13:28 | Author: Ravi
மருத்துவமனையின் நாற்காலிகள்
அழுகையையோ சிரிப்பையோ
தன்னுள் ஒளித்து வைத்திருக்கும்!
காத்திருக்கும் அவதிகளை…
பயணிகளின் இருக்கைகளும்
பாடங்களை பள்ளிக்கூட
இருக்கைகளும் பதிந்திருக்கும்
மயானத்து இருக்கைகள்
பழைய கதைகளை சொல்லும்
வாசலோரத்து இருக்கைகள்
வந்துபோன கதையினை சொல்லும்.
அழுகையோ அவதியோ
பாடமோ பழையகதையோ
இவை அத்தனையும் பதித்து
காத்திருத்தல்களின் சாயல்களை
ரகசியமாக மறைத்திருக்கும்
பூங்காவின் தனித்த இருக்கைகள்
Category: |
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: