11:14 | Author: சாகம்பரி
மேற்குத் தொடர்ச்சி மலையில் கிட்டிய கடல்வாழ் உயிரினங்களின் படிமம்....
நாயினார் தீவில் கிட்டிய தமிழ் கலந்த நாகர் மொழியுருக்கள்.....
இன்னும் வரலாற்றின் மூடப்பட்ட பக்கங்களை புரட்ட புரட்ட பல விசயங்கள் கிட்டுகின்றன. ஒரு பெரும் நிலப்பரப்பும்
தில் வாழ்ந்த மாந்தரில் பெரும்பான்மையானோரும் அழிக்கப்பட்ட செய்திகளை தெரிவிக்கின்றன. புலம் பெயர்ந்து சென்ற மக்களின் மனக்கிலேசங்கள் செவிவழிச் செய்திகளாகவும் கதைசொல்லிகளின் மூலம் கதைகளாகவும் கிட்டுகின்றன. வெவ்வேறு மொழிகளில் சொல்லப்படும் கண்ணகியின் கதையும்,  'எழு கடல் எழு மலை தாண்டி ராஜாவின் உயிர்  இருக்கிறது' என்ற பாட்டி கதைகள்கூட ஊணை காப்பாற்ற உயிரை பிரிந்து வந்த மண்ணின் மைந்தர்களின் ஏக்கமாகவே காட்சியளிக்கின்றன. எழு கடல் என்றால் பொங்கியெழுந்த கடல் என்றும் எழுமலை என்றால் எரிமலையையும் குறிக்கிறது என்பது மெய்யா? எரிமலை சீற்றம் கண்ட கடல் கொண்ட என் நாடு எங்கேயோ இருக்கிறது என்பதை குறித்த வாக்கியம் என்பதும் பொருந்தி வருகிறதே. தொல்லியல்,மரபியல்,கடலியல் சார்ந்த ஆய்வுகள் நடத்திதான் உண்மையை வெளிக்கொணர முடியும். அதுவரை நம் தொலைந்து போன பெருமைகளை மறந்து இருக்க வேண்டும். 

இப்போது நாம் இந்த தொடரின் தலைப்பிற்கு வந்தாக வேண்டும்.....

மனோ சக்தி பற்றி அறியும் முன், மனம் என்பதன் விளக்கம் வேண்டும். சூட்சும உடல்... ஸ்தூல உடல்....  ரொம்பவும் ஆன்மீக விளக்கமாக போய்விடும் என்பதால் இந்த இடத்திற்கு ஒப்புதலாக உயிர் எனப்படும் ஆன்மாவையே மனம் என்று கொள்கிறேன். உடல், உயிர் இரண்டும் சேர்ந்ததுதான் நாம். இவை இரண்டையும் இணைக்கின்ற வித்தை நம்மிடம் இல்லை -அதாவது சாதாரண மனிதர்களிடம் இல்லை. உடலுக்கு காலத்தின் கட்டுப்பாடு உண்டு. உயிருக்கு கிடையாது. உடலுக்கு சக்தி குறைவு, வேகமும் குறைவு ஆனால் உயிருக்கு சக்தியும் வேகமும் அதிகம். எனவே உடலில் இருந்து உயிர் விலகியும் சேர்ந்தும் இருக்கும் வித்தை தெரிந்து கொண்டால் நான் சித்தனாகிவிடுவேன் - அதாவது நான்காவது பரிமாணத்தை கடந்துவிடுவேன். எங்கெல்லாம் நான்காவது பரிமாணத்தின் கட்டுப்பாடு இல்லையோ அங்கெல்லாம் நரை,திரை,மூப்பு,பிறப்பு,இறப்பு கிடையாது. உடலில் இருந்து விடுபட்டுவிடுவதால் ஐந்தாம் பரிமாணத்தில் செயலாற்ற முடியும் - மனோவேகம், நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் பிரசன்னமாகலாம்.

