18:37 | Author: அன்னைபூமி

  
 அழுக்கு நிறத்தில்
நாய் குட்டி ஒன்று
வாலை ஆட்டி நிற்க
பிய்த்து போடப்பட்ட
பெட்டிக் கடை
ரொட்டித் துண்டை
எடுப்பதற்குள்
கொட்டி தீர்த்தது மழை!
என் விருப்பமில்லாமல்
தவறவிட்ட எனக்கான
சந்தர்ப்பங்களை போல
அவை கரைந்து ஓட....
 கையாலாகாத கோபத்துடன்
 நாய்குட்டியும் நானும் !  


                          - சாகம்பரி, மதுரை 

                                   

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On February 18, 2011 at 7:35 PM , கவிதை வீதி... // சௌந்தர் // said...

வாவ்.. அருமை..
வாழ்த்துகளும் மற்றும் வாக்குகளும்

 
On February 18, 2011 at 7:56 PM , அன்னைபூமி said...

கருத்துரையிட்டதற்கு திரு கவிதை வீதி சௌந்தர் அவர்களுக்குமிக்க நன்றி

 
On February 18, 2011 at 8:19 PM , அன்புடன் நான் said...

நல்லாயிருக்குங்க.... பாராட்டுக்கள்.

Word verification இத எடுத்துவிடுங்க....கருத்துரைக்க மிக சிரமமா இருக்குங்க

 
On February 18, 2011 at 8:35 PM , அன்னைபூமி said...

திரு.கருணாகரசு அவர்களுக்கு word veirfication - disable செய்துவிட்டேன். கருத்துரையிட்டதற்கு மிக்க நன்றி