18:38 | Author: sagampari
ஒரு நோயாளி வியாதியின் கொடுமையினால் அவதியுறுகிறான்....
நான் ஒரு மருத்துவர் எனில் அவனின் துன்பம் என்னை பாதிக்காது. மாறாக அதனை நீக்கும் வழிமுறைகளை சிந்திப்பேன். இது வெறும் எண்ணம் மட்டும்தான். இது மூளையின் செயலாக்கம்.

நான் அந்த நோயாளியின் அன்புமிக்க உறவினர் எனில் அந்த துன்பத்தையும் உணர்வேன். அது விரைவில் நீங்க வேண்டும் என்று நினைப்பேன். இது போன்ற சூழ்நிலை உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம் அந்த சமயத்தை நினைவு கூருங்கள். உங்களுடைய எண்ணம் அல்லது வேண்டுதல் உங்கள் உள்ளிருந்து ( உணர முடியும். அதுதான் வலிமை மிக்க எண்ணம். இது கண்டிப்பாக வெற்றிபெறும். உள்ளிருந்து வருதல் என்பது பிராண சக்தியை சேர்ப்பது எனலாம். எண்ணங்களுடன் பிராண சக்தி சேரும்போது மனோசக்தி உருவாகிறது.

முன்பெல்லாம் பெரியவர்கள் சொல்வார்கள், ஒரு விசயத்தை எண்ணி பொறாமையுடன் பெருமூச்சு விடாதே என்பார்கள். ஏனெனில் அது செயல்த்துவம் உள்ள சக்தி. அழிக்கக்கூடிய தன்மை உடையது. பிராண சக்தி என்றால் என்ன? எப்படி எண்ணங்களுடன் பிராண சக்தியை சேர்ப்பது?

பிராண சக்தி நம்மை சுற்றியிருக்கிறது. பிராணவாயு எனப்படும் ஆக்ஸிஜனை உட்கிரகிப்பதால் இது கிட்டும். இப்போது புரிந்திருக்குமே! . சரியான அளவில் உட்கிரகிக்கப்படும் பிராணவாயு தன்னுடைய அதீத சக்தியை பல்வேறு வடிவங்களில் உடலுக்குத் தருகிறது. இரத்த ஓட்டத்தை தூண்டுவதன் மூலம் காந்த சக்தியை அதிகரிக்கிறது. சிலருக்கு மூளையின் செல்களைத் தூண்டிவிட்டு தெளிவான சிந்தனைகளை தருகிறது . சிலருக்கு இரத்த ஓட்டத்தை தூண்டிவிட்டு அதீத செயல்களை செய்யவைக்கிறது.

சில விசயங்களை நினைத்து பார்க்கலாமா?
1. தியானம் செய்யும்போது சுத்தமான இடம் இருக்க வேண்டும். ஒரு விளக்கு எரிந்து கொண்டிருப்பது நல்லது. இதெல்லாம் பிராண வாயுவின் இருப்பை உறுதிபடுத்தும் விசயங்கள்.

2. காலையில் மூச்சுப்பயிற்சி செய்வது நல்லது என்பார்கள். அப்போது கரியமில வாயு குறைவாக இருக்கும். அதிக அளவில் பிராணவாயுவை உட்கொள்ள முடியும்.

3. மனம் தெளிவடைய மலைக்குப் போ அல்லது கடற்கரைக்கு செல் என்பார்கள். இங்கெல்லாம் தூய்மையான காற்று பிராணவாயு செரிவுடன் இருக்கும்.

இவையெல்லாம் பிராண சக்தி பற்றிய ரகசியத்தை சொல்கின்றன அல்லாவா? இயற்கையிலிருந்து உருவான மனிதனுக்கு இயற்கை வழங்கும் அதீத ஆற்றல் இது. இது பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாமா?
Category: | Leave a comment
20:39 | Author: சாகம்பரி
மனோ சக்தி...!.  இது ஐந்தாம் பரிமாணம் தொடரின் அடுத்த பகுதிதான். ஆழ்மனசக்தி எனப்படும் இதனை பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. நிறைய பதிவுகள் உள்ளன.  அறிவியல் பூர்வமாக நிருபிக்க முடியாத பல சம்பவங்களுக்கு பின்னணியாக இந்த மனோசக்தியை சொல்வதுண்டு. ஏனெனில் அறிவியல் என்பது ஐம்புலன்களால் உணரப்பட்டவற்றிற்கு மட்டுமே விளக்கம் தருகிறது. அனைத்திற்கும் விளக்கம் தரக்கூடிய அறிவியலை நாம் இன்னும் அறியவில்லை என்பதே உண்மை.

