10:19 | Author: Ravi













புற்கள் இல்லாத புல்வெளி
வெறும் கட்டாந்தரையாகிட,
மேய்ச்சல் காணாத ஆநிரை
கூட்டத்தில் இருந்து விலகி
பால் வற்றிய மடியுடன்
பயனில்லாத உயிராய்
காகிதக் கழுதையாகும்
நகரத்து பகல்வேளைகள்
சற்றே கண்ணயரும் மரத்தடி
பேசும் மொழி புரியாவிடினும்
வழிப்போக்கனின் துணையில்
கரைந்து உணரும் இன்பம்...
ஏதோ கேட்டு பேசி சிரித்தாலும்
இரவில் இதுவும் இல்லாத
தெருவோரத்து சிந்தனைகளில்
அடிமாடாகப் போகும் அவலம்
இங்கேயும்கூட,
பணி ஓய்வு மரணப் போராட்டம்.
                                    
-                                                                                                                 
-      Sagampari
17:40 | Author: அன்னைபூமி

   இது அன்னை பூமியின் ஆரம்பச் சுவடு, பதிவுகள் தொடங்கி இன்று இதன் 100 வது பதிவு. ஈர மண்ணில் தன் நினைவுகளுடன் இக்குழந்தை தன் முதல் தடத்தை பதித்திருக்கின்றது. இனிவரும் நாட்களில் இக்குழந்தையை சீர்தூக்கி செம்மை பட்டுத்த வேண்டிய கடமை முகவர்களாகிய உங்களையே சார்ந்தது.
   
    இணையத்தில் தமிழை ஏற்றினோம், தமிழனின் எண்ணங்களை உலகம் அறியச்செய்தோம். இதற்கு வண்ணம் சேர்த்த பதிவுலகிற்கு நன்றி
  
      எங்களின் வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் உடன் இருந்த சாகம்பரி அம்மா அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றிகளைச் சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம். எங்களின் பதிவிற்கு தங்களின் மேலான கருத்துக்களை தந்து எங்களை மென்மேலும் வளரச்செய்த ரமணி சார்அவர்களுக்கும், இராஜராஜேஸ்வரி மேடம்    அவர்களுக்கும் நன்றிகளை தெறிவித்துக்கொள்கின்றோம். மேலும் தமிழ்வாசி திரு பிரகாஷ், திரு.எல்.கே சார் , சந்திரகௌரி மேடம், செந்தில்குமார், பிரியமுடன் வசந்த், ராஜா, முரளி நாராயணன், கண்ணா, மற்றும் தோழி பிரஷா அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

     எங்களின் நண்பர்கள் சகா சண்முகம் , கோபி, சிவா, மற்றும் சேகர் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கின்றோம்.
   
         எங்களின் காலடிச்சுவடுகள், காலச்சுவடுகளாக மாற இனிவரும் எங்கள் படைப்புகளுக்கும் தங்களின் மேலான ஆதரவை வேண்டுகின்றோம். மேலும் இப்பதிவு நல்லாதரவு தரும் உங்களுக்கு நன்றி சொல்லும் வகையில் அமைந்ததை என்னியும் பெருமிதம் கொள்கின்றோம். . . நன்றி
19:03 | Author: Ravi
 

     முடியாது என்று சொல்வது அவசியமா? தேவையான இடத்தில் தேவையான நேரத்தில் 'நோ' சொல்லத் தெரிய வேண்டும். பிடிக்காதவர்களிடம், பழக்கமில்லாதவர்களிடம் எளிதாக சொல்லக் கூடிய இந்த வார்த்தையை உறவினர், நண்பர் போன்றவர்களிடம் சொல்லமுடிவதில்லை. ஆனால் இந்த தடுமாற்றம்தான் பின்னர் பெரும் சிக்கலில் ஆழ்த்தும். எளிதில் வெளிவர முடியாத ஒரு சிக்காலான வலைக்குள் தெரிந்தே சிக்கிக் கொண்டு யாரிடம் மறுக்க முடியாமல் தவித்தோமோ அவர்களிடமே முரண்பாடாகி நிற்போம். இதுபோல சொல்லத் தெரிந்தவர்கள் சுயகட்டுப்பாடு உள்ளவர்களாகவும் ஆளுமைத் தன்மை மிக்கவர்களாகவும் இருப்பதாக மனோதத்துவம் சொல்கிறது. 

  பெரும்பாலும் முடியாது என்று சொல்ல முடியாமல் போனவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். சூழ்நிலை நம்மை சிக்கலில் கொண்டு சேர்க்கும் காரணிகளிடம் மறுப்பது மட்டுமே சிரமம். சரியான முறையில் மறுப்பு தெரிவித்துவிட்டோமென்றால், நம்முடைய கட்டுப்பாட்டுவிசை நம்மிடம்தான் உள்ளது என்று பொருள். முடியாது என்று மறுப்பதால், நம்முடைய எல்லைகளை புரிய வைக்கின்றோம். மற்றவர்களால் வெறுக்கப்பட்டவர்களாக மாட்டோம். சொல்லப் போனால் நம்முடைய எல்லைகளை வரையறுப்பதால் நம்மிடம் எளிதாக மற்றவர்களால் பழக முடியும். தவிர்க்கமுடியாமல் ஒப்புக் கொண்டுவிட்டு பிறகு துன்பப்பட்டு மற்றவர்களால்தான் இந்த நிலை என்று பழி போடுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். உனக்கென்று சுய சிந்தனை இல்லையா என்று கேட்பார்கள்.

மற்றவர்கள் மனம் நோகாமல் மறுப்பது எப்படி?
நேரிடையாக வார்த்தைகளால் 'முடியாது ' என்று கடினமாக சொல்ல முடியாவிடினும் " எனக்கு வேறு முக்கிய வேலை உள்ளது, தயவு செய்து புரிந்து கொள்", '"இப்போது என்னால் இயலாது. நாளை மறு நாள் முயற்சிக்கலாமா?" , " என்னுடைய நிலையில் இதெல்லாம் செய்ய முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்", "வேறு ஏதாவது மாற்று யோசனை சொல்லுங்கள்" போன்ற வார்த்தைகளை புன்சிரிப்புடன் சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். முடிந்தால் அடுத்த முறை உங்களால் செய்யக் கூடிய உதவிகளை செய்யுங்கள். நீங்கள் மறுப்பது குறிப்பிட்ட விசயத்தை மட்டும்தான் என்பதை உணர்த்துங்கள்.