்களும் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கின்றார்கள் என்பது நமக்கு விளங்கும்.

இப்பதிப்பை எழுத காரணமாய் அமைந்த சாகம்பரி அம்மா அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: