16:59 | Author: அன்னைபூமி

கட்டிய கூட்டின்மேல்
கல்லெரி விழுந்ததென்ன. . .
கோபுரமாய் இருந்த வாழ்க்கை
கொடியிழந்த மலரானதென்ன. . .

ஒரு குலப்பிறப்பே
ஊமையாய் பிறந்திருந்தாலும்
உயிர் பிழைச்சு வாழ்ந்திருப்போம். . .
ஒரு திருமொழி பேசியதால்
உயிர்வாழ தகுதியற்று
உருக்குலைந்து போனோம். . .

ஒண்ட வந்த பிடாரி
ஊரையே உலுக்கிய கதையாய்
பூர்வீக குடியில்
பூகம்பங்கள் பல வந்துவிட்டன. . .

புண்ணியம் தேடும்
பூமிக்கு அருகில் இருந்தும்
கரைக்கப்பட்டன எங்கள்
கண்ணீர்த்துளிகள் கடலுக்கு அடியில். . .

தாயகம் இழந்த நாங்கள்
தரணி முழுதும் பறக்கின்றோம். . .
எங்கள் கூடு
கலைக்கப்பட்டுவிட்டது. . .

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

7 comments:

On May 2, 2011 at 8:01 PM , கிராமத்து காக்கை said...

ஏக்கம் நிறைந்த வரிகள்

 
On May 2, 2011 at 9:40 PM , அன்னைபூமி said...

கருத்துரைக்கு நன்றி. . .

 
On May 3, 2011 at 10:56 AM , சாகம்பரி said...

மனதின் வலியை சொல்லியாகிவிட்டது. விடிவு.....

 
On May 3, 2011 at 12:16 PM , இராஜராஜேஸ்வரி said...

ஒரு திருமொழி பேசியதால்
உயிர்வாழ தகுதியற்று
உருக்குலைந்து போனோம். . .//

வலியை உருக்கமாய் கூறிய வரிகள் மனதை உருக வைத்தன.

 
On May 3, 2011 at 8:43 PM , அன்னைபூமி said...

மொழியால் வழி இழந்த வம்சம். உணர்ந்ததர்க்கு நன்றி அக்கா.

 
On May 6, 2011 at 6:10 PM , Yaathoramani.blogspot.com said...

தங்கள் கவிதையின் உள்ளார்ந்த வலி
இப்போது என்னுள்ளும்
தரமான படைப்பு
தங்களைத் தொடர்வதில்
பெருமிதம் கொள்கிறேன்
தொடர வாழ்த்துக்கள்

 
On May 7, 2011 at 6:49 PM , Ravi said...

கருத்துரைக்கு நன்றி சார். இப்போதுதான் கவிதை எழுதி பழகுகிறோம். உங்களைப் போன்ற மூத்தவர்கள் கருத்து சொல்வது அன்னை தமிழின் கரம் பற்றி நடக்க ஊக்குவிக்கும்.