11:14 | Author: சாகம்பரி
மேற்குத் தொடர்ச்சி மலையில் கிட்டிய கடல்வாழ் உயிரினங்களின் படிமம்....
நாயினார் தீவில் கிட்டிய தமிழ் கலந்த நாகர் மொழியுருக்கள்.....
இன்னும் வரலாற்றின் மூடப்பட்ட பக்கங்களை புரட்ட புரட்ட பல விசயங்கள் கிட்டுகின்றன. ஒரு பெரும் நிலப்பரப்பும்
தில் வாழ்ந்த மாந்தரில் பெரும்பான்மையானோரும் அழிக்கப்பட்ட செய்திகளை தெரிவிக்கின்றன. புலம் பெயர்ந்து சென்ற மக்களின் மனக்கிலேசங்கள் செவிவழிச் செய்திகளாகவும் கதைசொல்லிகளின் மூலம் கதைகளாகவும் கிட்டுகின்றன. வெவ்வேறு மொழிகளில் சொல்லப்படும் கண்ணகியின் கதையும்,  'எழு கடல் எழு மலை தாண்டி ராஜாவின் உயிர்  இருக்கிறது' என்ற பாட்டி கதைகள்கூட ஊணை காப்பாற்ற உயிரை பிரிந்து வந்த மண்ணின் மைந்தர்களின் ஏக்கமாகவே காட்சியளிக்கின்றன. எழு கடல் என்றால் பொங்கியெழுந்த கடல் என்றும் எழுமலை என்றால் எரிமலையையும் குறிக்கிறது என்பது மெய்யா? எரிமலை சீற்றம் கண்ட கடல் கொண்ட என் நாடு எங்கேயோ இருக்கிறது என்பதை குறித்த வாக்கியம் என்பதும் பொருந்தி வருகிறதே. தொல்லியல்,மரபியல்,கடலியல் சார்ந்த ஆய்வுகள் நடத்திதான் உண்மையை வெளிக்கொணர முடியும். அதுவரை நம் தொலைந்து போன பெருமைகளை மறந்து இருக்க வேண்டும். 

இப்போது நாம் இந்த தொடரின் தலைப்பிற்கு வந்தாக வேண்டும்.....

மனோ சக்தி பற்றி அறியும் முன், மனம் என்பதன் விளக்கம் வேண்டும். சூட்சும உடல்... ஸ்தூல உடல்....  ரொம்பவும் ஆன்மீக விளக்கமாக போய்விடும் என்பதால் இந்த இடத்திற்கு ஒப்புதலாக உயிர் எனப்படும் ஆன்மாவையே மனம் என்று கொள்கிறேன். உடல், உயிர் இரண்டும் சேர்ந்ததுதான் நாம். இவை இரண்டையும் இணைக்கின்ற வித்தை நம்மிடம் இல்லை -அதாவது சாதாரண மனிதர்களிடம் இல்லை. உடலுக்கு காலத்தின் கட்டுப்பாடு உண்டு. உயிருக்கு கிடையாது. உடலுக்கு சக்தி குறைவு, வேகமும் குறைவு ஆனால் உயிருக்கு சக்தியும் வேகமும் அதிகம். எனவே உடலில் இருந்து உயிர் விலகியும் சேர்ந்தும் இருக்கும் வித்தை தெரிந்து கொண்டால் நான் சித்தனாகிவிடுவேன் - அதாவது நான்காவது பரிமாணத்தை கடந்துவிடுவேன். எங்கெல்லாம் நான்காவது பரிமாணத்தின் கட்டுப்பாடு இல்லையோ அங்கெல்லாம் நரை,திரை,மூப்பு,பிறப்பு,இறப்பு கிடையாது. உடலில் இருந்து விடுபட்டுவிடுவதால் ஐந்தாம் பரிமாணத்தில் செயலாற்ற முடியும் - மனோவேகம், நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் பிரசன்னமாகலாம்.

( மரணத்திற்குப் பின் மனிதர்கள் அதிவேகமாக இருக்கும் வேறு பரிமாணத்தை அடைந்துவிடுவதாகவும் அவர்கள் நம்முடனும் இருக்கிறார்கள் என்றும் சித்தர் பாடல் ஒன்று கூறுகிறது.  கரியபவளம் என்ற மூலிகையை விளக்கெண்ணெயில் குழைத்து புருவத்தில் தடவிக் கொண்டால் நம்மை சுற்றி இருக்கும் மற்றோரு பரிமாணமும் அங்கே இருப்பவர்களும் தெரிவார்கள் என்றும் அந்த பாடல் மேலும் கூறுகிறது. பரிட்சித்து பார்க்கும் மனதைரியம் எனக்கில்லை. யாராவது முயற்சித்தால் சொல்லுங்கள்.)

இதெல்லாம் ஆன்மீகக் கட்டுக்கதைகள் என்று தோன்றுகிறதல்லாவா? நான் முதலிலேயே குறிப்பிட்ட worm hole theory இன்ன பிற வார்த்தைகளில்... இதனைத்தான் சொல்கிறது -. பிரபஞ்சத்தில் ஆங்காங்கே புழுத்துளைகள் எனப்படும் மர்மமான துளைகள் உள்ளன. அவற்றின் வழியே பயணிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் அதி தொலைவில் உள்ள இடத்தைக்கூட நொடிகளில் அடையமுடியும். அப்படித்தான் பிரசித்தி பெற்ற 'வாவ்' சிக்னலும் 72நொடிகள் மட்டும் கிட்டியது என்று ஒரு முடிவிற்கு வந்துள்ளனர். இதனை நிருபிப்பதற்காக வார்ம்ஹோல்களை தேடிவருகின்றனர். பிரச்சினை என்னவென்றால் வாவ் சிக்னலை எழுப்பிவிட்டு நொடிகளில் மறைந்துபோன அந்த 'யாரோ' ஒருவருக்கு வார்ம் ஹோலில் பயணம் செய்வதற்கான நுட்பங்களும், அதிவிரைவு பயணத்தை எதிர்கொள்வதற்கான தகுதிகளும், சக்தியும் இருந்தன, அது நம்மிடம் இல்லை. .... அப்படியென்று சொல்லுகிறார்கள்.


உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதுதான் எனக்கும் தோன்றுகிறது. சித்தர்கள்.... முக்காலம் கடந்த தன்மை.... வான்வெளி சஞ்சாரம்.... ஆழ்மன சக்தி....  இதெல்லாம் மிகுந்த செலவு செய்து ஒரு நாள் புதிதாக கண்டுபிடித்த அறிவியல் கோட்பாட்டின்படி சிக்கலான கணித சமன்பாடுகள் கொண்டு நிருபிப்பார்கள். நம்மில் சிலர் அப்போதும் "இதெல்லாம் நாங்க அப்போதே சொன்னோம்" என்றும் பதிவுகள் போடலாம். அதுவரை கேள்வியும் தேடலும் நம் விருப்பத்திற்கே இருக்கட்டும். அறிவியல் தேடலாகவோ இல்லை ஆன்மீகத் தேடலாகவோ இருக்கட்டும்.

என்னுடைய பதிவும் வான்வெளி சஞ்சாரத்தில் நீண்ட நாட்கள் டிஜிட்டல் அலைகளாக பயணிக்க வாய்ப்பு இருப்பதால்...எதிர்காலத் தேவை கருதி இன்னும் சற்று கூடுதலாக பதிவிடுகிறேன். இதற்கு அறிவியல் விளக்கமெல்லாம் தற்சமயம் இல்லை. அடுத்த பதிவிற்கு கதை கேட்கும் மன நிலையில் இருப்பவர்கள் வரலாம்.

அடுத்த பகுதியில் ஏழாம் அறிவான மரபியல் நினைவுகளும், ஐந்தாம் அறிவான மனோசக்தியும் பற்றிய சில விசயங்களை -(பழங்கதைகள்) பேசலாம்.



முந்தைய பதிவுகள்
முதல்பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/2.html
இரண்டாம் பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/1.html
மூன்றாம் பாகம் : http://annaiboomi.blogspot.com/2011/11/3.html
நான்காம் பாகம். http://annaiboomi.blogspot.com/2011/11/4.html
5ம் பாகம்:   பழந்தமிழ் மண்ணின் வரலாறும் இணைந்தது.
6ம் பாகம்    
பழந்தமிழ் மண்ணின் வரலாறும் இணைந்தது.
7ம் பாகம்     பழந்தமிழ் மண்ணின் வரலாறும் இணைந்தது.

22:09 | Author: சாகம்பரி
Thanks to wiki resource- Kumari continent
தமிழ் பழங்குடியின் வாழ்க்கை முறைகளுக்கான ஆதாரம் கற்காலத்திலிருந்து சட்டென்று இரும்பு காலத்திற்கு வந்துவிட்டதை குறிப்பிடுகின்றன. இடைப்பட்ட இரண்டு உலோக காலங்களுக்கான தொல்லியல் சான்றுகள் கிட்டவில்லை. இவை சிந்து-சமவெளி நாகரிகத்தில் கிட்டியுள்ளன. இடையில் என்ன நடந்தது...?

அதாவது செப்பு காலம், வெண்கல காலம் ஆகியவற்றிற்கான தொல்லியல் சான்றுகள் தமிழ் மண்ணில் கிட்டவில்லை. இலக்கியத்திலிருந்த ஒரு விடை கிட்டுகிறது. ஆரம்ப கால தமிழ் இலக்கியங்களில் ஒரு பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. குமரி கண்டம் என்பதுதான் அது. அப்படி ஒரு நிலப்பரப்பு இருந்ததாக தெரியவில்லை. இலக்கியங்கள் அதனை அழகான விவரித்திருந்தன. அது ஏழு பனை நாடுகள் கொண்டது. அங்கு வசித்தவர் குமரி மாந்தர். இரண்டு பெரிய மலைத்தொடர்களுக்கு இடையே உருவாகியயிருந்த பரந்த நிலப்பரப்பு. குமரி கண்டத்தின் மக்கள் நாகரிகமாக இருப்பிடங்கள் உருவாக்கி வாழ்ந்திருந்தனர். முதலிரண்டு கடற்கோள்கள் நிலநடுக்கம், எரிமலை ஆகியவற்றை உருவாக்கி குமரி கண்டத்தை கடலுக்கடியில் கொண்டு சென்றது என்று கூறப்படுகிறது. இதற்கான புவியியல் ஆதாரம் : http://news.bbc.co.uk/2/hi/science/nature/353277.stm 1990ல் கண்டுபிடிக்கப்பட்டது.

குமரி கண்டம் எனப்படும் பரந்த நிலப்பகுதி தற்போதைய குமரி முனையுடன் இருந்தது என்று கூறப்படுகிறது. இது பற்றி தமிழறிஞர் தேவ நேய பாவாணர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலப்பரப்பு ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவை இணைத்து பரவியிருந்தது. அந்த சமயத்தில் இலங்கை இதனுள்தான் இருந்தது.

மிகப்பெரிய அளவில் நான்கு கடற்கோள்கள்  ஏற்பட்டன. அவைதான் குமரி கண்டத்தின் அழிவிற்கு காரணமானவை என்றும் கூறப்படுகிறது. 2,00,000 ஆண்டுகளுக்கு முன் இருந்த குமரி கண்டத்தின் அழிவு 50,000 ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கடைசியாக ஏற்பட்ட கடற்கோள்தான் காவிரிபூம்பட்டினம் எனப்படும் பூம்புகாரை கடல் கொண்டதாக கூறப்படுகிறது. இது 17,000 வருடங்களுக்கு முன் நடந்ததாக குறிப்புகள் கூறுகின்றன. 1980ல் நடத்தப்பட்ட கடல் ஆய்வுகள் தற்போதைய காவிரிபூம்பட்டினத்தின் கடற்பகுதியில் 75 கி.மீ தொலைவில் கடலுக்கடியில் புதையுண்டிருக்கும் நகரத்தை கண்டுபிடித்துள்ளனர்.

அந்த சமயத்தில், பெரிய பூகம்பங்கள் ஏற்பட்டன. எரிமலை வெடித்தது. கடற்கோள் ஏற்பட்டது. இதன் விளைவாக பரந்த நிலப்பரப்பான குமரி கண்டம் கடலுக்கடியில் சென்றது. ஏராளமானோர் மாண்டனர். இவை வரலாற்று குறிப்புகள். இந்த காலகட்டத்தில் மானசீகமாக பயணித்தால் சில கேள்விகள் எழுகின்றன.

அதிரம்பாக்கம் தொல்லியல் சொல்வது, 15,00,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழுக்களாக வாழும் நாகரிகமான காலகட்டத்தில் தமிழன் வாழ்ந்திருக்கிறான். உலகம் முழுவதும் சரியான தட்பவெப்பம் நிலவாத அந்த காலகட்டத்தில் இங்கே குளிர்ச்சியான பசுமையான தட்பவெப்பம் நிலவியதை உணர முடிகிறது. அதற்கான விலங்கியல் படிமங்கள் கிட்டியுள்ளன. இயற்கையுடன் ஒன்றிய வாழ்வு வாழ்ந்திருக்கிறான்.

கிருஷ்ணகிரி மலைப்பகுதியில்  தொல்லியல் சான்றுகளாக கிட்டியவை 50,000 வருடங்களுக்கு முன் அங்கு வாழ்ந்த மக்கள் பெருங்கற்காலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றன. கல்லை பயன்படுத்
தி ஏர்கலப்பை, போர் ஆயுதங்கள், போன்றவையும் இரும்புகாலத்தின் சான்றாக செங்கற்களால் கட்டப்பட்ட இரும்பு உருக்கும் தொழிற்கூடங்களும் கண்டுபிடிக்கப்படுள்ளன. (இங்கேயும் 50,000 ஆண்டுகள் பழமையான் கற்கால சான்றுகளுக்குப் பிறகு 3000 ஆண்டுகள் பழமையான இரும்புகாலத்திற்கான சான்றுகள் கிட்டுகின்றன.
     
Indus-valley civilization

17,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் மண்ணை, பூகம்பம், எரிமலை, கடற்கோள்கள் என்று இயற்கையின் அழிவு சக்திகள் புரட்டி போட்டிருக்கின்றன. இது போன்ற இயற்கை அழிவுகளை விலங்குகள் முன்கூட்டியே கண்டுகொள்ளத்தக்கவை. இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை வாழ்ந்த மனிதனுக்கும் இந்த சக்தி இருந்திருக்கும் அல்லவா? அப்படியெனில் அழிவு வரப்ப்போவதை உணர்ந்து புலம் பெயர்ந்திருக்கலாமே. சரி அப்படி புலம் பெயர்ந்தால் அவன்னுடைய பாதையை எது வரையறுத்து இருக்கும். இயற்கை வரையறுத்த எல்லைகள்தான் அவர்களுடைய பயணப்பாதையாக இருக்கும். அந்த பயணப்பாதை மேற்குத் தொடர்ச்சி மலையின் வழியாக சென்றது எனில், அதன் முடிவு சிந்து சமவெளியை அடைகிறது. சிந்து நதியின் கரையோரத்தில் இருக்கும் சமவெளி இது இன்றைய ஆப்கானிஸ்தானையும் உள்ளடக்கியது.
      

இந்த கூற்றுக்கு ஆதாரமாக சொல்லப்படுபவை, அங்கு கிட்டிய பசுபதி, ஒற்றை கொம்புடைய நீர்யானையின் வடிவங்களும். இதனை யூனிகார்ன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதிரம்பாக்கம் தொல்லியல் பகுதியில் நீர்யானையின் படிமம் கிட்டியுள்ளது.   ஈரமான நிலப்பகுதியில் மட்டுமே நீர் யானை வசிக்கும். காப்புரிமை சம்பந்தபட்டதால் இங்கே அந்த படத்தை பிரசுரிக்க முடியவில்லை. வாலை பார்க்கும்போது அது குதிரை இல்லை என்று தெரியும்.


சில இடங்களின் பெயர்களும் தமிழ் பெயர்களாக காவ்ரி,பெருனை போன்ற வார்த்தைகள் பிராமி எழுத்து வடிவில் கிட்டியுள்ளன. மீண்டும் தெற்குப்பக்கம் குடியேற்றம் கிமு.3000லிருந்து -இரும்புகாலத்தில் இருந்து ஆரம்பித்து இருக்கலாம் என்று கொள்ளப்படுகிறது. தொல்லியல் ஆராய்ச்சி மட்டுமல்லாமல் கடலியல் ஆய்வுகளும் மேற்கொண்டால்தான் இயற்கை அழித்த தமிழ் வரலாறு தெரியவரும்.

அடுத்த பதிவில் மனோசக்திக்கான சான்றுகள் - அழிந்து போன வரலாற்றில் மறைக்கப்பட்ட பக்கங்களை செவி வழி கதைகளாகவும், இலக்கியவழிசெய்திகளாகவும் உறுதிபடுத்தலாமா?.

இவற்றை கண்டிப்பாக படித்துப் பாருங்கள்.
http://news.bbc.co.uk/2/hi/science/nature/353277.stm
http://balubpos.blogspot.com
http://jayabarathan.wordpress.com/2011/07/15/kumari-kandam-3/

R. Mathivanan, then Chief Editor of the Tamil Etymological Dictionary Project of the Government of Tamil Nadu, in 1991 claimed to have deciphered the still undeciphered Indus script as Tamil, following the methodology recommended by his teacher Devaneya Pavanar, presenting the following timeline (cited after Mahadevan 2002):

    ca. 200,000 to 50,000 BC: evolution of "the Tamilian or Homo Dravida",
    ca. 200,000 to 100,000 BC: beginnings of the Tamil language
    50,000 BC: Kumari Kandam civilisation
    20,000 BC: A lost Tamil culture of the Easter Island which had an advanced civilisation
    16,000 BC: Lemuria submerged
    6087 BC: Second Tamil Sangam established by a Pandya king
    3031 BC: A Chera prince in his wanderings in the Solomon Island saw wild sugarcane and started cultivation in Kumari Kandam.
    1780 BC: The Third Tamil Sangam established by a Pandya king
    7th century BC: Tolkappiyam (the earliest known extant Tamil grammar) 
22:02 | Author: சாகம்பரி
இந்த பதிவு பழந்தமிழர் அறிந்திருந்த சிறப்புமிக்க ஐந்தாம் பரிமாணம் என்னும் மனோசக்தி பற்றியது.

பழந்தமிழரின் வரலாறு தேடி காலப்பயணம்.
முதலில் சில விசயங்களை தெளிவுபடுத்திக் கொள்வோம். தமிழன் என்பது தமிழ்மொழி பேசும் இனம். இதனை குலத்தின் பெயரோடோ, மதத்தின் பெயரோடோ தொடர்புபடுத்தி குழப்பிக் கொள்ள வேண்டாம். அதேபோல தமிழ் மொழி பல மாற்றங்களுக்கு உள்ளானதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இலக்கியத்திலிருந்து - தொல்காப்பியம் -கிமு700-கி.மு300
பழந்தமிழர் வரலாறு என்ற தேடலுக்கு நிறைய விசயங்கள் கிட்டுவது இலக்கியங்களில் இருந்துதான்.  அவை தமிழரின்ன் தோற்றம் பற்றி சுட்டுவது கிமு. 700லிருந்துதான். தலைச்சங்கம் வைத்து பதியப்பட்ட நூல்களுள் முதன்மையானது 'அகத்தியம்' என்ற இலக்கண நூல். அதனுடைய காலம் 'தொல்காப்பியத்திற்கும்' முன் என்று அனுமானிக்க முடிகிறது. ஏனெனில் தலைச்சங்கத்தில் இடம்பெற்றிருந்த புலவர்களுள் அகத்தியரும் ஒருவர். அவருடைய சீடர்களில் ஒருவரான தொல்காப்பியர் விளங்கினார் அன்று கூறப்படுகிறது. இதனைக் கொண்டு தொல்காப்பியத்தின் காலம் கிமு700-கிமு300 வரை இருக்கலாம் என்று பதியப்படுகிறது. தொல்காப்பியம் என்பது இலக்கண நூல். தமிழ் மொழியின்  இலக்கணம் பற்றிய வரையறகள் இதில் இருக்கின்றன.

நம்முடைய தேடல் தமிழரின் தோற்றம் பற்றியது. முதல் இலக்கிய நூல் சொல்வதோ பண்பட்ட முதிர்ந்த மொழியின் லட்சணங்களை. இன்னும் தேடலை பின் நோக்கி நகர்த்த முடிவு செய்தேன். தொல்பொருள் துறையின் பதிவுகளில் கிட்டியது ஆதிச்ச நல்லூர். திருச்செந்தூர் செல்லும் வழியில் தாமிரபரணி படுகையில் உள்ளது.

ஆதிச்ச நல்லூர் - கிமு.1000
அதற்கும் முன்பு வரலாற்று ஆதாரமாக ஆதிச்ச நல்லூரில் கிடைத்த புதைபொருட்களை சொல்லலாம். முதுமக்கள் தாழிகளில் மனித எலும்புக்கூடு மற்றும் மண்பாண்டங்கள், சில உலோக பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை கிமு1800ஐ சேர்ந்தது என்கிறார்கள் இவை கி.மு 10ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என்று உறுதிபடுத்தபட்டன. இதற்கான சுட்டி: http://asi.nic.in/asi_exec_adichchanallur.asp 

இந்த இடத்தில் மேலும் ஒரு குறிப்பு கிட்டுகிறது. வேதிய முறைப்படி செய்பவர் அல்லாதவர் என்று இரு பிரிவினர் உள்ளதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.  வேதகாலம் என்பது கிமு.2000-500 வரை.

செம்பியன் கண்டியூர் -கிமு.2000-கிமு.1000
மயிலாடுதுறையில் செம்பியன் கண்டியூர் என்ற இடத்தில் 2006ல் நடைபெற்ற ஆய்வுகள் அங்கு கிட்டிய பொருட்கள் கற்கோடாரிகள் கற்காலத்தின் பிற்பகுதியை சேர்ந்தவை என்று உறுதிபடுத்தப்படன. தொன்மை கிமு 2000-1000.  
சிந்து சமவெளி நாகரிகத்தின் (கிமு.3300-1300)தொடர்புடைய எழுத்துருக்கள் கிடைத்தன.

மரபியல் ஆதாரம் - 50,000-70,000 வருடங்கள்
தற்கால மனிதன் ஹோமோ சாபியன் இனத்தை சேர்ந்தவன் என்றும் அதற்கு முன்பாக நியாண்டர்தால் இன மனிதன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. நமக்கு மூதாதையர் ஹோமோ சாப்பியனிலிருந்து கணக்கிடப்படுகின்றனர்.  இந்த மனிதன் ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியாவிற்குள் வந்ததாக கூறப்படுகிறது. காலம் 50,000-70,000 முன்பு. இந்த மரபணு மாதிரி மதுரை பக்கத்திலிருக்கும் கிராமத்திலிருக்கும் ஒரு மனிதரின் மரபணு உடன் பொருந்தியது. எனவே ஆசியாவில் மனிதர்கள் குடியேற்றம் 70,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கூறப்பட்டது. ஆஸ்திரேலியாவில் 40,000 வருடங்களுக்கு முன் நிகழந்ததாகவும் பதிவு செய்யப்பட்டது.

அதிரம்பாக்கம் -15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்.
திருவள்ளுவர் மாவட்டம் பூண்டி நீர்தேக்கம் அருகே அதிரம்பாக்கம் தொல்லியல் ஆய்வில் கிட்டியது ஆச்சரியப்படுத்தியது. 15,00,000 ஆண்டுகளுக்கு முன் பழைய கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கிட்டின. ஆப்பிரிக்காவில் கிட்டிய மாதிரியுடன் ஒத்திருந்தன. இதற்கு முன் தெற்காசியாவில் பழைய கற்காலம் ஆரம்பித்ததே 70,000 ஆண்டுகளுக்கு முன்புதான் என்று ஒரு கருத்து இருந்ததை பொய்யாக்கியது இந்த ஆய்வு.
இதற்கான சுட்டி
http://asi.nic.in/asi_exca_imp_tamilnadu.asp
http://www.antiquity.ac.uk/projgall/pappu297/
http://www.thehindu.com/sci-tech/science/article1568651.ece

அங்கே அருகிலேயே அல்லிகுழி மலைத்தொடரில் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் வாழ்ந்த குகைகள் இருக்கின்றன. அவை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இத்தனை தகவல்களும் ஒரு விசயத்தை உறுதிபடுத்துகின்றன. முதல் மனிதனின் தோற்றம் தமிழகத்தில் இருந்தது என்பதுதா
ன் அது. 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே குழுக்களாக மக்கள் வாழ்ந்துள்ள ஒரு நாகரிகமான சமுதாயம் இங்கிருந்தது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.  ஆனால் கற்காலத்திற்கான ஆதாரங்களுக்குப்பின் கிட்டியவை  இரும்பு காலத்திற்கு சென்றுவிடுகின்றன.

கற்காலம் ,செப்புகாலம்,வெண்கல காலம், இரும்பு காலம் என்று பிரிக்கப்பட்ட கால கட்டங்களில் பயணித்த மனித நாகரிகத்தில், தமிழ் பழங்குடியின் வாழ்க்கை முறைகளுக்கான ஆதாரம் கற்காலத்திலிருந்து சட்டென்று இரும்பு காலத்திற்கு வந்துவிட்டதை குறிப்பிடுகின்றன. இடைப்பட்ட இரண்டு உலோக காலங்களுக்கான தொல்லியல் சான்றுகள் கிட்டவில்லை. இவை சிந்து-சமவெளி நாகரிகத்தில் கிட்டியுள்ளன. இடையில் என்ன நடந்தது...?


18:12 | Author: சாகம்பரி
சென்ற பகுதியின் தொடர்ச்சி.....
இவற்றை உணர்ந்திருக்கிறீர்களா?
- சில நிகழ்வுகள் நடக்கும்போது அது ஏற்கனவே நடந்ததுபோல உணர்வோம். ஆனால், நமக்குத் தெரிந்தவரை அது முற்றிலும் புதிதான சூழ்நிலையாக இருக்கும்.
- நொடிகளில் முடிவெடுக்க வேண்டிய சில நிகழ்வுகளை சந்திக்கும்போது யாரோ உடனிருந்து வழிகாட்டுவதைப்போல உணர்ந்து முடிவெடுப்போம். ஏன் அந்த முடிவை எடுத்தோம் என்பதற்கு விளக்கம் கூட நம்மால் சொல்ல இயலாது.
- அப்போதே எனக்குத் தோன்றியது என்று நிறைய முறை சொல்லியிருப்போம்.
- பெரும்பாலும் இதுபோன்ற உணர்வுகள் அந்த சூழ்நிலைக்குள் நாம் செல்லும்போதுதான் தோன்றும். முன்கூட்டியே எதுவும் தோன்றாது.
- ஒரு சிக்கலில் இருக்கும்போது அதற்கான சரியான தீர்வு நாம் உறக்கத்திலிருக்கும்போது கிட்டும்.

இவற்றுக்கெல்லாம் விளக்கம் இருக்கிறதா? 
 
இதற்கு நமக்கு ஏதோ ஒரு இறை சக்தி உதவுவதாக எண்ணுவோம். நல்லது நடந்தால் சரி... வேறு மாதிரி நடந்தால்...

அவர்கள் இருவரும் நண்பர்கள். கல்லூரி மாணவர்கள். புது இரு சக்கர வாகனம் வாங்கியாகிவிட்டது. கல்லூரியில் நடந்த கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி. அதீத உற்சாகம் கரைபுரண்டு ஓட, நான்கு வழிச்சாலையில் மிகுந்த வேகத்துடன் வண்டியில் சென்றனர். வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல்  ஒரு கனரக வாகனத்தின் பின் சக்கரத்தில் மோதிவிட்டான். வழக்கமாக இது போன்ற விபத்துக்களில் பின் இருக்கையில் அமர்ந்தவன்தான் மாட்டுவான். வண்டியை ஓட்டுபவன் பெரும்பாலும் தப்பிவிடுவான். ஆனால் இந்த விபத்தில் ஓட்டியவன் உயிரை விட்டான். பின் இருக்கையில் அமர்ந்தவன் மருத்துவ உதவியினால் பிழைத்துவிட்டான்.. தப்பித்தவனிடம் விசாரித்தபோது,  அவன் சொன்னது என்னவெனில், மோதப்போகும் கடைசி  நொடியில் கூட விபத்து தவிர்க்கப்படும் என்று நினைக்க, ஓட்டியவனோ  மோதியே விட்டான். மோதும் முன் கடைசியாக சொன்ன வார்த்தை "சாரிடா...". மன்னிப்பு கேட்க தோன்றிய மனதில் மாற்றுவழி யோசிக்கத் தோன்றவில்லையே. இதுதான் 'விதி' என்றனர். போதாத 'காலம்' என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

ஏதோ ஒன்று அவனை அந்த நிகழ்விற்குள் கொண்டு சென்றதல்லவா... அதுதான் அவனுக்கு வழிகாட்டியது. அதைத்தான் வானுரைபதிவு (ஆகாஷிக் ரெக்கார்டுகள்) என்கிறார்கள். அந்த நேரம், அந்த இடம், அந்த வண்டி, ஓட்டியவன் அனைத்தும் சேர்ந்த ஒரு நிகழ்விற்கான ஒரு காட்சிக்கான அமைப்பு அந்த இடத்தில் அலைகளாக இருந்திருக்கிறது. அந்த சூழ்நிலைக்குள் செல்லவுமே நம்மை பாதிக்க, அதனை செயல்படுத்தும் பாத்திரங்களாக மாறிவிடுகிறோம். இதைத்தான் முதல் பகுதியிலேயே நான்காவது பரிமாணத்தின் திட்டத்தில்தான் உலகின் ஒவ்வொரு அசைவும் நடக்கின்றன என்றேன்.

இன்னும் ஒரு விளக்கம் தருகிறேன். சுவாமி விவேகானந்தர் லாஸ் ஏஞ்சல்ஸில் நடத்திய ஒரு சொற்பொழிவில் குறிப்பிட்டது. அதற்கான சுட்டி இங்கே உள்ளது. விவேகானந்தரின் உரை

மிகவும் ஆச்சரியமான ஒரு நிகழ்ச்சியை சொல்கிறார். விவேகானந்தர் சந்தித்த அந்த மனிதர் ஒரு சாது. அவர் மூன்று தாள்களில் எதையோ எழுதி மடித்து வைத்துக் கொண்டார். விவேகானந்தரும் அவருடைய நண்பர்கள் இருவரிடமும் அவற்றை நீட்டி 'பிரித்துப் படிக்க வேண்டாம். அப்படியே சட்டை பையில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார். சற்று பொறுத்து "நீங்கள் ஏதாவது ஒரு வாக்கியம் எந்த மொழியில் வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள்." என்றாராம். தனியே சென்று விவாதி
த்துவிட்டு, விவேகானந்தர் சமஸ்கிருதத்திலும், அவர் நண்பர்கள் அராபியிலும், ஜெர்மானிய மொழியிலும் நினைத்துக் கொண்டனர். இவை அந்த சாதுவிற்கு தெரியாத மொழிகள். உற்சாகமாக சாதுவிடம் திரும்பி வர 'உங்களிடம் நான் ஏற்கனவே தந்த தாள்களை எடுத்துப் பாருங்கள்' என்றார். அந்தத்தாள்களில் இவர்கள் மூவரும் நினைத்த வாக்கியங்கள் அந்தந்த மொழியிலேயே இருந்தன. கூடவே யார் எந்த வாக்கியத்தை நினைப்பார்கள் என்றும் மிக்ச்சரியாகவே எழுதியிருந்தார். இதற்கு அவர் தந்த விளக்கம் வானுரை பதிவுகள்தான். இதைத்தான் இவன் இப்போது செய்வான் என்பதை வானுரை பதிவுகளின் மூலம் அவரால் அறிய முடிந்தது.

சாதாரண நிலையிலிருந்து பார்க்கும்போது திட்டத்தை செயல்படுத்தும் நிலையில் மட்டுமே நாம் இருக்கிறோம் என்பது புரிகிறதல்லாவா? மேலும் அண்டவெளி சுருங்கும் சமயத்தில் பொருட்கள் வாயு மூலக்கூறுகளாக மாறிய பின்பும் அழியாத அலைவடிவாக இந்த  வானுரை பதிவுகள் பிரபஞ்சத்தில் உலவிக் கொண்டேதான் இருக்கும். புதிதாக பிறக்கும் அண்டவெளிக்கு வழிகாட்டியாகும் வாய்ப்பிற்காக காத்திருக்கும் என்பதும் ஒப்புக் கொள்ள முடிகிறதுதானே. 

எத்தனை ராமரோ? எத்தனை கணையாழியோ? என்று அகத்தியர் அனுமனிடம் சொன்னதன் விளக்கமும் இதுதான். எல்லாமே மீண்டும் மீண்டும் நடக்கின்றன. ஓரளவிற்கு விளக்கிவிட்ட நம்பிக்கையில் , இப்போது ஏற்கனவே பதிவிட்ட இந்த வாக்கியங்களை அழுத்தமாக மீண்டும் பதிகிறேன்.

 "ஒவ்வொரு நிகழ்வும் அண்டவெளி நேரத்தால் கட்டப்பட்டுள்ளதால் இதுதான் சாத்தியம். எளிதாக சொல்ல வேண்டுமெனில், இதே போல இந்த விசயத்தை நான் நிறைய முறை பதிவிட்டுக் கொண்டே இருக்கிறேன். நீங்களும் நிறைய முறை படித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனில் அனைத்து நிகழ்வும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவைதான்."

இதுவரை நான்காவது பரிமாணமாகிய 'காலம்' என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள். இப்போது ஒரு கேள்வி எழும். இவ்வாறு காலத்தால் கட்டப்பட்ட நிகழ்வுகளை  முன்கூட்டியே அறிய முடியுமா?  அறிந்தால் சில நிகழ்வுகளை தடுக்க முடியுமே. இதற்கு விடைதான் ஐந்தாவது பரிமாணம் என அழைக்கப்படும் 'மனோசக்தி'.





இந்த பதிவின் ஆரம்பத்தில் நான் கேட்டிருந்த கேள்விகளுக்கும் இதுதான் விடை. நம்மாலும் அந்த வானுரை பதிவுகளை வாசிக்க இயலும்.

இது பற்றி இன்றைய அறிவியல் என்ன சொல்கிறது. ஒரு ஆராய்ச்சியை பற்றி குறிப்பிடுகிறேன். உலகப்புகழ் பெற்ற 'வாவ்' சிக்னல் பற்றிய ஆராய்ச்சிதான் அது.

ஜெர்ரி என்ற விஞ்ஞானி 1977ல் அவருடைய தொலை நோக்கி பதிந்திருந்த விண்வெளி பதிவுகளை ஆராய்ந்த போது ஒரு ஆச்சரியமான அலைவரிசை கிட்டியது. அது நம்முடைய தனுர் மண்டலம் என்றழைக்கப்படும் நட்சத்திர மண்டலத்தில் இருந்து - 200 ஒளியாண்டுகள் - தொலைவில் இருந்து வந்திருந்தது. அதனை மொழிபெயர்த்தபோது கிட்டிய விடை 'வாவ் (WOW)'. பூமியை பார்த்து வெளியுலகத்தில் இருந்து வர்ணிக்கப்பட்ட இந்த சிக்னலை யார் அனுப்பியிருக்க முடியும்.
இதற்கான சுட்டி: http://en.wikipedia.org/wiki/Wow!_signal
Thanks to wiki resource


நம்முடைய விஞ்ஞானிகளுக்கு சிக்கல் என்னவென்றால் அதற்கு பதில் அனுப்பினால், அது அனுப்பப்பட்ட இடத்தை அடைய  200 வருடங்கள் ஆகும். அதற்குள் அனுப்பியவர் உயிருடன் இருப்பா
ர் என்று சொல்ல முடியாது. அது பிரபஞ்சத்தில் குறிப்பிட்ட தொலைவிலிருந்து வந்திருந்தால் அந்த அலை வீச்சு அருகிலிருக்கும் அலைவாங்கியிலும் பதிவாகியிருக்கும். ஆனால் இந்த சிக்னல் மீண்டும் அடுத்த ஒலிவாங்கியில் பதியப்படவேயில்லை. அப்படியென்றால் யாரோ அருகே வந்து சொல்லிவிட்டு சென்றதுபோல இருக்கிறது. காலம் சம்பந்தப்பட்ட கணக்கீடுகளால் இதனை விளக்கமுடியவில்லை. இந்த விசயத்தில் நம்முடைய நான்காம் பரிமாணம் பயன்படாமல் போய்விட்டது. இதனை விளக்கும் பொருட்டு இயற்பியல் புது வார்த்தையை கொண்டு வந்தது. Worm hole(புழுத்துளை என்றால் நல்ல வார்த்தையாகப்படவில்லை). காலத்திற்கு கட்டுப்படாத ஒரு குறுக்கு வழிப்பயணம் இதில் சாத்தியம். 
இதற்கான சுட்டி:http://en.wikipedia.org/wiki/Wormhole


சரி சரி, எளிதாகவே சொல்லகிறேன். வாயு வேகம் மனோ வேகம் என்று படித்திருப்பீர்களே. இதில் மனோவேகத்தைதான் இயற்பியல் தத்தெடுக்கிறது. ஐன்ஸ்டைனின் சில கோட்பாடுகளை கொண்டு இதனை விளக்கவும் முற்படுகின்றனர். இன்னும் நிரூபிக்கப்படவில்லை. சரி, நம் பக்கம் ஏதாவது நடந்திருக்கிறதா என்று பார்ப்போமா?

பழந்தமிழரின் வாழ்க்கையில் நான்காவது பரிமாணம் பற்றிய பதிவுகள் இல்லை. ஆனால் ஐந்தாவது பரிமாணம் சம்பந்தப்பட்ட கலைகளில் நம் முன்னோர்கள்  மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதை புரிந்து கொள்ள முடியும். பழந்தமிழர் என்றால் 50,000 வருடங்களுக்கு முந்தைய குமரி மாந்தன் எனப்படும் மூத்த தமிழ்குடியின் வரலாறு பற்றி அடுத்த பதிவில் சற்று விரிவாக பார்ப்போம். 



முதல்பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/1.html
இரண்டாம் பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/2.html
மூன்றாம் பாகம் : http://annaiboomi.blogspot.com/2011/11/3.html
நான்காம் பாகம். http://annaiboomi.blogspot.com/2011/11/4.html

16:46 | Author: சாகம்பரி

அலைகளின் அழியாத்தன்மையும் அவற்றின் பாதிப்பும்.

இப்போது மேலும் ஒரு விசயத்தை நினைவுபடுத்திக் கொள்வோம். சிறிய வயதில் இயற்பியலில் படித்ததுதான். நாம் இந்த உலகத்துடன் தொடர்பு கொள்ளுவது பெரும்பாலும் அலை வடிவங்களாகவே நடக்கின்றன. நாம் ஐம்புலன்களாலும் அறிந்து கொள்ளும் செய்திகள் அலைவடிவங்களாக உள்ளன. உதாரணமாக ஒலி,ஒளி போன்றவை அலைகளாகவே நம் புலன்களை அடைகின்றன. சரிதானே, ஒருவர் நம்மிடம் பேசும்போது அவருடைய பேச்சானது ஒலி அலையாக நம்முடைய செவியை அடைகிறது. அதுபோலவே நாம் காணும் காட்சிகளும் ஒளி அலையாகவே நம்மை அடைகிறது. என்ன ஒன்று, ஒலியைவிட ஒளி விரைவாக செல்லும். அதனால்தான் மின்னலை முதலிலும் இடியை சற்று பொறுத்தும் நம்மால் உணரமுடிகிறது.

நம்முடைய எண்ணங்கள்கூட அலைகளாக பரவுவதாக நிருபிக்கப்பட்டுள்ளது. அது மற்றவர்களை பாதிப்பதையும் நிருபித்துள்ளார்கள். இது பற்றி விரிவாக பிறகு பார்ப்போம். இப்போது இந்த படத்தை பாருங்கள்.
      
  
இந்த படத்தில் மூன்று பாகமாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் நம்முடைய புலனால் உணரக்கூடியது. இரண்டாவது தெளிவாக உணரமுடியாது. மூன்றாவது நம்மால் உணரவே முடியாத அளவிற்கு இருக்கிறது. சக்தி குறைந்து கொண்டே போகிறதே தவிர முற்றிலுமாக இல்லையென்று சொல்லமுடியாது(not nullified). சரியான சாதனங்களை பயன்படுத்து பெரிதுபடுத்தி மீண்டும் உணர முடியும். 

உதாரணமாக, நம் அருகில் இருப்பவர் பேசுவது தெளிவாக கேட்கும். அவர் சற்று தொலைவு சென்றவுடன் கேட்பது படிப்படியாக குறைகிறது. இன்னும் அவர் நகரும் போது சுத்தமாக எதுவும் கேட்காது. ஏனெனில் அலையின் அளவு குறைகிறது. சரியான சாதனங்கள் உதவியுடன் கேட்க முடியும்.  இன்னும் விலகிச் செல்லும்போது நம்முடைய சாதனங்கள் உதவி செய்யாது. அதனால் அதனை உணர முடியாமல் போகிறது. ஆனால், அவை வலு குறைந்த அலைகளாக பிரபஞ்சத்தில் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. 

ஒரு தகவல் சொல்கிறேன். பென்சியாஸ்  மற்றும் வில்சன் (Penzias and Wilson) என்ற இயற்பியல் விஞ்ஞானிகள் 1978ல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றனர்.  பெல் ஆய்வக விஞ்ஞானிகளான அவர்கள் CMB எனப்படும் பிரபஞ்சம் சம்பந்தப்பட்ட 'அண்டவியல் நுண்ணலை பின்புல கதிர்வீச்சு' ஆராய்ச்சிக்காக அந்த பரிசை வென்றனர். 1964ல் அண்டவெளியில் பரவியிருக்கும் நுண்ணலைகளை பதிவு செய்து கொன்டிருந்த போது, ஒரு புதிய பதிவொன்று கிட்டியது. மிக அதிக வெப்பவீச்சை பதிவு செய்திருந்த அந்த காஸ்மிக் கதிர்களின் மூலதாரம் நம்முடைய பால்வெளிக்கு வெளியில் இருந்து வந்தது என்று தெரிந்தது. சிலபல அறிவியல் தேடல்களுக்குப் பிறகு அந்த அலைவீச்சானது நெபுலா வெடித்தபோது வெளிப்பட்ட கதிர்வீச்சு (வெடிப்பு தொடங்கிய 3,00,000 வருடங்களுக்குள்) என்று உறுதிபடுத்தினர். அதுவரை (1970வரை) பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி எழுந்த வேறுபட்ட கருத்துக்களை பொய்யாக்கி வெடிப்பின் மூலமே உருவானது என்ற கருத்தை உறுதிபடுத்திய இந்த ஆய்விற்கு நோபல் பரிசு கிட்டியது. 
இதுதான் அவர்கள் உபயோகித்த தொலைநோக்கி.
      

குறிப்பிட்ட அந்த கதிர்வீச்சின் ஒலிவடிவ பதிவு இணையத்தில் கிடைக்கிறது. முடிந்தால் கேட்டுபாருங்கள். மிக அதிகபட்ச அதிர்வெண்களில் பதிவாகியுள்ள அந்த ஒலிப்பதிவை கேட்டு காது வலியெடுத்தால் நான் பொறுப்பல்ல.(எனக்கு இரண்டு நாட்கள் வலியிருந்தது)

இதன் மூலம் நான் சொல்ல வருவது என்னவென்றால் உருவாக்கப்பட்ட  அலைவீச்சு அல்லது கதிர்வீச்சு அழிவடைவதில்லை. அவை பிரபஞ்சத்திலேயே சுற்றி வருகின்றன. இதே போல்தான் ஒரு நிகழ்வு நடக்கும்போது உருவாகும் ஒளி, ஒலி செய்திகள் அலைகளாக நம்மை சுற்றி பரவிக் கிடக்கின்றன. இவற்றை 'ஆகாஷிக் ரெக்கார்டுகள்'  என மெட்டாபிஸிக்ஸ் (புலன் தாண்டிய நுண்ணியல்) ஆய்வுகள் ஒப்புக்கொள்கின்றன. நம் எண்ணங்கள்கூட கதிர்வீச்சுகளாக பரவுவதை பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்த வானுரை பதிவுகள் நம்மை பாதிக்குமா? கண்டிப்பாக பாதிக்கும். அவை நம் சம்பந்தப்பட்டவையாக இருந்தால். உதாரணமாக, பலவிதமான மின்காந்த அலைகளாக வானொலி நிகழ்ச்சிகள் பரவிக்கிடக்கின்றன. சரியான அலைவரிசைக்கு பொருந்தி (tuned)வருகின்ற நிகழ்ச்சியை மட்டும் நம்மால் கேட்கமுடிகிறதல்லவா? அதேபோல, மிகவும் மெல்லிய வீச்சுகளாக தேய்வுற்று கிடக்கும் நமக்குத் தொடர்பு உடைய அலைகளுக்கு சரியான உள்வாங்கியாக(reciever) நாம் விளங்கமுடியும். அதற்கான ஆய்வுச்செய்திகளுக்கு போவதற்கு முன் சில விசயங்களை நாமே உணர முயற்சிக்கலாமா?

இவற்றை உணர்ந்திருக்கிறீர்களா? 
 
- சில நிகழ்வுகள் நடக்கும்போது அது ஏற்கனவே நடந்ததுபோல உணர்வோம். ஆனால், நமக்குத் தெரிந்தவரை அது முற்றிலும் புதிதான சூழ்நிலையாக இருக்கும்.
 
- நொடிகளில் முடிவெடுக்க வேண்டிய சில நிகழ்வுகளை சந்திக்கும்போது யாரோ உடனிருந்து வழிகாட்டுவதைப்போல உணர்ந்து முடிவெடுப்போம். ஏன் அந்த முடிவை எடுத்தோம் என்பதற்கு விளக்கம் கூட நம்மால் சொல்ல இயலாது.
 
- அப்போதே எனக்குத் தோன்றியது என்று நிறைய முறை சொல்லியிருப்போம்.
 
- பெரும்பாலும் இதுபோன்ற உணர்வுகள் அந்த சூழ்நிலைக்குள் நாம் செல்லும்போதுதான் தோன்றும். முன்கூட்டியே எதுவும் தோன்றாது.
 
- ஒரு சிக்கலில் இருக்கும்போது அதற்கான சரியான தீர்வு நாம் உறக்கத்திலிருக்கும்போது கிட்டும்.

இவற்றுக்கெல்லாம் விளக்கம் இருக்கிறதா?
18:34 | Author: சாகம்பரி
இந்த கட்டுரையின் முதல் இரண்டு தொடர்புகள்
முதல்பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/2.html
இரண்டாம் பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/1.html

 


முதலிரண்டு பகுதிகளுக்கே சில கேள்விகள் வந்துவிட்டன. அவற்றை விளக்காமல் அடுத்த பகுதிக்கு செல்ல முடியாது போலிருக்கிறது.


1. ஐன்ஸ்டை
ன் சமன்பாடு, '=' குறி, அணுசக்தி ஆகியவற்றை பற்றி எளிய விளக்கம் .
'=' குறிக்கு அப்படி என்ன முக்கியத்துவம் என்று தோன்றுகிறதல்லவா? ஒரு செய்தியை சமன்பாடாக சொல்லிப்பார்ப்போம்.

தன்னம்பிக்கை+உழைப்பு --> உயர்வு
    இதன் விளக்கம் தன்னம்பிக்கையும் உழைப்பும் இருந்தால் வாழ்க்கையில் உயரமுடியும்.

தன்னம்பிக்கை+உழைப்பு
= உயர்வு
   இதன் விளக்கம் எந்த அளவிற்கு தன்னம்பிக்கையும் உழைப்பும் இருக்கிறதோ அந்த அளவிற்கு உயர்வு கிட்டும் என்பதும்,

   உயர்வு=தன்னம்பிக்கை+உழைப்பு என்றும் கொள்ளலாம்.
   இதன் விளக்கம் உயர்வு இல்லையெனில் தன்னம்பிக்கையோ அல்லது உழைப்போ இல்லையென்றும் கொள்ளலாம். இரண்டு பக்கமும் சமமாகும் இந்த
= குறிதான் ஐன்ஸ்டைனின் சமன்பாட்டை முக்கியத்துவம் பெற்றதாக்கியது.

ஐன்ஸ்டைனின் சமன்பாடு:
 
    
   E - எனப்படுவது ஆற்றல், சக்தி
   M  - ஒரு பொருளின் எடை. இத்துடன் C (ஒளியின் வேகம்)ஐ சேர்க்கும் போது ஆற்றலின் அளவு தெரிய வருகிறது.

இரண்டு விசயம் புரிந்து கொள்வோம்.
1. ஒரு பொருள் ஆற்றலாகவும் ,  ஆற்றல் பொருளாகவும் மாறும்

2. ஒரு பொருளை ஆற்றலாக மாற்றும்போது கிடைக்கவேண்டிய முழு ஆற்றலின் அளவையும் கணக்கிட முடியும். 

  எளிமையாக சொல்ல வேண்டுமெனில் , ஒரு மரத்துண்டை எரிக்கும்போது கிட்டும் சக்தி இந்த சமன்பாட்டை ஒத்துப்போகாது ஏனென்றால், அவை முழுமையாக எரிக்கப்படாமல் கரியாகவும், சாம்பலாகவும் மிச்சம் இருக்கும்.  இது மிகச் சாதாரண வார்த்தைகளில் சொல்லப்பட்டது. இதே கணக்கீட்டை வைத்துதான் ஒரு பொருளின் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தும் அணுவை பிளக்கும் யுக்திகள் புரிந்து கொள்ளப்பட்டன. அணுவை பிளக்கும் முன் செறிவூட்டும் முறைகள் புகுத்தப்பட்டன. செறிவூட்டுவதால் ஒரு பொருளின் எடையை அதிகரிக்க முடியும். எனவே ஆற்றலையும் அதிகரிக்க முடியும்.
மிகவும் செறிவூட்டப்பட்ட மூலக்கூறுகள் விண்மீன்களில் இருக்கின்றன. எனவேதான் அவை ஓளியையும் வெப்பத்தையும் அதிகமாக வெளியிடுகின்றன. நமக்கு மிக அருகில் இருக்கும் விண்மீன் சூரியன் ஆகும்.

போகருடைய குறிப்புகளில் கனநீர் தயாரித்ததாக உள்ளன. சாதாரணமாக 100மிலி நீர் இருக்கும் எடையைவிட கன நீர் பல ஆயிரம் மடங்கு எடை அதிகம் உள்ளதாகவும் யாராலும் தூக்க முடியாத அளவிற்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது அணு கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் முறைகளை தெரிந்து வைத்திருந்தார்கள் (மூலிகையை பயன்படுத்திதான்) அதனால்தான் தாமிரத்திலிருந்து தங்கம் உருவாகும் ரசவாத ரகசியங்கள் தெரிந்திருந்தனர்.

2. அண்டவெளி விரிவடைதல் சுருங்குதல் பற்றிய விளக்கம்

அண்டவெளி எனப்படும் universeன் மையத்தில் மிகுந்த அடர்த்தியுடன் கூடிய வாயு மூலக்கூறுகள் (ஹீலியம் போன்றவை) எரிந்து கொண்டே இருக்கின்றன. இதனால் அதனை சுற்றியுள்ள பொருட்கள் உந்தி வெளித் தள்ளப்பட்டுகின்றன. உ-ம், பறக்கும் பலூன்களை வெப்பத்தை பயன்படுத்தி விரிவடைய வைப்பதுபோல்.

அண்டவெளி விரிவடையும்போது மையப்பகுதியை விட்டு பயணிக்கும் வாயு மூலக்கூறுகள் குளிர்ந்து விண்மீன்கள், உருவானது. அவை  பருப்பொருளானது
மாறியது போக எஞ்சிய ஆற்றல் மற்ற பொருட்களையும் தன்னகத்தே இழுக்க முயற்சிக்க, அண்டங்கள் (Galaxy), கோள்கள்(planets) உருவாகின.
   
இதேபோல தலைகீழாக நடக்கும்போது விண்மீன்கள், அண்டங்கள், கோள்கள் ஆகியன மீண்டும் வாயு மூலக்கூறுகளாக மாற வாய்ப்பு உள்ளதல்லவா? இதனைத்தான் அண்டவெளி சுருங்குதல் என்கிறார்கள். மையத்திலிருக்கும் எரிதல் நின்றவுடன் ஏற்படும் வெற்றிடம்(black hole) அனைத்தையும் மீண்டும் தன்னகத்தே இழுத்துக் கொள்ளும்  நிலை வரும்போது. வெறும் வாயு மூலக்கூறுகளால் நிரப்பபட்ட ஆற்றல் மிக்க நெபுலா உருவாகும். 

உ-ம், ஓரிடத்தில் வளி மண்டல அழுத்தம் குறையும்போது அதன் அருகிலுள்ள மேகங்களை இழுத்து சேர்த்துக் கொண்டு புயல் உருவாகுவது போல.

3.  காலமாகிய நான்காவது பரிமாணம் பற்றிய விளக்கம்

   "ஒவ்வொரு நிகழ்வும் அண்டவெளி நேரத்தால் கட்டப்பட்டுள்ளதால் இதுதான் சாத்தியம். எளிதாக சொல்ல வேண்டுமெனில், இதே போல இந்த விசயத்தை நான் நிறைய முறை பதிவிட்டுக் கொண்டே இருக்கிறேன். நீங்களும் நிறைய முறை படித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனில் அனைத்து நிகழ்வும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவைதான்."


ஒவ்வொரு பொருளுக்கும் காலசுழற்சி என்பது உண்டு. அண்டவெளிக்கு இருப்பது போலவே தோற்றமும் மறைவும் மீண்டும் தோன்றுதலும். குறிப்பிட்ட நிகழ்வு எனப்படுவது அந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட பொருட்களுடைய காலமும் சேர்ந்ததுதான். 

ஒரு வேளை மதுரை வடக்கு வெளி வீதியில்...

    -  கிமு 200ல்
நான் கண்ணைமூடிக் கொண்டு சென்றிருந்தால் மிருகத்தின் வயிற்றுக்குள் செல்லும் வாய்ப்பு கிட்டியிருக்கும். 
    -  நான் மூன்றாம் நூற்றாண்டில் கண்ணை மூடிக் கொண்டு சென்றிருந்தால் குறைந்த பட்சம் அரசனின் குதிரையின் உதை மட்டும் கிட்டியிருக்கும்.
    -  ஆனால் இப்போது சென்றால் எனக்கு மிக மோசமான விபத்து நேரிடலாம்.  ஏனெனில் அப்போது பேருந்து என்ற பொருளின் காலம் இல்லை.  வடக்கு வெளி வீதி, நான், பேருந்து இத்தனையும் சேர ஒரு காலம் வருகிறது அல்லவா அப்போது 'அந்த நிகழ்வு' ஏற்பட வாய்ப்பு வருகிறது. 

   விபத்து ஏற்படாமலும் போகலாமே என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். நல்லது இந்த கேள்வியை குறித்து வையுங்கள். பிறகு விளக்குகிறேன்.


15:56 | Author: சாகம்பரி
வெடித்து சிதறிக் கொண்டிருக்கும் நெபுலாவிலிருந்து உருவாகும் அண்டவெளி.
இப்போது நாம் கவனித்துக் கொண்டிருப்பது நான்காவது பரிமாணம் காலம் பற்றியே.

காலம் என்ற பரிமாணத்தில் இன்று காலை பத்துமணி, நான், மதுரை, என் வீடு ஆகிய அனைத்தும் ஒன்றாக கட்டுப்படுகின்றன இப்போது இன்னும் கேள்விகளை எழுப்பலாம். கால அளவை பொறுத்தவரை எல்லாவற்றிற்கும் சுழற்சி என்றொரு விசயம் உள்ளது. காலை பத்து மணி மீண்டும் வரும். ஆனால் தேதி மாறும். தேதி என்று நாம் குறிப்பிடுவது ஒரு ஒப்புமை நேரம் மட்டுமே. ஆங்கில வழிமுறையில் கிறிஸ்து பிறந்ததிலிருந்து முதல் வருடம் கணக்கிடப்படுகிறது. ஆனால் நம்முடைய தேடுதலுக்கு இந்த ஒப்புமை நேரம் பயன்படாது. ஒரு பொருளின் இருத்தல் என்பது அண்டவெளியில் அது இருக்கும் காலத்தை குறிப்பிடுகிற்து எனில் நம்முடைய காலத்தின் ஆரம்பமும் அண்டவெளியின் பிறப்பிலிருந்துதான் குறிப்பிடப்பட வேண்டும். எனவே நான்காவது பரிமாணமாகிய காலத்தை அண்டவெளியின் நேரமாக குறிப்பிடுவதுதான் சரி.

அப்படி பார்க்கும்போது ஒரு விசயம் புலப்பட்டது. அண்டவெளியின் உருவாக்கமும் முடிவும் மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றன என்பதே அது.. நெபுலா எனப்படும் ஒரு பெரிய நெருப்பு உருண்டை வெடித்து சிதறியதில் உருவானதுதான் அண்டவெளி என்பது உங்களுக்குத் தெரியும். நெபுலா எப்படி உருவானது? அண்டவெளியின் முடிவில்தான். எப்படி?

கோள்கள், விண்மீன்கள், அண்டங்கள் (நாம் வசிப்பது பால்வெளி அண்டத்தில்) என்ற பலவாறான விண்வெளிபொருட்களை தன்னகத்தே கொண்டுள்ள அண்டவெளி தற்சமயம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. ஏனெனில் இன்னமும் அதன் மையத்தில் வெடிப்புகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. வெடிக்கும் பொருள் தீர்ந்துவிடும் ஒரு நாளில் அங்கே ஒரு வெற்று புள்ளி உருவாகும். வெற்றிடமானது சுற்றியுள்ள பொருட்களை தன்னிடம் மீண்டும் இழுத்துக் கொள்ளும். ரொம்ப சரி, வெளியே தள்ளப்பட்டதெல்லாம் மீண்டும் ஒன்று சேர்ந்து கைகுலுக்கும். ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் மீண்டும் நெபுலா உருவாகும். சற்று அமைதியாக இருந்து மீண்டும் வெடிக்கும். அண்டம் முதல் நீங்கள்,நான்  வரை மீண்டும் அத்தனையும் அந்த அந்த காலக்கட்டத்தில் உருவாகும். இந்த கோட்பாட்டினை உலகம் இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கிறது. ஆனால்....   

அண்டவெளியின் முடிவின் மாதிரி - மத்தியில் இருப்பதுதான் black hole எனப்படும் வெற்றிடம்

ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பட்டினத்தார் 'பெருத்தன சிறுக்கும்.... சிறுத்தன பெருக்கும்' என்றும்  'தோன்றின மறையும்... மறைந்தன தோன்றும்....' என்று இந்த சுழற்சியை  குறிப்பிடுகிறார்.

இதனையே கணிதக்குறிப்பாக சொல்லும்போது equal to =
என்ற குறியினை பயன்படுத்துகிறார்கள்.

இந்த
= குறிதான் எண்ணிலடங்கா கேள்விகளுக்கு விடை தந்த ஐன்ஸ்டைனின் சமன்பாட்டையும் முக்கியத்துவம் பெற்றதாக்கியது.


ரிக் வேதத்திலும் பிந்து(புள்ளி)வில் இருந்து அனைத்தும் தோன்றியதாக குறிப்பிடப்படுகிறது. ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வேதங்கள்தான் உலகத்தின் தோற்றத்தை பற்றிய கோட்பாடுகளை முதன்முதலில் குறிப்பிட்டிருக்கின்றன. இன்றைக்கும் அறிவியல் கணிப்புகள் இதனை ஒட்டியே நிருபிக்கப்பட்டு வருகின்றன.



எனில், அண்டவெளியின் தோற்றத்தை வைத்து இன்றைய நாளை குறிப்பிடமுடியுமா? இதுவும் நம்முடைய பூஜை முறைகளில் உள்ளது.

பூஜை ஆரம்பிக்கும் முன் சொல்லப்படுகின்ற சங்கல்பத்தை படியுங்கள்.

'த்விதீய பரார்த்தே, ஸ்வேத வராககல்பே, வைவஸ்வத மன்வந்த்ரே, அஷ்டாவிம்ஸ்திதமே, கலியுகே, ப்ரதமபாதே, ஜம்பூ த்வீபே,பாரத வர்ஷே, பரத கண்டே, சகாப்தே...' என்று சொல்லப்படும் மந்திர வார்த்தைகள் உலகம் தோன்றிய நாளில் இருந்து இன்றைய நாளினை குறிப்பிடுகிறது.

இப்போது ஆரம்பத்திற்கு செல்லுவோம். முதலில் நான் குறிப்பிட்ட இன்று காலை பத்து மணி உண்மையில் எனக்கு மீண்டும் வர வாய்ப்புள்ளது என்பது புரிகிறதல்லவா? அப்போது கண்டிப்பாக நான் மதுரையில் என் வீட்டில்தான் இருப்பேன். ஒவ்வொரு நிகழ்வும் அண்டவெளி நேரத்தால் கட்டப்பட்டுள்ளதால் இதுதான் சாத்தியம். எளிதாக சொல்ல வேண்டுமெனில், இதே போல இந்த விசயத்தை நான் நிறைய முறை பதிவிட்டுக் கொண்டே இருக்கிறேன். நீங்களும் நிறைய முறை படித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனில் அனைத்து நிகழ்வும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவைதான். நாம் அதனை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். 
நாம் மட்டுமல்ல அண்டவெளியில் உள்ள அத்தனை பொருட்களும். என்ன ஒரு வித்தியாசம், மற்றவை ரொம்பவும் பேசாமல் இதனை செய்கின்றன. ஆனால், நாம்தான் அனைத்தையும் செய்வதாக சத்தம் போட்டு பேசிக் கொண்டே இயற்கை விதித்தவற்றை செய்கிறோம்.

இந்த பதிவு சொல்லும் விசயத்தை ஒரே வாக்கியமாக சொல்ல வேண்டுமெனில் , அனைத்தும் ஏற்கனவே நடந்து பதிவு செய்யப்பட்டவை. நாம் அதனை மறுபடியும் தொடர்கிறோம்.
                               

இதே விசயத்தை வேறுமாதிரி சிந்திக்கவும் முடியும்.
'='  குறியினை பயன்படுத்தி பேசும்போது... இந்த நான்காவது பரிமாணமாகிய காலத்தின் பிடியில் நிகழ்வுகளும் அதன் தொடர்புடையவர்களும் உள்ளார்கள் எனில்   ஒரு நிகழ்வு சம்பந்தப்பட்டவற்றை செயற்கையாக இணைக்கும்போது அந்த காலகட்டத்திற்குள் செல்ல முடியுமா? மீண்டும் தொடர்வோம்.


20:24 | Author: சாகம்பரி

(இது திரை விமரிசனம் அல்ல)
ஒரு ஆரம்பத்திற்காக....
  ஐந்தறிவு  - அறிவு, கேட்கும் அறிவு, தொடும் அறிவு, நுகரும் அறிவு, ருசிக்கும் அறிவு
  ஆறாம் அறிவு - பகுத்தறிவு
  ஏழாம் அறிவு - ஜெனிடிக் மெமரி (மரபியல் சார்ந்த அறிவு...? )

நான்கு பரிணாமங்கள் - நீளம்,அகலம்,உயரம்,நேரம்.
ஐந்தாவது -.....?
குறிப்புகள்: பழந்தமிழரின் அற்புதமான ஆற்றல். அதனை கையாளும் ஆழ்ந்த ரகசியங்கள் நம்மிடம்தான் இருந்தன. ஆயுதமாகவும் கையாளப்பட்டது. கால வெள்ளத்தில் மறக்கப்பட்டு புதைக்கப்பட்டுவிட்டது. அதைப் பற்றி தெரிந்து கொள்ள காத்திருங்கள்.


கேள்வி என்ன வென்றால் ஐந்திற்கும் ஏழிற்கும் என்ன தொடர்பு? இதை தெரிந்து  கொள்ள சில வேலைகளை செய்ய வேண்டும். தூசு படிந்துள்ள கண்ணாடியை துடைக்கும் வேலைதான். அதன் வழியாக பார்த்தால் எதுவும் தெரியாது. அதே போல் மேற்கத்திய நாட்டின் கலாச்சாரத்தின் பிடியிலிருக்கும் நமக்கு நாம் இழந்த ஒரு அதிஅற்புதமான விசயத்தை பற்றி புரிந்து கொள்ள சற்று சிரமமாக இருக்கும். பொருள் ஆற்றல் எனில் ஆற்றல் பொருளாகும் என்ற ஐன்ஸ்டைனின் கருத்தை ஒட்டியே இதன் விளக்கம் கிட்டுகிறது. ஆரம்பத்திலிருந்து பேசலாமா? ஆரம்பம் என்றால் முன்பிருந்து மூத்த காலத்திலிருந்தே.....

இனி ஆரம்பிக்கலாம்.
  பரிமாணம் ஒரு பருப்பொருளின் அளவை குறிக்கும் சொல். இன்னும்கூட விளக்கமாக கூறமுடியும். ஒரு பொருள் ஆக்கிரமிக்கும் இடத்தை அறிந்து கொள்ளும் கணக்கீடுகள். ஒரு பொருளின் அளவை குறிக்கும் முறை ஏன் வந்தது? வியாபாரத்தின் தேவை கருதிதான்.

அதற்கு முன் முப்பரிமாணம் நமக்குத் தெரியும். நீளம்,அகலம், உயரம்.  நான்காவது பரிமாணம் என்ன? காலம். ஒரு பொருளை குறிப்பிடும்போது அதன் அளவு மிக முக்கியம். அத்துடன் கால அளவிற்கு என்ன அவசியம் வந்தது? இதுவும் வியாபார சிக்கல்களுக்குத்தான். பண்டை காலத்தில் கடல் வழித் தொடர்புகள் வழியாகவே வணிகப்பரிவர்த்தனை நடந்து வந்தது. வணிகப்பொருளின் முப்பரிமாணங்கள் மட்டும் குறிக்கப்பட்டு வந்த காலம். ஒரு முக்கியமான சிக்கல் வந்தது. சில பொருட்கள் குறிப்பிடப்பட்டிருந்த அளவிலிருந்து மாறியிருந்தன. நீண்ட காலம் பயணப்பட்டு வந்ததால் காற்று, மழை போன்ற இயற்கை சக்திகளின் காரணமாக இந்த அளவுகள் மாறியிருப்பது தெரியவந்தது. உ-ம், சூடம். காற்று படப்பட கரைந்துவிடும். எடையும் அளவும் குறைந்துவிடும். இது போன்ற பிரச்சினைகளினால் நாலாவது பரிமாணத்தையும் குறிப்பிடும் வழக்கம் ஏற்பட்டது. அது அந்தப் பொருள் அனுப்பப்பட்ட தேதியை குறிப்பிட்டது. இந்த தேதியில் இந்த அளவுள்ள பொருளை அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டது. (இப்போதுகூட when packed என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதல்லவா?) இந்த காலமாகிய நான்காவது பரிமாணத்தை புரிந்து கொண்டால்தான் அடுத்ததற்கு செல்ல முடியும்.

வெறும் அளவீடுகளாக மட்டுமே இருந்த பரிமாணம் இன்னும் சில முக்கிய ரகசியத்தை தன்னகத்தே கொண்டிருந்ததை நாம் அறிந்திருந்தோம். ஒரு பொருள் ஆக்கிரமிக்கும் அல்லது வியாபித்து இருக்கும் அளவு  என்பதே பரிமாணம் எனில் சில கேள்விகள்...

ஒரு பொருளின் இருப்பை அல்லது வியாபிதத்தை வெறும் முப்பரிமாணமாக குறிப்பிடுவது அதனுடைய இயற்பியல் அளவீடுகள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல அத்துடன் காலத்தையும் குறிப்பிடும்போது இந்த அகண்ட வெளியில் அதனுடைய இருத்தலையும் குறிக்கிறது. ஒரு சிறு பொருளுடன் மட்டும் ஒப்பிடாமல் நாம் வசிக்கும் இந்த பூமி ,சூரிய குடும்பம், அண்டவெளி என்று பார்க்கும்போது ஒரு பெரிய ரகசியம் புலப்படும். 

  இன்று காலை பத்து மணிக்கு  என் வீட்டில் மதுரையில் இருந்த நான்  இரவு பத்து மணிக்கு சென்னையில் இருக்கிறேன், எனும்போது தற்சமயம் நான் என்ற ஒரு இயற்பியல் வரையறைக்குட்பட்ட ஒரு பொருள் மதுரையில் இல்லை என்றாகிறது. சரிதானே அப்படியெனில் இன்று காலை பத்துமணியை மறுபடியும் அடையமுடியுமெனில் நான்  மதுரையில்தானே இருக்கவேண்டும். இது சாத்தியமாகுமா?.அதாவது காலம் என்ற பரிமாணத்தில் இன்று காலை பத்துமணி, நான், மதுரை, என் வீடு ஆகிய அனைத்தும் ஒன்றாக் கட்டுப்படுகின்றன அல்லவா? இன்னும் சற்று விரிவாக அடுத்த பதிவில் பார்க்கலாம்.

21:00 | Author: சாகம்பரி










என்னவோ ஒரு தாளத்தில்
இதயம் ஓயாமல் துடிக்குது.
குழந்தையின் மழலையை...
குழலின் இனிமையை விட
ராகம் மாறாமல் கேட்குது
அவ்வப்போது தாளம் மாறி
இசையாக தன் இருத்தலை
சொல்லத் துடிக்குது இதயம்!

எண்ணங்கள் கைகூடிடும்
சில சமயம் வேகம் கூடும்.
ஆகாயத்தில் தாவி குதிக்க
அலைஅலையாய் மிதக்க
காற்றேணியில் ஏறி உலவ
தண்டவாளத்து குதிரையின்
தடதடக்கும் தாளம் வரும்.


மனது முரண்டு பிடிக்கும்
சில சமயம் சோகமாகும்!
சுவாசித்தலே சுமையாக...
எழுந்து நிற்கவே சோம்பி,
கைகளில் முகம் புதைத்து,
கண்கள் மூடி இருள் தேடி..
நத்தை அடியோசை ஒற்றி
மெதுவாக தாளம் மாறும்!

எப்போதாவது....
யாருமற்ற தனிமையில்
துயர் புதைந்த மௌனத்தில்
உணர்வுகள் ம
த்துபோய்
பசித்தீயில் வெந்துபோய்
உணவே அருமருந்தென....
யாசகம் கேட்கும் கைக்கு
பதில் சொல்லி பாருங்கள்
புதிதான தாளக்கட்டுடன்
உள்ளுக்குளேயே கேட்கும்
உலகத்தின் இனிய இசை!

அவ்வப்போது தாளம் மாறி
இசையாக தன் இருத்தலை
சொல்லத் துடிக்குது இதயம்!


20:00 | Author: Ravi
நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்.
நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரைஉண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.
                                                   
           நாலடியார்.   


1. உங்கள் நண்பனுக்கு என்ன வேண்டும் என்று தெரிந்து செய்யுங்கள்.
2. உங்களுடைய கருத்துக்களை அவர்களிடம் திணிக்காதீர்கள்
3. நட்பு உடையுமளவிற்கு எந்த விசயத்திலும் வாக்குவாதம் புரியாதீர்கள்.
4. தேவையான சமயதில் ஊக்கப்படுத்துங்கள்
5. நட்பில் பிழை பொறுத்தல் மிக அவசியம்.
6. உங்களைப்போலவே உங்கள் நண்பனும் இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்.
7. அவர்கள் நன்றாக வாழ்ந்தாலும் அல்லது நிலை தாழ்ந்து போனாலும் விட்டு விலகாதீர்கள்.
8. இரகசியம் காக்கும் தன்மை உங்களிடம் இருப்பது நட்பை பலப்படுத்தும்.
9. அவர்களுடைய தவறுகளை மென்மையாக சுட்டிக்காட்டி சரியான பாதைக்கு கொண்டு செல்ல முயற்சியுங்கள்


  இவை அத்தனையும் நல்லவன் என்று அடையாளம் கண்டு நட்பு கொண்டாடிய ஒருவனுக்காக செய்ய வேண்டும். எப்போதாவது மனிதர்கள் குணம் செயல் மாறுவது உண்டு.அந்த நிலையிலும் நண்பனை விட்டு நீங்காமல் அவனை நல்வழிப்படுத்துவது நட்பின் தன்மையாகும்.

17:41 | Author: சாகம்பரி
இந்த முறையும் நிராகரிப்பு
சென்ற முறை போலவே
வலி மிகுந்த கேள்விகள்
இப்போதும் எழுகின்றன
பசித்து அழும் பிள்ளையை
தேற்றும் தாயாக மனம்
ஆயிரம் பதில் சொல்கிறது
தோல்வியின் தடங்கள்
உள்ளே பதிந்து நின்றிட..
வெற்றிடம் உருவாகிறது
இன்றைய நிமித்தங்களும்
தோல்வி உலாவாகிவிட
சுற்றிலும் வெற்று மனிதர்!

பகல் முழுவதும் தேடலில்
சூன்யத்தை துலாவியபின்
கூடடையும் திரும்பல்கள்!
ஒவ்வொரு காலடிகளும்
முடிவுறா பாதையினை
காரிருளில் பதிப்பித்தன.
இமைமூட கண்கள் ஓய..
உறங்குவதும் சாக்காடோ?
கனவில் கேள்விகளுக்கு
ஒளிக் கீற்றாய் பதில்கள்!
எதுவோ புரிந்து போனது
கரைதட்டும் முடிவுவரை
முயற்சிக்க வேண்டும்....

விடியலில் பறவைகள்
மரத்திலிருந்து பறந்திட,
சோகமாய் பதிந்திருந்த
கடற்கரையின் தடங்களை
நேற்றைய இரவு அழித்திட,
இன்றைக்கு எழுதிடப்போகும்
வெற்றி வரிகளுக்காக புதிதாய்
வெளிச்சத்தின் வீரியத்துடன்
மணல்வெளி காத்திருந்தது.



18:14 | Author: சாகம்பரி

கட்டங்களும் எண்களுமான
நாட்காட்டியில் ஊருகின்ற
வாழ்வியலின் நகர்வுகள்!
கட்டத்தினில் குறிப்பிட்ட
எண்களும் நிறங்களும்
நாளின் தன்மை கூறாது.

ஒரு ஏணியில் ஏறுவதோ..
பாம்புகடியில் சிக்குவதோ..
நொடிகளின் விளையாட்டு!
ஏணியின் படிகட்டுகளும்
பாம்பின் நீண்ட உடலும்
மாதக்கணக்கில் நீளலாம்!
நொடிகள் யுகங்களாகும்
யுகங்கள் நொடிகளாகும்
பரமபத விளையாட்டில்
பகடையாய் மாறுகிறோம்!

ஏணியிலிருந்து விழவும்,
பாம்பு தலை மிதிக்கவும்,
வித்தை தெரிந்தவனுக்கு
விளையாட்டில் வெற்றி!
ஏதும் கிட்டாதவனுக்கும்
அடுத்த கட்டம் உண்டு!
ஆனால்,
ஏணியை பாம்பெனவும்
பாம்பை ஏணியெனவும்
விதிமுறையை மாற்றி
விளையாடுபவனுக்கோ...
கட்டமே சிறையாகிவிடும்!



15:58 | Author: Ravi
இன்றைக்கு முதியோர் தினமாக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. உண்மையில் து முதியோருக்கான தினம் அல்ல, அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை நினைவுபடுத்தும் தினம். ஒரு உறுதி எடுத்துக் கொண்டு, ஏதாவது ஒரு வகையில் அவர்களுக்கு உதவ ஆரம்பிக்கலாம்.
 
நம்மையும் மறக்க வைக்கும் உழைப்பில் சில வேளைகளில் கடமையாக செய்திருப்போம். "சாப்பிட்டீர்களா? பணம் ஏதும் வேண்டுமா? மருத்துவரை பார்த்தாகிவிட்டதா?" போன்றவை. இன்றைக்கு இவற்றில் நாம் பங்கெடுத்துக் கொள்ள முயலலாம். சாப்பிட்டீர்களா? என்று கேட்பதுடன், உடன் அமர்ந்து உணவருந்த வைப்பது, சாதரணமாக உரையாடுவது போன்றவற்றை செய்யலாம்.

தொலைகாட்சி நமக்கு தேவையில்லாத ஆறாவது விரலாக இருக்கும், ஆனால் பெரியவர்களுக்கு ஞாபக சக்தியை தூண்டும் சிறு பயிற்சியாகிவிடுகிறது. அதற்கான வசதிகளை மறுக்காதீர்கள்.

வயதான காரணத்தால் கண் பார்வை மங்குதல், உடல் தெம்பில்லாமல் போவது ஏற்படலாம். அதனால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் சுற்றுபுறத்தை கையாள குடும்பத்தினர் முயற்சியுங்கள்.

வீட்டில் முக்கியமான விசேசங்கள் நடைபெறும்போது, அவர்களின் கருத்திற்கு மரியாதை கொடுங்கள்.

- அவர்கள் நடக்கும்போது தடுக்கிவிடாமல் வழியில் மிதியடி போன்றவற்றை அகற்றிவிடுங்கள். தலைவாசலில் மட்டும் பயன்படுத்தினால் போதும். ஈரம் படிந்திருக்கும் குளியலறை போன்றவற்றின் வாசலில் நாரினால் செய்யப்பட்ட மிதியடிகளை போடுங்கள், ரப்பர் மிதியடிகள் வழுக்கிவிடும். அவர்கள் நடக்கும் வழியில் சுவற்றில் பிடிமானத்திற்காக கைப்பிடிகளை பதிக்கலாம். தடுமாறும்போது பிடித்துக் கொள்ள உதவும்.

- சமையலறையின் அருகில் அவர்களுக்கு அறை ஒதுக்க வேண்டாம். அதீத மணம், நுரையீரலை பாதிக்கும். இருமலை தூண்டும்.

- அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், கைக்கு எட்டக் கூடிய இடத்தில் டார்ச் லைட் போன்றவற்றை வையுங்கள். எப்போது வெளிச்சம் குறைவான மின்விளக்கு அவர்கள் அறையில் எரியட்டும்.

- முதலுதவிப் பெட்டியும் தயாராக இருக்கட்டும்.

- வேலையாட்கள் அவர்களின் உதவிக்காக வைத்திருந்தாலும், சில வேலைகளை அவர்களுக்கு நீங்கள் செய்யுங்கள். இது
வேலையாட்களை அவர்களிடம் மரியாதையாக நடக்க வைக்கும்.

நம் வீட்டில் உள்ளவர்கள், அருகில் உள்ளவர்கள், தெரிந்தவர்கள் என நம்மை சுற்றியுள்ள முதியோருக்கு, தேவையான சிறு உதவிகளை செய்வது என்ற உறுதி எடுக்கலாம் உ-ம் முதியோர் ஓய்வூதியம் வாங்க உதவுவது. குடும்பத்தினரிடையே அவர்களுக்கு ஏற்படும் பிணக்குகளை தீர்க்க முனைவது.

சிறியவர்களுக்கு பெரியவர்களுக்கு செய்ய வேண்டிய சிறு உதவிகளை கற்றுத் தரலாம். இதன் மூலம் அவர்களை மதிக்கும் பழக்கம் வளரும்.

உங்களுடைய தயவு ஏதும் தேவைப்படாத நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு சிறு பரிசுப் பொருட்கள் தந்து வாழ்த்து பெறுங்கள்.

வார இறுதியில் முதியோர் இல்லங்களுக்கு சென்று தனிமையில் இருக்கும் ஆதரவற்ற பெரியோரிடம் உரையாடுங்கள். சதுரங்கம் போன்ற உடல் உழைப்பு தேவைப்படாத விளையாட்டுகள் அவர்களுடன் விளையாடலாம். அவர்கள் இவற்றை மிகவும் விரும்புகிறார்கள்.

சில முதியோர் உடலளவிலும் மனதளவிலும் தன்னை உற்சாகமாக வைத்திருப்பார்கள். அவர்களை பார்த்து பொறாமைப்படாமல், கிண்டல் செய்யாமல் மதித்து நடங்கள். சில வயதான தம்பதியினரிடையே மிகுந்த அன்னியோன்யம் இருக்கும், அதனை விமர்சிப்பது நல்லதல்ல. அவர்களுக்கு இனிமையான வாழ்க்கையை தந்த கடவுளை நினைத்துக் கொள்ளுங்கள். நமக்கு முன்னுதாரணமாக கொள்ளலாம். எனக்கு தெரிந்து தொன்னூறு வயது பாட்டி ஒருவர் அசைவம் இல்லாமல் உணவை விரும்ப மாட்டார்.   "சாவப்போறவளுக்கு  நாக்குக்கு  ருசியா தரமாட்டேங்குறாங்க"  என்பார். ஆனால். இறந்து போவதை நினைத்து மிகவும் பயப்படுவார். அவர் சொல்லும் காரணத்தை கேளுங்களேன் - இறந்த பின் அவர்கள் வீடு தீட்டு வீடாகிவிடுமாம். "ஒரு வருசத்திற்கு ஒரு விசேசமும் நடக்காது". அதிசயிக்கத்தக்க விதத்தில் அவருடைய குடும்பத்தினர் சிரித்துக் கொண்டே அவரை குறைவில்லாமல் கவனிக்கிறார்கள்.




இன்றைக்கு ஏதாவது உறுதி எடுக்கொள்வோம். இன்றைக்கு நடப்படும் சிறு விதைகள் மரமாக வளர்ந்து, நிழலும் பசுமையும் நிறைந்த ஒரு சோலையாக மாறி நமக்காக காத்திருக்கும்.


13:33 | Author: பிரணவன்
அந்நாளில் தேடுதல் என்ற ஒன்றே மனித வாழ்வாதரங்களை பெரிதும் பூர்த்தி செய்வதாக அமைந்தது. உறைவிடம் அற்ற மனிதன் உணவை மட்டுமே தேடினான். காடுகளுக்குள் தன் வாழ்க்கையை தொடங்கிய மனிதன் அவனுக்கு உணவு மட்டுமே பிரதானமாக இருந்தது, பின் ஆற்றங்கரைகளில் குடியேரினான், நெருப்பு, சக்கரம் என அவனது தேடலும் கண்டுபிடிப்புகளும் தொடர்ந்து கொண்டே சென்றன. ஆரம்பம் முதலே விலங்குகளை வேட்டையாடி உணவிற்காக மட்டுமே பயன்படுத்திவந்த அவன் பின் நாளில் அதனை தன் வளர்ப்பு பிராணியாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டான். முதலில் காட்டு ஆடு, பின் யானை பிறகு மாடு என பல வலிய மிருகங்களை தன் இயல்பிற்கு கொண்டுவந்தான்.
                                கிரிஸ்த்து பிறப்பதற்கு 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் கோதுமை மற்றும் பார்லி பயிரிட்டு வளர்த்ததாக சொல்லப்படுகின்றது, கி.மு 8000 முதல் 6000 ஆண்டுகள் வரையிலான காலகட்டங்களில் நெல், பருத்தி போன்றவையும் பயிரிடப்பட்டதாக சொல்லப்படுகின்றது, இந்த காலகட்டத்தில் தான் யானையும் வீட்டு விலங்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
                                 இயற்க்கையை மட்டுமே சார்ந்த இந்த வாழ்வில் நீர்பாசனம் என்ற ஒன்று கி.மு 4500 ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றது.  பின் இதையடுத்த வேதகாலம், கிரிஸ்த்துவ காலம், போன்ற காலங்களிலும் கூட மக்களில் வாழ்வாதரம் என்பது விவசாய உற்பத்திசார்ந்து தான் அமைந்தைருந்தது. பின் நாளில் மனிதன் கடுமையான உழைப்பில் இருந்து விலகி சுகமாக வாழ்வது என்பதற்கு பழகத்தொடங்கிவிட்டான்.
                                விவசாயம் என்பது பிரதானமாக இருந்த காலம் மாறி இயந்திரத்தொழில்,  அணு, வாகனம், சாயத் தொழில், மின்உற்பத்தி, குளிர் பாணங்கள், மது, கேளிக்கை என அத்தியாவசியம் சாந்துஅல்லாத பல தொழில்கள் உருவெடுக்க தொடங்கிவிட்டன.
                              முன் நாளில் அத்தியாவசியம் என கருதப்பட்டது உணவு, உடை, இருப்பிடம், இந் நாளில் அப்படியா ? எல்லாவற்றிலும் செயற்கையை புகுத்திவிட்டோம். செயற்கை குளிர்பாணம், பாலி எஸ்டர் ஆடைகள், உரைகள், பாதுகாப்பு பெட்டகங்கள், முக்கியமாக தொலைத்தொடர்பு, அணு ஆயுதம் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.
                           மனிதனின் தன் நிறைவு என்ற ஒன்றே இந் நாளில் இல்லாமல் போய்விட்டது. நாணயங்கள் சங்க காலம் முதலே பயண்பாட்டில் இருந்ததாக சொல்லப்படுகின்றது, அவைகள் ஆட்சியாளர்களில் அடையாளங்களை சுமந்த படியே இருந்ததே தவிர பெருவாரியாக புழக்கத்தில் இல்லை, அதாவது சாமானியர்களை சென்றடையவில்லை, பண்டமாற்று முறையே பெரிதும் பயன்பாட்டில் இருந்தது, பண புழக்கம் என்பதே ஆங்கிலேய ஆட்சியிலேயே கொண்டுவந்தாதாக சொல்லப்படுகின்றது, ஆனால் இந்தியாவில் மூன்று இடங்களில் நாணயங்கள் அச்சடிக்கும் தொழிற்சாலை அந் நாளில் இருந்து இன்றளவும் செயல் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
                       இந் நாளில் உற்பத்தியின் மதிப்பு குறைந்து நாணயத்தின் மதிப்பு மட்டுமே அதிகரிக்க தொடங்கிவிட்டது. நெல் உற்பத்தியில் ஒருவர் ஒரு ரூபாய்க்கு 25காசு மட்டுமே லாபம் அடைகின்றார் என்பது மறுக்க முடியாத உன்மை. ஆனால் விவசாயம் அல்லாத பிறதொழிலில் ஈடுபடுபவர்கள் அடையும் நிகரலாபம் 3 முதல் 5 மடங்கையும் தாண்டி செல்கின்றது. இங்கே வாங்கி விற்பவர்களுக்குத்தான் அதிக லாபம்.
                       மனிதனின் அத்தியாவசியத்திற்காக வேலை செய்பவன் தன் உடல் உழைப்பையும் கொடுத்து குறைவான லாபத்தையே அடைகின்றான், மாறாக ஒரு தொலைதொடர்பில் வேலை பார்ப்பவனோ, கணினியில், சொகுசு வாகனங்கள், பொருட்கள், மதுபாண உற்பத்தி என இதன் பட்டியலும் நீண்டு கொண்டே செல்கின்றது. இயற்கை பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் மீதான கவனம் குறைவுதான்.
                          விவசாயம் மீதான கவனம் குறைந்து, சொகுசு வாழ்க்கை மீதான கவனமே அதிகரித்துவிட்டது. . .

23:47 | Author: பிரணவன்
வறட்சி மாவட்டங்கள் என முற்காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ் நாட்டின் தென்மாவட்டங்களில் வளர்க்கப்பட்ட மரம் தான் கருவேல மரம், பெரும்பாலும் கரி மற்றும் விறகு எரிபொருளுக்காக இந்த மரம் வளர்க்கப்பட்டது,. வறட்சி காலங்களில் மக்களின் வருவாய்க்காக இந்த மரங்கள் வளர்க்கப்பட்டது. இன்று தமிழகத்தின் வறட்சிக்கு இதுவே முக்கிய காரணம் ஆகிவிட்டது. ஏனெனில் இம் மரத்தின் தன்மை அப்படி இதன் வேர்கள் மண்ணின் ஆழம் வரை சென்று அங்கு இருக்கும் நீரை உறிஞ்சும் தன்மை கொண்டவை, இதன் அருகில் எந்த வித சிறு செடியையும் வளரவிடாது, முக்கியமாக இதை வேரோடு பிடுங்கினால் மட்டுமே அழிக்க முடியும், ஆனால் அது அவ்வளவு எளிதல்ல, இதன் வேர்கள் அதிக ஆழம் வரை செல்லக்கூடியவை.

                                                 ஆனால் கருவேலம் ஒரு மரம், இப்ப விஷயத்திற்கு வருவோம், அடக்கவிலை 40 பைசாவிற்கும் குறைவாக தயாரிக்கப்பட்டு 2ரூபாய் முதல் 4ரூபாய் வரை விற்கப்படும் தண்ணீர் பைகள். மற்றும் 13 ரூபாயை தாண்டிய ஒரு லிட்டர் தண்ணீர் புட்டிகள், இதற்கு காரணம் எல்லாம் பொருளாதாரமயமாக்கப்பட்ட பின், தண்ணீரும் விற்பனைக்கு வந்துவிட்டது.
                           
                            இதுவும் விஷயம் அல்ல, இவைகள் எங்கு தயாரிக்கப்படுகின்றன. அதிக நீர்வளமிக்க இடங்களில் 500 முதல் 1500அடிக்கு மேல் ஆழ்துளை கிணறு உருவாக்கப்பட்டு அங்கு இந்த தண்ணீர் புட்டிகள் ( நிரப்பப்படுகின்றன) தயாரிக்கப்படுகின்றன. இந் நிலப்பரப்பைச் சுற்றி இருப்பது விவசாய நிலங்கள். இங்கே உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க நிலத்தடி நீர் குறைந்து கொண்டே செல்கின்றது, பின் விவசாய நிலங்கலும், வறட்சி நிலமாகின்றன.

                                  கருவேல மரத்தை பற்றி ஏன் நான் முதலில் சொன்னேன்னு தெரியுதா, சொல்றேன், அவைகளாவது தனக்கு தேவையான அளவு தண்ணீரை மட்டும் எடுத்துக்கொண்டு மீதம் இருக்கும் தண்ணீரை மற்ற தாவரங்களுக்கு விட்டுவிடுகின்றன. இதன் செயல்முறைகள் இயற்கையின் வசம் இருகின்றன. ஆனால் மனிதால் உருவாக்கப்பட்ட தாண்ணீர் புட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள், எந்த நிலையிலும் தன்நிறைவு அடைவதில்லை. முடிவில் அந் நிலம் வறட்சியாகின்றது.

                                   நாம் குடிக்கும் தண்ணீருக்கு நாமே பணம் கொடுக்கின்றோம். நாமே நம் நிலத்தையும் வறண்ட பூமியாக்குகின்றோம். இந்த நாசகார வேலையை பல வெளி நாட்டு நிருவணங்கள் நம் நாட்டிலையே துணிச்சலாக செய்கின்றன. இவர்கள் போதாது என்று நம்மவர்கள் வேறு இந்த தொழிலை செய்கின்றனர். நம் தலையில் நாமே மண்னை வாரி போட்டுக்கொள்கின்றோம்.

                       தற்போதைய வாழ்விற்காக நம் எதிர்காலத்தை இருள் அடித்துக்கொண்டிருக்கின்றோம், இம்மாதிரியான உற்பத்தி ஆலைகள் வளமிக்க கிராமபுறங்களில் ஆரம்பிக்கப்பட்டு வருகிறன. மாறாக கடல் பகுதியை சுற்றியுள்ள நில பரப்புகளில் மட்டும் இம்மாதிரியான தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டால் நல்லது. . . 
14:22 | Author: சாகம்பரி
ஆதி காலத்தில் இருந்து தொடங்குவோம். சில பெருமைமிக்க செய்திகளை தருகிறேன். கி.முக்களிலேயே அறிவியல், கணிதம், வானவியல், மருத்துவம் ஆகியவற்றில் சிறந்திருந்த நம் மூதாதையர்களின் சிறப்புமிக்க குறிப்புகள் வேதங்களிலும், சித்தர் பாடல்களிலும்  ஓலைச்சுவடிகளாக பதியப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு தருகிறேன்.

அறிவியல் :

* சிறப்பான மருத்துவ குறிப்புகளை சித்தர்களின் ஓலைச்சுவடிகளில் காண முடிகிறது. அகஸ்த்தியர் - மூலிகை மருத்துவத்திலும்(microbiology), போகர் - கனிம மருத்துவத்திலும்(chemical components), புலிப்பாணி விலங்குகளை (biotechnology) பயன்படுத்திய மருத்துவ முறைகளிலும் சிறப்பான குறிப்புகள் தந்துள்ளனர். கதிரியக்க குறிப்புகளையும், அணு அளவில் மாற்றங்களை நிகழ்த்தக் கூடிய ரசவாத குறிப்புகளையும் சுவடிகளின் காணமுடிகிறது கி.மு 3000 அணுவின் அமைப்புகளை மாற்றி வேறு ஒரு கனிமமாக மாற்றும் வித்தையை போகர் குறிபிட்டுள்ளார்.


*. இரத்தும் உறிஞ்சும் அட்டைகளை(leach) வைத்து இப்போது ஆராய்ச்சிகள் உலக அளவில் நடைபெறுகின்றன. முதல் முதலில் 1020ல்தான் இது பற்றிய ஆராய்ச்சிகள் ஆரம்பித்தன. ஆனால் 2500 வருடங்களுக்கு முன்பே ஆயுர்வேதத்தில் இது பற்றிய குறிப்புகள் உள்ளன. மருத்துவ கடவுளாக கருதப்படும் தன்வந்திரி பகவானின் கையில் மருத்துவ உபகர்ணங்களுடன் leach உள்ளது.

* அகஸ்திய சம்ஹிதா என்ற நூலில் ஒரு மின்சார பெட்டரியை தயாரிக்கும் முறை சொல்லப்பட்டுள்ளது.

வானவியல்
* ரிக் வேதத்தின் குறிப்புகளை கொண்டு கி.பி 1315ல் சாயனாச்சார்ய என்ற விஜய நகரப்பேரரசின் அறிஞர் ஒளியின் வேகத்தை குறிப்பிட்டுள்ளார். "ஓ, சூரிய கடவுளே அரை  நிமிஷாவில் 2022 யோசனைகள் கடந்து வரும் உன்னை வணங்குகிறேன்" ஒரு யோசனை என்பது 9 மைல்கள், நிமிஷா என்பது 8/75 வினாடிகள்.. அவருடைய குறிப்பின்படி ஒலிவேகம் -186,413.22 மைல்/வினாடி. நவீன கணிப்பு 186,300மைல்கள்/வினாடி.

*சூரிய கதிர்களில் ஏழு வர்ணங்கள் உள்ளதை கி.மு 1500லேயே ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதையே ஏழு குதிரைகளாக தேரில் பூட்டியுள்ளதாக காட்டினர். நவீன கருத்தின்படி 1671ல் நியூட்டன் முதன்முதலில் ஸ்பெக்டரம் என்று குறிப்பிட்டார்.

* வேதங்களின்படி,  ஒரு பூஜையினை செய்வதற்குமுன் சங்கல்பமாக கூறப்படுகின்ற வாக்கியத்தில் உலகம் ஆரம்பித்த நாலில் இருந்து இன்றைய நாளினை குறிக்கிறோம்."த்விதீய பரார்த்தே, ஸ்வேத வராககல்பே, வைவஸ்வத மன்வந்த்ரே, அஷ்டாவிம்ஸ்திதமே, கலியுகே" என்று வரும்.  இதன்படி 
ஒரு மகாயுகா = 4 யுகங்கள் = 43,20,000 வருடங்கள்
ஒரு மன்வந்திரம் = 30,84,48,000 வருடங்கள் (71 மகாயுகா+1 க்ரேதா யுகம்) 
ஒரு கல்பம் = 432,00,00,000 (14 மன்வந்திரம்+1 க்ரேதா யுகம்) அல்லது 1000 
                                                                                                                                 மகாயுகம் 
ஒரு  கல்பம், இதுதான் உலகத்தின் வயதும்.

     நவீன முறைப்படி 454,00,00,000 ரேடியோமெட்ரிக் முறையில் கணிக்கப்பட்ட வயது. பூமியுடனேயே பிறந்ததாக சொல்லப்படும் நிலவின் மாதிரி கற்களிலும் ஆராய்ச்சி செய்து இது உறுதிபடுத்தப்பட்டது.


            
கணிதம்
கி.மு -3000  - நீளம், எடை ஆகியவற்றை குறிக்கும் அளவீடுகள் வரையறுக்கப்பட்டன.
கி.மு 1500 - வேதகாலம் - வானவியல் கொள்கைகள், கணித வரைபாடுகள், எண்கள் ஆகியன உருவாக்கப்பட்டன.
கி.மு 200  - பூஜ்யம் குறிப்பிடப்பட்டது. அதுவரை நேர்மறை எண்கள்(+) மட்டுமே குறிப்பிடப்பட்டன, எதிர்மறை எண்களையும்(-) குறிப்பிட முடிந்தது.
கி.பி 400 - 1200- கணித சாஸ்திரத்திற்கான முக்கியமான காலகட்டம். கணிதவியல் வல்லுனர்கள் ஆர்யபட்டா, பாஸ்கரா, ஸ்ரீதரா ஆகியோரின் காலம்.
               

ஆர்யபட்டா ஒரு நாள் என்பது 23 மணிகள்,56 நிமிடங்கள், 4 வினாடிகளும் 0.1 விகிதத்தையும் கொண்டது என்று கணித்தார்.  
நவீன கணக்குப்படி 23 மணி,56 நிமிடம்,4 வினாடி மற்றும் 0.091 விகிதம் என்று கணிக்கப்பட்டுள்ளது.அவருடைய ஆர்யபாட்டியா என்ற நூலில் ஒவ்வொருரு கோள்களின் தொலைவும், அது சூரியனை சுற்றி வரும் நாட்களும் நவீன கணிப்புடன் ஒப்பிடும் அளவிற்கு மிகச்சரியாக கூறப்பட்டுள்ளன.

யோகா: இன்றைக்கு உலகம் முழுவது கொண்டாடிக் கொண்டிருக்கும் யோகாசன முறைகள் பதஞ்சலி முனிவரால் உருவாக்கப்பட்டன. இவர் கி.மு 147ல் வாழ்ந்தவர்.

காஷ்யப ரிஷி - முதன்முதலில் அணு என்ற ஒன்றை குறிப்பிட்டார். அணுவையும்(atom) பிளந்து பரம அணு (ந்யூட்ரான்?) என்று ஒன்று உள்ளதையும் குறிப்பிட்டார்.

                                                                                அடுத்த பதிவில் இன்னும் பார்ப்போம்.
Thanks to Hindusutra.com

12:20 | Author: சாகம்பரி

தீரத்தி லேபடை வீரத்திலே-நெஞ்சில்
      ஈரத்தி லேஉப காரத்திலே
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
      தருவதி லேஉயர் நாடு
                                                                                                              -மகாகவி

        நம் அன்னைபூமியின் தொன்மையையும் உயர்வையும் எத்தனையோ பாடல்களும், உரை நடைகளும் எடுத்துரைத்துள்ளன.  இந்த தேசத்தின் பெருமை அதன் வீரமும் ஞானமும் மிக்க வரலாறு மட்டுமல்ல, அதன் மைந்தர்களாகிய நம்முடைய உயரிய சிந்தனைகளும், பேணி வளர்த்த கலாச்சாரமும்தான். உண்மையில் இன்றைக்கு தலைவிரித்தாடும் ஊழலும், லஞ்சமும் பாரத மண்ணில் விளைந்தவை அல்ல. அந்நியர் விதைத்துவிட்டுப் போனது. அதனை தூக்கி எறிவது நம்மிடம்தான் உள்ளது. உரத்து பேசுவதாலோ, சினம் கொண்டு எழுதுவதாலோ இவற்றை துரத்த முடியாது. சட்டங்களோ அவற்றிற்கான தண்டனைகளோ இவற்றை வேரறுக்க முடியாது. நல்லதை விதைப்பதும் பேணி வளர்ப்பதும் நம் கையில்தான் உள்ளது. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இவற்றை கடைபிடித்தாலே போதும். நம் தேசத்தை எத்தனை கேலி பேசினாலும் அழுத்தமாக மறுக்கமுடியாத ஒரு உண்மை உலக அளவில் பயமுறுத்துகிறது. என்றைக்காவது இந்தியா வல்லமை மிக்க தேசமாக மாறும் என்பதே அது.

       இன்றைக்கு நம் பாரத மாதா தளர்வுற்று இருக்கிறாள். ஏனென்றால், நம்முடைய தேசத்தின் வலி மிகுந்த வரலாறும், பெருமை மிக்க ஆக்கங்களும் இன்றைய இளையவர்களுக்கு தெரிய வைக்கப்படவில்லை. சுதந்திர தினம் ஞாயிற்றுக் கிழமையில் வரவில்லை என்ற மகிழ்ச்சிதான் மிகுந்து வருகிறது. செவி வழிச்செய்திகளாக அடுத்தடுத்த தலைமுறைக்கு மாற்றப்பட்டு வந்த மண்ணின் மரபும் வீரமும் ஏதோ ஒரு கட்டத்தில் நூலறுந்து போய்விட்டது போலும். மனம் கூசாமல் தாய் நாடு தரமிழந்து விட்டதாக பேசுகின்றனர்.

