21:42 |

தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் யெய்தி - கொடுங்
கூற்றுக்கிரை எனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போல நானும் - இங்கு
வீழ்வேன் என்று நினைத்தாயோ?



                                                                                       
  அச்சம் தவிர்
  ஆண்மை தவறேல்
  ஏறுபோல் நட 
  கொடுமையை எதிர்த்து நில்
 லௌகிகம் ஆற்று

 ரௌத்திரம் பழகு
 தோல்வியில் கலங்கேல் 
 தூற்றுதல் ஒழி
"தெய்வம் நீ என்று உணர்"..............
 

- மகாகவி சுப்பிரமணிய பாரதி.


Category: |