22:46 | Author: அன்னைபூமி
பட்டதெல்லாம்  கஷ்டமாக 
பாத்ததெல்லம் காலாக  
பாடாதி உலகத்துல 
பகல்கூட இருட்டாக. . .

வல்லரசா ஆக்குறோமுன்னு 
வரிஞ்சுகட்டி நிக்கிராக
குடிசையெல்லாம் கோபுரமாக்க
மல்லுகட்டி மருவுராக. . .

கூழக்குடிக்கும் சனங்களுக்கு 
குடிசைகூட இங்கில்ல 
வரிஞ்சுகட்டி நிப்பவரெல்லாம் 
எதைத்தான் கோபுரமாக்க. . .

குலசாமி கோயிலுக்கு 
குடும்பத்தோட புறப்பட்டு 
ஒருநாள் கஞ்சிய காசாக்கி - ழைக
ஊருதாண்டி போராக. . .

சாப்பாடு கறிசமச்சு - சாமிக்கு 
சந்தனமும் பொட்டுவச்சு
தருவாறு சந்தோசமுன்னு
தரிசனம் செஞ்சுவாறாக. .  .

கண்தொறப்பார் சாமின்னு 
காத்துக்குகிடக்கும் ஏழைக்கு 
உடுத்திக்கிற கந்தைகூட  
உருப்படியா ஒன்னும் இல்லை. . .

துக்கத்த மறைச்சுவைக்க
தூக்கங்கூடத் துணையில்ல 
காக்கவேண்டிய கடவுள்மட்டும்
கலர்கலரா தெரியுறாரு. . .

தேடிவந்த ஏழைக்கெல்லாம்   
சோறுபோட மறந்துபோய் 
அவர்மட்டும் தினம்தினம் 
அபிசேகத்தில் குளிக்கிறாரு . . .

எத்தனையோ ஜென்மமாக 
ஏழைக்கு வாழ்வில்ல 
கண்ணாமுச்சி உலகத்தில 
கஷ்டம் மட்டும் சாகவில்ல. . .

என்னதான் நடந்தாலும் 
எல்லாத்தையும் பாத்துகிட்டே 
சாமிமட்டும் நிக்குதிங்க
ஒத்தையில கல்லாக. . .  
     
    
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.