       ஒரு இளைஞன் பட்டி மன்றத்தில் பேசுகிறான் "வெறும் பழம் பெருமை பேசிக் கொண்டிருக்கிறோம். அது நம்முடைய முன்னேற்றத்திற்கு கால் காசு பெருமானம் கூட தாராது. வெள்ளையர்கள் நம்மை ஆண்டார்கள். ஆமாம், அதனால்தான் சிறப்புமிக்க இருப்புப்பாதை கிட்டியுள்ளது. நிறைய பாலங்கள் அவர்கள் கட்டியவைதான். இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்திருந்தால் இன்னும் முன்னேற்றம் கண்டிருப்போம்.... " இதற்கு கை தட்டல் வேறு கிட்டியது. அது அவனுடைய சிந்தனையில் உதித்தல்ல. பாலம், அணைக்கட்டு, இருப்புப்பாதை போன்றவற்றை ஆங்கிலேயர்கள் கட்டிய காலத்தின் நிலமையை இளையவர்களுக்கு சொல்லிப் புரியவைக்க தவறி விட்டோம். 80 சதவிகித வரி விதிப்பில் இந்தியர்களை பரதேசிகளாக்கிவிட்டு அவர்கள் கொண்டு சென்ற வரலாறு மறக்கப்பட்டு விட்டனவே.

      நம்முடைய வரலாற்று நாயகர்கள் ஜாதிய ரீதியில் அடையாளம் காணப்பட்டு உருமாற்றம் அடைந்து விட்டனர். உண்மையில் இது போன்று ஒரு புதிய கோலம் பெறப்போகிறோம் என்று அவர்கள் நினைத்துகூட பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களுடைய அன்றைய சிந்தனையை ஆக்கிரமிப்பு செய்திருந்த தாய் மண்ணின் பெருமையும் அதனை காக்கும் கடமையுணர்வும் மறக்கப்பட்டு வருகின்றன. ஜாதி, மதம், இனம் ஏற்கனவே இங்கு இருந்ததுதான். அதெல்லாம் ஒருபோதும் ஒற்றுமையை குலைத்தது இல்லை. வேறு வழியில் வெற்றி கொள்ள முடியாத அன்னிய சூழ்ச்சிக்காரர்கள் அன்றைக்கும் இன்றைக்கும் இதைத்தான் ஆயுதமாக்கினர்.

ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில்
      அன்னியர் வந்து புகல்என்ன நீதி?-ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள்
      சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ? . 
என்ற பாரதியின் வார்த்தைகள் உண்மையின் உறைவிடமாக நின்று ஒன்றுபட்டு நாட்டின் விடுதலை கீதமாக ரீங்கரித்தது. விடுதலையையும் பெற்றோம்.

     இன்றைய நிலையிலிருந்து இன்னும் நிலை பிறழாமல் நம் தேசத்தை உணர்ந்து  மீட்டெடுக்கும் கடமை நமக்கு உள்ளது என்பதை உணர்வோம். இந்த தலைமுறையிலோ அல்லது அதற்கு முந்தைய தலைமுறையிலோ தொடர்பு அற்றுவிட்ட தொன்மை பூமிக்கு ஒரு பந்தம் உண்டாக்குவோம். நினைவுகளாய், சிதிலங்களாய் மாறிக் கொண்டிருக்கும் பெருமை மிக்க வரலாற்றினை மீண்டும் தொடர்வோம்.  மொழி, இனம், மதம் வேற்றுமைகளை தாண்டி நம் தேசத்தின் பெருமையினையும், பெருமை மிக்க மைந்தர்களையும் மீண்டும் அடையாளம் காட்ட இந்த தொடர் ஆரம்பிக்கிறது.                                          
    
    அடுத்த பகுதி ஆதி காலத்திலிருந்து ஆரம்பிக்கிறது. கொஞ்சம் பழம் பெருமை பேசுவோம் .

பாரத தேசமென்று பெயர் -2
17:25 | Author: சாகம்பரி
 
புதிய வானத்தில் உயிர்ப்புடன்
    தானாவே சிந்தித்து பறக்கவே
தோளில் முளைத்த சிறகுகள்
   மறைந்தே போனதும் புரிந்தது...
கால்கள் தரைத்தட்டி சொன்னது
   கனவு மரத்தின் கனிகள் கைக்கு
எட்டிவிடும் தொலைவு இல்லை!

தலையை கோதி வருடியோ
    பிடறியில் பிடித்து தள்ளியோ
ஏதோவொரு விசை வடிவில்
    வந்தது வழுக்குமரப் பயணம்!
கண்கட்டியே நகர்ந்த நாட்களோ
    தொலைத்தூரத்து தேடல்களில்
சிரிப்பும் அழுகையும் கடந்தன!

சொல்லி வைத்த கதைகளோ,
   ஊட்டி வளர்த்த நெறிகளோ,
கற்றுத் தெளிந்த சாத்திரமோ,
   தனித்து நீண்ட பாதையில்
பாதி வழி காட்டி பரிதவிக்க...
   நினைப்பிற்கும் நிஜத்திற்கும்
கானலின் தூரம் இடையிட்டது !

மனம் மயங்கி மதியிழந்திட,
  மரத்தடியோ வேறு எங்கோ..
இரவிலோ வேறு எப்போதோ...
  சட்டென ஞானம் தோன்றியது,
கனவு மட்டுமே கண்டுகொண்டு
  வரைபடத்தில் பயணிப்பதால்
சேர வேண்டிய இடம் வாராது!


10:22 | Author: சாகம்பரி

"வெள்ளமா? வாசலையும் தாண்டி உள்ளே வந்துவிடுமோ?". வெள்ளப்பகுதிகளை பத்திரிக்கைகளில் பார்த்த நினைவு வர, நானும் என் சகோதரியும் கலவரமானோம். வீட்டினுள்ளே ஓடி சென்று அம்மாவிடம் பதறலும் உதறலுமாக சொல்ல, அம்மாவோ ஆபாத்பாந்தவனாக அப்பாவைத் தேடினார். எங்கேயோ சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் (புல்லட்டாக்கும்...) வந்திறங்கிய அவருக்கு கடும் பசிபோலும். "சாப்பாட்டை எடுத்து வை" என்றுவிட்டு முகம் கழுவ சென்றுவிட்டார்.

திருவள்ளுவரின் வாசுகிக்கு பிறகு கணவர் சொல்லுக்கு மறுச்சொல் பேசாத புண்ணியவதியாக (சில சமயங்களில் வார்த்தைகளையே பயன்படுத்தாமல், அப்பாவை 'விசையுறு பந்தே''ன துரத்திய வல்லமை மிக்கவர் அவர் என்பதை குறிப்பாக சொல்ல விரும்புகிறேன்.) உணவு பரிமாறினார். தெருவில் 'அறிவி'ன் புண்ணியத்தால் குதிரை வண்டிகளும் ஆட்டோக்களுக்கும் பறக்கும் ஓசை எங்கள் வயிற்றை கலக்கியது. உணவு முடிக்கும் தருவாயை எதிர்பார்த்து காத்திருக்க, "வத்த குழம்பு பிரமாதம். இன்னும் கொஞ்சம் போடு" என்ற தந்தையின் புகழாரம் அம்மாவை மகிழ்ச்சியுற வைக்கவில்லை. தயிர் சாதத்தில் தந்தையின் கைகள் விளையாடிய சமயம் அம்மா விசயத்தை ஆரம்பித்தார். (அம்மாடியோ, தாய்க்குலம் வாழ்க!)

"வெள்ளம் வராத இடமென்றால் காஜாமலைக்கு சென்றுவிடலாம். உயரமான பகுதி என்பதால் வெள்ளம் வராது. அங்குதான்  சிவாண்ணா வீடு இருக்கே" என்று பதறாமல் திட்டமிட்டு வயிற்றில் இருந்த புளியை பாலாக மாற்றினார்.  அவர் தொடர்ந்து "ஆனால்..." என (கவனிக்க, இந்த இடத்தில் மறுபடியும் பால் புளியானது) "விசயம் உண்மையா என அரசு செய்தி நிறுவனத்திற்கு போன் செய்து கேட்டு வருகிறேன்" என்று விட்டு அருகிலிருந்த தபால் அலுவலகத்திற்கு சென்றுவிட்டார். அப்போதெல்லாம்,  தபால் அலுவலகத்தில் மட்டும்தான் தொலைப்பேசி வசதியிருக்கும். 

தசாவதாரம் படத்தில் வரும், கரைகாணா வெள்ளத்தை எதிர்பார்த்து, பெருமாள் வாய்க்குள் போய்விடுவோமோ என்ற பயத்தில் பத்து வயது பாலகனாக நான் நின்றபோது, தீபாவளிக்கு வாங்கிய புது பட்டுபாவாடையை அணிந்து கொண்டு அசைந்தாடி வந்தாள் என் அக்கா. "எல்லாத்தையும் வெள்ளம் அடிச்சிட்டுப் போனலும் புது டிரஸ்ல போலாம்ல?" என்றாள். என்னுடைய மாம்பழக் கலர் கோ-ஆப்டெக்ஸ் புது கால்சட்டை நினைவிற்கு வந்து - பட்டுபாவாடை தைத்த டெய்லரை சபித்தது.

ஒரு வழியாக அப்பா வந்து "அதெல்லாம் பொய்" எனவும், நாங்கள் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்து விட்டோம். "இருந்தாலும், உங்கள் நிம்மதிக்காக நாம் பெரியப்பா வீட்டிற்கு செல்லலாம். ஆட்டோவிற்கு சொல்லிவிட்டேன்" என்று முடிக்கும் முன் ஆட்டோ வந்துவிட்டது. வெளியில் இருந்த மயான அமைதி பயமுறுத்த, எந்தப் பொருளையும் எடுத்துக் கொள்ளாமல் கடைசியாக வெளியேறினோம். அப்பா வீட்டை பூட்டிவிட்டு சற்று பொறுத்து வருவதாக கூறி விட்டார். தயக்கமாக பார்த்த அம்மாவிடம் "முன்னே போம்மா, எல்லாத்தையும் செக் பண்ணிட்டு வரேன். கண்டிப்பா வந்திடுவேன்" என்று போர்க்கள வீரன் போல கூறினார். எனவே நாங்கள் மட்டும் ஆட்டோவில் ஏறினோம்.

செல்லும் வழியெல்லாம், ஆட்டோக்காரரும் அனைவரையும் காஜாமலைக்கு வரச்சொல்லி தகவல் சொல்லிக் கொண்டே வந்தார். அகஸ்தியர் சென்று சமன் செய்ததுபோல மொத்த திருச்சியும் அங்கு குடிபெயர்ந்தால் , அது தாழ்வுப்பகுதியாகிவிடாதா? என்ற  கவலை எங்களுக்கு வந்துவிட்டது. 

வழியில் பாலக்கரை மேம்பாலத்தை கடந்தபோது, ரமேஷ் அண்ணா சைக்கிளில் பாலம் ஏறிக் கொண்டிருந்தான். காஜாமலை பெரியப்பாவின் மகன், எங்களுக்கு அண்ணன். மெதுவாக அவன் சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்ததை பார்க்கவும், மிதமிஞ்சிய கலவரத்தில் "ரமேஷண்ணா ஓடி வா. ஓடி வா. வெள்ளம் வருது " என்று நாங்கள் கூப்பாடு போட, மொத்த சக்தியையும் கூட்டி சைக்கிளை மேலும் வேகமாக மிதித்துக் கொண்டு தலைதெறிக்கும் வேகத்தில் ஓட்டி வந்தான். அவன் பின்னோடேயே வெள்ளம் வந்துவிட்டதாக நினைத்து பயந்து விட்டானாம். சைக்கிளை போட்டு விட்டு ஓடி விடும் உத்தேசத்தை பெரியப்பாவின் இடுப்பு பெல்ட் மறக்க வைத்துவிட்டதாம்.

ஒரு வழியாக பெரியப்பா வீட்டிற்குள் நாங்கள் நுழைந்தபோது, "அடக்கடவுளே யாரையும் காணாமே" அம்மாவின் குரல் பதறியது. வீடே காலி செய்யப்பட்டு இருந்தது. இதைவிட உயரமான இடத்திற்கு சென்று விட்டார்களோ என்று சந்தேகம் முளைத்தது. அவர்கள் சென்ற உயரமான இடத்திலிருந்து பெரியம்மாவின் குரல் கேட்டது. வீட்டின் மேல் மாடிதான் அது. "எல்லோரும் மேலே வாங்க"

மொட்டை மாடிக்கு விரைந்தோம். ஒரு பெரிய அளவு லாரியில் மொத்த வீட்டின் பொருட்களையும் ஏற்றி விட்டது போல மாடி காட்சியளித்தது. மழைக்காக ஒரு குடையையும் பிடித்தபடி ஒரு மரப்பெட்டியின் மேல் அமர்ந்திருந்தார் எங்கள் பெரியம்மா.( பெரியம்மாவின் திறமையே தனிதான்). வேறு குடையில்லாத காரணத்தால் பெரிய தாம்பாளங்களை தலைக்கு மேல் பிடித்தபடி வெள்ளத்தின் வருகைக்காக காத்திருந்தோம். அது வந்ததாக தகவல் ஏதும் வரவில்லை.


அப்பாவை மட்டும் காணவில்லை. அம்மாவின் பாசம் கெட்டவார்த்தைகளாக உருவேற ஆரம்பித்த மாலை வேளையில் டப் டப் என்று புல்லட் ஒலிக்க அப்பா வந்தார். "நான் சொன்னேன்ல ரேடியோல செய்தி சொல்றாங்க கேளு" என்று டிரான்ஸிஸ்டரை காட்டினார். ஏதோ ஒரு கரகரப்பான குரல் - சரோஜ் நாராயணசுவாமி?- பவானி சாகர் உடையவில்லை என்பதை உறுதிபடுத்தியது. பிறகென்ன பெரியம்மா வீட்டில் விருந்தாடிவிட்டு, இரவு வீடு திரும்பினோம்.

மறு நாள் காலையும் மழைவிட்டபாடில்லை அறிவு வந்தான். 'மேட்டூர் அண ஒடைஞ்சிடுத்தாம். டோட்டல் தமிழ்நாடே வாஷ் அவுட் ஆகப் போகுதாம்" என்றான். உண்மையில் வாஷ்-அவுட் ஆனது யார் என்று சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன். அதே போல் என்னுடைய மறதி வியாதியும் மனோ வியாதிதான் என்பதும் உங்களுக்குப் புரிந்திருக்குமே.  

                                                                                   -முற்றும்.