23:47 | Author: பிரணவன்
வறட்சி மாவட்டங்கள் என முற்காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ் நாட்டின் தென்மாவட்டங்களில் வளர்க்கப்பட்ட மரம் தான் கருவேல மரம், பெரும்பாலும் கரி மற்றும் விறகு எரிபொருளுக்காக இந்த மரம் வளர்க்கப்பட்டது,. வறட்சி காலங்களில் மக்களின் வருவாய்க்காக இந்த மரங்கள் வளர்க்கப்பட்டது. இன்று தமிழகத்தின் வறட்சிக்கு இதுவே முக்கிய காரணம் ஆகிவிட்டது. ஏனெனில் இம் மரத்தின் தன்மை அப்படி இதன் வேர்கள் மண்ணின் ஆழம் வரை சென்று அங்கு இருக்கும் நீரை உறிஞ்சும் தன்மை கொண்டவை, இதன் அருகில் எந்த வித சிறு செடியையும் வளரவிடாது, முக்கியமாக இதை வேரோடு பிடுங்கினால் மட்டுமே அழிக்க முடியும், ஆனால் அது அவ்வளவு எளிதல்ல, இதன் வேர்கள் அதிக ஆழம் வரை செல்லக்கூடியவை.

                                                 ஆனால் கருவேலம் ஒரு மரம், இப்ப விஷயத்திற்கு வருவோம், அடக்கவிலை 40 பைசாவிற்கும் குறைவாக தயாரிக்கப்பட்டு 2ரூபாய் முதல் 4ரூபாய் வரை விற்கப்படும் தண்ணீர் பைகள். மற்றும் 13 ரூபாயை தாண்டிய ஒரு லிட்டர் தண்ணீர் புட்டிகள், இதற்கு காரணம் எல்லாம் பொருளாதாரமயமாக்கப்பட்ட பின், தண்ணீரும் விற்பனைக்கு வந்துவிட்டது.
                           
                            இதுவும் விஷயம் அல்ல, இவைகள் எங்கு தயாரிக்கப்படுகின்றன. அதிக நீர்வளமிக்க இடங்களில் 500 முதல் 1500அடிக்கு மேல் ஆழ்துளை கிணறு உருவாக்கப்பட்டு அங்கு இந்த தண்ணீர் புட்டிகள் ( நிரப்பப்படுகின்றன) தயாரிக்கப்படுகின்றன. இந் நிலப்பரப்பைச் சுற்றி இருப்பது விவசாய நிலங்கள். இங்கே உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க நிலத்தடி நீர் குறைந்து கொண்டே செல்கின்றது, பின் விவசாய நிலங்கலும், வறட்சி நிலமாகின்றன.

                                  கருவேல மரத்தை பற்றி ஏன் நான் முதலில் சொன்னேன்னு தெரியுதா, சொல்றேன், அவைகளாவது தனக்கு தேவையான அளவு தண்ணீரை மட்டும் எடுத்துக்கொண்டு மீதம் இருக்கும் தண்ணீரை மற்ற தாவரங்களுக்கு விட்டுவிடுகின்றன. இதன் செயல்முறைகள் இயற்கையின் வசம் இருகின்றன. ஆனால் மனிதால் உருவாக்கப்பட்ட தாண்ணீர் புட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள், எந்த நிலையிலும் தன்நிறைவு அடைவதில்லை. முடிவில் அந் நிலம் வறட்சியாகின்றது.

                                   நாம் குடிக்கும் தண்ணீருக்கு நாமே பணம் கொடுக்கின்றோம். நாமே நம் நிலத்தையும் வறண்ட பூமியாக்குகின்றோம். இந்த நாசகார வேலையை பல வெளி நாட்டு நிருவணங்கள் நம் நாட்டிலையே துணிச்சலாக செய்கின்றன. இவர்கள் போதாது என்று நம்மவர்கள் வேறு இந்த தொழிலை செய்கின்றனர். நம் தலையில் நாமே மண்னை வாரி போட்டுக்கொள்கின்றோம்.

                       தற்போதைய வாழ்விற்காக நம் எதிர்காலத்தை இருள் அடித்துக்கொண்டிருக்கின்றோம், இம்மாதிரியான உற்பத்தி ஆலைகள் வளமிக்க கிராமபுறங்களில் ஆரம்பிக்கப்பட்டு வருகிறன. மாறாக கடல் பகுதியை சுற்றியுள்ள நில பரப்புகளில் மட்டும் இம்மாதிரியான தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டால் நல்லது. . . 
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On September 26, 2011 at 11:41 PM , பிரணவன் said...

நன்றி சகா. . .

 
On October 2, 2011 at 12:04 PM , இராஜராஜேஸ்வரி said...

விழிப்புணர்வு செய்திகள் தாங்கிய எச்சரிக்கைப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்!