இயற்பியல் கோட்பாட்டின்படி ஆற்றலின் ஆதாரமாக ஒரு பருப்பொருள் (physical sysytem) அவசியம் தேவைப்படுகிறது. (energy is the ability a physical system has to do work on other physical systems). உதாரணமாக, கிரிக்கெட் விளையாட்டை பார்க்கலாம். மட்டையின் மோதும் வேகத்தில்தான் பந்து செல்லும் தூரம் நிர்ணயிக்கப்படுகிறது. மட்டையும் பந்தும் மோதும் வேகம்தான் சக்தியின் அடிப்படை. கிரிக்கெட் மட்டைக்கு எப்படி சக்தி கிட்டுகிறது? அதனை வீசும் வீரனின் செயல்பாடுதான் மட்டைக்கு சக்தியை தருகிறது. வீரன்---> மட்டை, மட்டை-->பந்து என சக்தி மாற்றப்படுகிறது. இதனை நாம் ஐம்புலன்களால் உணரவும் முடிகிறது. எனவே பந்து செல்ல வேண்டிய இலக்கு, தொலைவு, மட்டையின் வேகம், அதற்காக செலுத்த வேண்டிய சக்தி என கணக்கிட்டு வேலை செய்ய முடிகிறது. போதுமான பயிற்சியையும் எடுக்க முடிகிறது. இது எதுவுமே இல்லாமல், எந்த இயற்பியல் விசையும் இன்றி வெறும் எண்ணங்களின் உதவியுடன் ஒரு பருப்பொருளை கையாள முடியுமா? வலிவு மிக்க எண்ணங்கள் ஒரு இயற்பியல் சக்தியாக மாறி செயல்படுகின்றன என்பதை நம்ப முடிகிறதா?  முடியும் என்பதே மனோசக்தியின் ரகசியம்.


மனோசக்தியின் உதவியுடன் நோய்களை குணப்படுத்துவது, ஒருவரின் மனதில் உள்ள விசயங்களை அறிவது, நம்முடைய எண்ணங்களை மானசீகமாக பரிமாறிக் கொள்வது, வேறு ஒரு இடத்தில் நடப்பதை உணர்ந்து சொல்வது, ஒரு பொருளை நகர்த்துவது போன்ற அதீத செயல்பாடுகளை பற்றி நிறைய செய்திகள் உள்ளன. நாம் எளிமையான சில விசயங்களை உணர முயற்சிக்கலாம்.

நிறைய சந்தர்ப்பங்களில் நாம் உணர்ந்திருப்போம். ஒரு விசயத்தை நினைத்துக் கொண்டிருப்போம் அது நடந்துவிடும். வெளியூரில் இருக்கும் மகனுடன் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே அவனிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்துவிடும்.

நல்லதோ... கெட்டதோ... எதையாவது நினைத்துக் கொண்டிருப்போம் அது நடந்தேவிடும். நான் சொன்னதுபோலவே நடந்தது பார்த்தாயா என்று சொல்லிக் கொள்வோம். ஆனால் எல்லா சூழ்நிலைகளிலும் அப்படி நடைபெறுவது இல்லை. ஏன்?

சிலருக்கு... சில நேரங்களில்... சில விசயங்களில்... மட்டும் மனோ சக்தி செயல்படுகிறது. எப்போதுமே என்ற உறுதித்தன்மை இல்லாததால்  கேள்விக்குறியாகிவிட்டது. ஏனெனில் அறிவியல் அடிப்படையில் சில நிகழ்வுகளை நிருபிக்க எப்போதும் ஒப்புக் கொள்ளக் கூடிய உண்மையாக இருக்க வேண்டும்.

ஏன் இந்த குளறுபடி? மனோசக்தியை கையாள எண்ணங்கள் வலிமையாக இருக்கவேண்டும். உ-ம், நமக்கு உடல் நலம் சரியாக வேண்டும் என்ற சிந்தனை மற்றவர்களுக்காக நினைப்பதைவிட வலிவு மிக்கதாக இருக்கும்.  உளவியல் ஒப்புக் கொள்ளும் ஒரு வார்த்தை mind power.  இதுதான் மனோசக்தி எனப்படுகிறது.  எண்ணங்கள் அல்லது சிந்தனைகள் இவற்றின் பிறப்பிடம் மூளை என்கிறது அறிவியல். சரி அது எப்போது வலிமை மிக்கதாக மாறும்? அத்துடன் ஆத்ம சக்தி எனப்படும் பிராண சக்தியும் சேரும்போதுதான். ஒரு உதாரணம் பார்ப்போமா? ப்ராண சக்தி பற்றி விரிவாக அடுத்த பதிவில் தொடர்கிறேன்...