( மரணத்திற்குப் பின் மனிதர்கள் அதிவேகமாக இருக்கும் வேறு பரிமாணத்தை அடைந்துவிடுவதாகவும் அவர்கள் நம்முடனும் இருக்கிறார்கள் என்றும் சித்தர் பாடல் ஒன்று கூறுகிறது.  கரியபவளம் என்ற மூலிகையை விளக்கெண்ணெயில் குழைத்து புருவத்தில் தடவிக் கொண்டால் நம்மை சுற்றி இருக்கும் மற்றோரு பரிமாணமும் அங்கே இருப்பவர்களும் தெரிவார்கள் என்றும் அந்த பாடல் மேலும் கூறுகிறது. பரிட்சித்து பார்க்கும் மனதைரியம் எனக்கில்லை. யாராவது முயற்சித்தால் சொல்லுங்கள்.)

இதெல்லாம் ஆன்மீகக் கட்டுக்கதைகள் என்று தோன்றுகிறதல்லாவா? நான் முதலிலேயே குறிப்பிட்ட worm hole theory இன்ன பிற வார்த்தைகளில்... இதனைத்தான் சொல்கிறது -. பிரபஞ்சத்தில் ஆங்காங்கே புழுத்துளைகள் எனப்படும் மர்மமான துளைகள் உள்ளன. அவற்றின் வழியே பயணிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் அதி தொலைவில் உள்ள இடத்தைக்கூட நொடிகளில் அடையமுடியும். அப்படித்தான் பிரசித்தி பெற்ற 'வாவ்' சிக்னலும் 72நொடிகள் மட்டும் கிட்டியது என்று ஒரு முடிவிற்கு வந்துள்ளனர். இதனை நிருபிப்பதற்காக வார்ம்ஹோல்களை தேடிவருகின்றனர். பிரச்சினை என்னவென்றால் வாவ் சிக்னலை எழுப்பிவிட்டு நொடிகளில் மறைந்துபோன அந்த 'யாரோ' ஒருவருக்கு வார்ம் ஹோலில் பயணம் செய்வதற்கான நுட்பங்களும், அதிவிரைவு பயணத்தை எதிர்கொள்வதற்கான தகுதிகளும், சக்தியும் இருந்தன, அது நம்மிடம் இல்லை. .... அப்படியென்று சொல்லுகிறார்கள்.


உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதுதான் எனக்கும் தோன்றுகிறது. சித்தர்கள்.... முக்காலம் கடந்த தன்மை.... வான்வெளி சஞ்சாரம்.... ஆழ்மன சக்தி....  இதெல்லாம் மிகுந்த செலவு செய்து ஒரு நாள் புதிதாக கண்டுபிடித்த அறிவியல் கோட்பாட்டின்படி சிக்கலான கணித சமன்பாடுகள் கொண்டு நிருபிப்பார்கள். நம்மில் சிலர் அப்போதும் "இதெல்லாம் நாங்க அப்போதே சொன்னோம்" என்றும் பதிவுகள் போடலாம். அதுவரை கேள்வியும் தேடலும் நம் விருப்பத்திற்கே இருக்கட்டும். அறிவியல் தேடலாகவோ இல்லை ஆன்மீகத் தேடலாகவோ இருக்கட்டும்.

என்னுடைய பதிவும் வான்வெளி சஞ்சாரத்தில் நீண்ட நாட்கள் டிஜிட்டல் அலைகளாக பயணிக்க வாய்ப்பு இருப்பதால்...எதிர்காலத் தேவை கருதி இன்னும் சற்று கூடுதலாக பதிவிடுகிறேன். இதற்கு அறிவியல் விளக்கமெல்லாம் தற்சமயம் இல்லை. அடுத்த பதிவிற்கு கதை கேட்கும் மன நிலையில் இருப்பவர்கள் வரலாம்.

அடுத்த பகுதியில் ஏழாம் அறிவான மரபியல் நினைவுகளும், ஐந்தாம் அறிவான மனோசக்தியும் பற்றிய சில விசயங்களை -(பழங்கதைகள்) பேசலாம்.



முந்தைய பதிவுகள்
முதல்பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/2.html
இரண்டாம் பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/1.html
மூன்றாம் பாகம் : http://annaiboomi.blogspot.com/2011/11/3.html
நான்காம் பாகம். http://annaiboomi.blogspot.com/2011/11/4.html
5ம் பாகம்:   பழந்தமிழ் மண்ணின் வரலாறும் இணைந்தது.
6ம் பாகம்    
பழந்தமிழ் மண்ணின் வரலாறும் இணைந்தது.
7ம் பாகம்     பழந்தமிழ் மண்ணின் வரலாறும் இணைந்தது.

22:09 | Author: சாகம்பரி
Thanks to wiki resource- Kumari continent
தமிழ் பழங்குடியின் வாழ்க்கை முறைகளுக்கான ஆதாரம் கற்காலத்திலிருந்து சட்டென்று இரும்பு காலத்திற்கு வந்துவிட்டதை குறிப்பிடுகின்றன. இடைப்பட்ட இரண்டு உலோக காலங்களுக்கான தொல்லியல் சான்றுகள் கிட்டவில்லை. இவை சிந்து-சமவெளி நாகரிகத்தில் கிட்டியுள்ளன. இடையில் என்ன நடந்தது...?

அதாவது செப்பு காலம், வெண்கல காலம் ஆகியவற்றிற்கான தொல்லியல் சான்றுகள் தமிழ் மண்ணில் கிட்டவில்லை. இலக்கியத்திலிருந்த ஒரு விடை கிட்டுகிறது. ஆரம்ப கால தமிழ் இலக்கியங்களில் ஒரு பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. குமரி கண்டம் என்பதுதான் அது. அப்படி ஒரு நிலப்பரப்பு இருந்ததாக தெரியவில்லை. இலக்கியங்கள் அதனை அழகான விவரித்திருந்தன. அது ஏழு பனை நாடுகள் கொண்டது. அங்கு வசித்தவர் குமரி மாந்தர். இரண்டு பெரிய மலைத்தொடர்களுக்கு இடையே உருவாகியயிருந்த பரந்த நிலப்பரப்பு. குமரி கண்டத்தின் மக்கள் நாகரிகமாக இருப்பிடங்கள் உருவாக்கி வாழ்ந்திருந்தனர். முதலிரண்டு கடற்கோள்கள் நிலநடுக்கம், எரிமலை ஆகியவற்றை உருவாக்கி குமரி கண்டத்தை கடலுக்கடியில் கொண்டு சென்றது என்று கூறப்படுகிறது. இதற்கான புவியியல் ஆதாரம் : http://news.bbc.co.uk/2/hi/science/nature/353277.stm 1990ல் கண்டுபிடிக்கப்பட்டது.

குமரி கண்டம் எனப்படும் பரந்த நிலப்பகுதி தற்போதைய குமரி முனையுடன் இருந்தது என்று கூறப்படுகிறது. இது பற்றி தமிழறிஞர் தேவ நேய பாவாணர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலப்பரப்பு ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவை இணைத்து பரவியிருந்தது. அந்த சமயத்தில் இலங்கை இதனுள்தான் இருந்தது.

மிகப்பெரிய அளவில் நான்கு கடற்கோள்கள்  ஏற்பட்டன. அவைதான் குமரி கண்டத்தின் அழிவிற்கு காரணமானவை என்றும் கூறப்படுகிறது. 2,00,000 ஆண்டுகளுக்கு முன் இருந்த குமரி கண்டத்தின் அழிவு 50,000 ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கடைசியாக ஏற்பட்ட கடற்கோள்தான் காவிரிபூம்பட்டினம் எனப்படும் பூம்புகாரை கடல் கொண்டதாக கூறப்படுகிறது. இது 17,000 வருடங்களுக்கு முன் நடந்ததாக குறிப்புகள் கூறுகின்றன. 1980ல் நடத்தப்பட்ட கடல் ஆய்வுகள் தற்போதைய காவிரிபூம்பட்டினத்தின் கடற்பகுதியில் 75 கி.மீ தொலைவில் கடலுக்கடியில் புதையுண்டிருக்கும் நகரத்தை கண்டுபிடித்துள்ளனர்.

அந்த சமயத்தில், பெரிய பூகம்பங்கள் ஏற்பட்டன. எரிமலை வெடித்தது. கடற்கோள் ஏற்பட்டது. இதன் விளைவாக பரந்த நிலப்பரப்பான குமரி கண்டம் கடலுக்கடியில் சென்றது. ஏராளமானோர் மாண்டனர். இவை வரலாற்று குறிப்புகள். இந்த காலகட்டத்தில் மானசீகமாக பயணித்தால் சில கேள்விகள் எழுகின்றன.

அதிரம்பாக்கம் தொல்லியல் சொல்வது, 15,00,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழுக்களாக வாழும் நாகரிகமான காலகட்டத்தில் தமிழன் வாழ்ந்திருக்கிறான். உலகம் முழுவதும் சரியான தட்பவெப்பம் நிலவாத அந்த காலகட்டத்தில் இங்கே குளிர்ச்சியான பசுமையான தட்பவெப்பம் நிலவியதை உணர முடிகிறது. அதற்கான விலங்கியல் படிமங்கள் கிட்டியுள்ளன. இயற்கையுடன் ஒன்றிய வாழ்வு வாழ்ந்திருக்கிறான்.

கிருஷ்ணகிரி மலைப்பகுதியில்  தொல்லியல் சான்றுகளாக கிட்டியவை 50,000 வருடங்களுக்கு முன் அங்கு வாழ்ந்த மக்கள் பெருங்கற்காலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றன. கல்லை பயன்படுத்
தி ஏர்கலப்பை, போர் ஆயுதங்கள், போன்றவையும் இரும்புகாலத்தின் சான்றாக செங்கற்களால் கட்டப்பட்ட இரும்பு உருக்கும் தொழிற்கூடங்களும் கண்டுபிடிக்கப்படுள்ளன. (இங்கேயும் 50,000 ஆண்டுகள் பழமையான் கற்கால சான்றுகளுக்குப் பிறகு 3000 ஆண்டுகள் பழமையான இரும்புகாலத்திற்கான சான்றுகள் கிட்டுகின்றன.
     
Indus-valley civilization

17,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் மண்ணை, பூகம்பம், எரிமலை, கடற்கோள்கள் என்று இயற்கையின் அழிவு சக்திகள் புரட்டி போட்டிருக்கின்றன. இது போன்ற இயற்கை அழிவுகளை விலங்குகள் முன்கூட்டியே கண்டுகொள்ளத்தக்கவை. இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை வாழ்ந்த மனிதனுக்கும் இந்த சக்தி இருந்திருக்கும் அல்லவா? அப்படியெனில் அழிவு வரப்ப்போவதை உணர்ந்து புலம் பெயர்ந்திருக்கலாமே. சரி அப்படி புலம் பெயர்ந்தால் அவன்னுடைய பாதையை எது வரையறுத்து இருக்கும். இயற்கை வரையறுத்த எல்லைகள்தான் அவர்களுடைய பயணப்பாதையாக இருக்கும். அந்த பயணப்பாதை மேற்குத் தொடர்ச்சி மலையின் வழியாக சென்றது எனில், அதன் முடிவு சிந்து சமவெளியை அடைகிறது. சிந்து நதியின் கரையோரத்தில் இருக்கும் சமவெளி இது இன்றைய ஆப்கானிஸ்தானையும் உள்ளடக்கியது.
      

இந்த கூற்றுக்கு ஆதாரமாக சொல்லப்படுபவை, அங்கு கிட்டிய பசுபதி, ஒற்றை கொம்புடைய நீர்யானையின் வடிவங்களும். இதனை யூனிகார்ன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதிரம்பாக்கம் தொல்லியல் பகுதியில் நீர்யானையின் படிமம் கிட்டியுள்ளது.   ஈரமான நிலப்பகுதியில் மட்டுமே நீர் யானை வசிக்கும். காப்புரிமை சம்பந்தபட்டதால் இங்கே அந்த படத்தை பிரசுரிக்க முடியவில்லை. வாலை பார்க்கும்போது அது குதிரை இல்லை என்று தெரியும்.


சில இடங்களின் பெயர்களும் தமிழ் பெயர்களாக காவ்ரி,பெருனை போன்ற வார்த்தைகள் பிராமி எழுத்து வடிவில் கிட்டியுள்ளன. மீண்டும் தெற்குப்பக்கம் குடியேற்றம் கிமு.3000லிருந்து -இரும்புகாலத்தில் இருந்து ஆரம்பித்து இருக்கலாம் என்று கொள்ளப்படுகிறது. தொல்லியல் ஆராய்ச்சி மட்டுமல்லாமல் கடலியல் ஆய்வுகளும் மேற்கொண்டால்தான் இயற்கை அழித்த தமிழ் வரலாறு தெரியவரும்.

அடுத்த பதிவில் மனோசக்திக்கான சான்றுகள் - அழிந்து போன வரலாற்றில் மறைக்கப்பட்ட பக்கங்களை செவி வழி கதைகளாகவும், இலக்கியவழிசெய்திகளாகவும் உறுதிபடுத்தலாமா?.

இவற்றை கண்டிப்பாக படித்துப் பாருங்கள்.
http://news.bbc.co.uk/2/hi/science/nature/353277.stm
http://balubpos.blogspot.com
http://jayabarathan.wordpress.com/2011/07/15/kumari-kandam-3/

R. Mathivanan, then Chief Editor of the Tamil Etymological Dictionary Project of the Government of Tamil Nadu, in 1991 claimed to have deciphered the still undeciphered Indus script as Tamil, following the methodology recommended by his teacher Devaneya Pavanar, presenting the following timeline (cited after Mahadevan 2002):

    ca. 200,000 to 50,000 BC: evolution of "the Tamilian or Homo Dravida",
    ca. 200,000 to 100,000 BC: beginnings of the Tamil language
    50,000 BC: Kumari Kandam civilisation
    20,000 BC: A lost Tamil culture of the Easter Island which had an advanced civilisation
    16,000 BC: Lemuria submerged
    6087 BC: Second Tamil Sangam established by a Pandya king
    3031 BC: A Chera prince in his wanderings in the Solomon Island saw wild sugarcane and started cultivation in Kumari Kandam.
    1780 BC: The Third Tamil Sangam established by a Pandya king
    7th century BC: Tolkappiyam (the earliest known extant Tamil grammar) 
22:02 | Author: சாகம்பரி
இந்த பதிவு பழந்தமிழர் அறிந்திருந்த சிறப்புமிக்க ஐந்தாம் பரிமாணம் என்னும் மனோசக்தி பற்றியது.

பழந்தமிழரின் வரலாறு தேடி காலப்பயணம்.
முதலில் சில விசயங்களை தெளிவுபடுத்திக் கொள்வோம். தமிழன் என்பது தமிழ்மொழி பேசும் இனம். இதனை குலத்தின் பெயரோடோ, மதத்தின் பெயரோடோ தொடர்புபடுத்தி குழப்பிக் கொள்ள வேண்டாம். அதேபோல தமிழ் மொழி பல மாற்றங்களுக்கு உள்ளானதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இலக்கியத்திலிருந்து - தொல்காப்பியம் -கிமு700-கி.மு300
பழந்தமிழர் வரலாறு என்ற தேடலுக்கு நிறைய விசயங்கள் கிட்டுவது இலக்கியங்களில் இருந்துதான்.  அவை தமிழரின்ன் தோற்றம் பற்றி சுட்டுவது கிமு. 700லிருந்துதான். தலைச்சங்கம் வைத்து பதியப்பட்ட நூல்களுள் முதன்மையானது 'அகத்தியம்' என்ற இலக்கண நூல். அதனுடைய காலம் 'தொல்காப்பியத்திற்கும்' முன் என்று அனுமானிக்க முடிகிறது. ஏனெனில் தலைச்சங்கத்தில் இடம்பெற்றிருந்த புலவர்களுள் அகத்தியரும் ஒருவர். அவருடைய சீடர்களில் ஒருவரான தொல்காப்பியர் விளங்கினார் அன்று கூறப்படுகிறது. இதனைக் கொண்டு தொல்காப்பியத்தின் காலம் கிமு700-கிமு300 வரை இருக்கலாம் என்று பதியப்படுகிறது. தொல்காப்பியம் என்பது இலக்கண நூல். தமிழ் மொழியின்  இலக்கணம் பற்றிய வரையறகள் இதில் இருக்கின்றன.

