20:39 | Author: சாகம்பரி
மனோ சக்தி...!.  இது ஐந்தாம் பரிமாணம் தொடரின் அடுத்த பகுதிதான். ஆழ்மனசக்தி எனப்படும் இதனை பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. நிறைய பதிவுகள் உள்ளன.  அறிவியல் பூர்வமாக நிருபிக்க முடியாத பல சம்பவங்களுக்கு பின்னணியாக இந்த மனோசக்தியை சொல்வதுண்டு. ஏனெனில் அறிவியல் என்பது ஐம்புலன்களால் உணரப்பட்டவற்றிற்கு மட்டுமே விளக்கம் தருகிறது. அனைத்திற்கும் விளக்கம் தரக்கூடிய அறிவியலை நாம் இன்னும் அறியவில்லை என்பதே உண்மை.

இயற்பியல் கோட்பாட்டின்படி ஆற்றலின் ஆதாரமாக ஒரு பருப்பொருள் (physical sysytem) அவசியம் தேவைப்படுகிறது. (energy is the ability a physical system has to do work on other physical systems). உதாரணமாக, கிரிக்கெட் விளையாட்டை பார்க்கலாம். மட்டையின் மோதும் வேகத்தில்தான் பந்து செல்லும் தூரம் நிர்ணயிக்கப்படுகிறது. மட்டையும் பந்தும் மோதும் வேகம்தான் சக்தியின் அடிப்படை. கிரிக்கெட் மட்டைக்கு எப்படி சக்தி கிட்டுகிறது? அதனை வீசும் வீரனின் செயல்பாடுதான் மட்டைக்கு சக்தியை தருகிறது. வீரன்---> மட்டை, மட்டை-->பந்து என சக்தி மாற்றப்படுகிறது. இதனை நாம் ஐம்புலன்களால் உணரவும் முடிகிறது. எனவே பந்து செல்ல வேண்டிய இலக்கு, தொலைவு, மட்டையின் வேகம், அதற்காக செலுத்த வேண்டிய சக்தி என கணக்கிட்டு வேலை செய்ய முடிகிறது. போதுமான பயிற்சியையும் எடுக்க முடிகிறது. இது எதுவுமே இல்லாமல், எந்த இயற்பியல் விசையும் இன்றி வெறும் எண்ணங்களின் உதவியுடன் ஒரு பருப்பொருளை கையாள முடியுமா? வலிவு மிக்க எண்ணங்கள் ஒரு இயற்பியல் சக்தியாக மாறி செயல்படுகின்றன என்பதை நம்ப முடிகிறதா?  முடியும் என்பதே மனோசக்தியின் ரகசியம்.


மனோசக்தியின் உதவியுடன் நோய்களை குணப்படுத்துவது, ஒருவரின் மனதில் உள்ள விசயங்களை அறிவது, நம்முடைய எண்ணங்களை மானசீகமாக பரிமாறிக் கொள்வது, வேறு ஒரு இடத்தில் நடப்பதை உணர்ந்து சொல்வது, ஒரு பொருளை நகர்த்துவது போன்ற அதீத செயல்பாடுகளை பற்றி நிறைய செய்திகள் உள்ளன. நாம் எளிமையான சில விசயங்களை உணர முயற்சிக்கலாம்.

நிறைய சந்தர்ப்பங்களில் நாம் உணர்ந்திருப்போம். ஒரு விசயத்தை நினைத்துக் கொண்டிருப்போம் அது நடந்துவிடும். வெளியூரில் இருக்கும் மகனுடன் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே அவனிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்துவிடும்.

நல்லதோ... கெட்டதோ... எதையாவது நினைத்துக் கொண்டிருப்போம் அது நடந்தேவிடும். நான் சொன்னதுபோலவே நடந்தது பார்த்தாயா என்று சொல்லிக் கொள்வோம். ஆனால் எல்லா சூழ்நிலைகளிலும் அப்படி நடைபெறுவது இல்லை. ஏன்?

சிலருக்கு... சில நேரங்களில்... சில விசயங்களில்... மட்டும் மனோ சக்தி செயல்படுகிறது. எப்போதுமே என்ற உறுதித்தன்மை இல்லாததால்  கேள்விக்குறியாகிவிட்டது. ஏனெனில் அறிவியல் அடிப்படையில் சில நிகழ்வுகளை நிருபிக்க எப்போதும் ஒப்புக் கொள்ளக் கூடிய உண்மையாக இருக்க வேண்டும்.

ஏன் இந்த குளறுபடி? மனோசக்தியை கையாள எண்ணங்கள் வலிமையாக இருக்கவேண்டும். உ-ம், நமக்கு உடல் நலம் சரியாக வேண்டும் என்ற சிந்தனை மற்றவர்களுக்காக நினைப்பதைவிட வலிவு மிக்கதாக இருக்கும்.  உளவியல் ஒப்புக் கொள்ளும் ஒரு வார்த்தை mind power.  இதுதான் மனோசக்தி எனப்படுகிறது.  எண்ணங்கள் அல்லது சிந்தனைகள் இவற்றின் பிறப்பிடம் மூளை என்கிறது அறிவியல். சரி அது எப்போது வலிமை மிக்கதாக மாறும்? அத்துடன் ஆத்ம சக்தி எனப்படும் பிராண சக்தியும் சேரும்போதுதான். ஒரு உதாரணம் பார்ப்போமா? ப்ராண சக்தி பற்றி விரிவாக அடுத்த பதிவில் தொடர்கிறேன்...


You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On February 3, 2012 at 9:46 PM , வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையாக எழுதியுள்ளீர்கள்.
மேலும் படிக்க ஆவல் ஏற்படுகிறது.
பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

 
On February 6, 2012 at 12:30 PM , Shakthiprabha (Prabha Sridhar) said...

நல்ல பதிவு. இதனால் தானே "நல்லதே நினை' என்று சொல்கிறார்கள்... அறிவியலை புகுத்தி விளக்கும் விதம் பாராட்டுக்குறியது.