நம்முடைய தேடல் தமிழரின் தோற்றம் பற்றியது. முதல் இலக்கிய நூல் சொல்வதோ பண்பட்ட முதிர்ந்த மொழியின் லட்சணங்களை. இன்னும் தேடலை பின் நோக்கி நகர்த்த முடிவு செய்தேன். தொல்பொருள் துறையின் பதிவுகளில் கிட்டியது ஆதிச்ச நல்லூர். திருச்செந்தூர் செல்லும் வழியில் தாமிரபரணி படுகையில் உள்ளது.

ஆதிச்ச நல்லூர் - கிமு.1000
அதற்கும் முன்பு வரலாற்று ஆதாரமாக ஆதிச்ச நல்லூரில் கிடைத்த புதைபொருட்களை சொல்லலாம். முதுமக்கள் தாழிகளில் மனித எலும்புக்கூடு மற்றும் மண்பாண்டங்கள், சில உலோக பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை கிமு1800ஐ சேர்ந்தது என்கிறார்கள் இவை கி.மு 10ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என்று உறுதிபடுத்தபட்டன. இதற்கான சுட்டி: http://asi.nic.in/asi_exec_adichchanallur.asp 

இந்த இடத்தில் மேலும் ஒரு குறிப்பு கிட்டுகிறது. வேதிய முறைப்படி செய்பவர் அல்லாதவர் என்று இரு பிரிவினர் உள்ளதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.  வேதகாலம் என்பது கிமு.2000-500 வரை.

செம்பியன் கண்டியூர் -கிமு.2000-கிமு.1000
மயிலாடுதுறையில் செம்பியன் கண்டியூர் என்ற இடத்தில் 2006ல் நடைபெற்ற ஆய்வுகள் அங்கு கிட்டிய பொருட்கள் கற்கோடாரிகள் கற்காலத்தின் பிற்பகுதியை சேர்ந்தவை என்று உறுதிபடுத்தப்படன. தொன்மை கிமு 2000-1000.  
சிந்து சமவெளி நாகரிகத்தின் (கிமு.3300-1300)தொடர்புடைய எழுத்துருக்கள் கிடைத்தன.

மரபியல் ஆதாரம் - 50,000-70,000 வருடங்கள்
தற்கால மனிதன் ஹோமோ சாபியன் இனத்தை சேர்ந்தவன் என்றும் அதற்கு முன்பாக நியாண்டர்தால் இன மனிதன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. நமக்கு மூதாதையர் ஹோமோ சாப்பியனிலிருந்து கணக்கிடப்படுகின்றனர்.  இந்த மனிதன் ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியாவிற்குள் வந்ததாக கூறப்படுகிறது. காலம் 50,000-70,000 முன்பு. இந்த மரபணு மாதிரி மதுரை பக்கத்திலிருக்கும் கிராமத்திலிருக்கும் ஒரு மனிதரின் மரபணு உடன் பொருந்தியது. எனவே ஆசியாவில் மனிதர்கள் குடியேற்றம் 70,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கூறப்பட்டது. ஆஸ்திரேலியாவில் 40,000 வருடங்களுக்கு முன் நிகழந்ததாகவும் பதிவு செய்யப்பட்டது.

அதிரம்பாக்கம் -15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்.
திருவள்ளுவர் மாவட்டம் பூண்டி நீர்தேக்கம் அருகே அதிரம்பாக்கம் தொல்லியல் ஆய்வில் கிட்டியது ஆச்சரியப்படுத்தியது. 15,00,000 ஆண்டுகளுக்கு முன் பழைய கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கிட்டின. ஆப்பிரிக்காவில் கிட்டிய மாதிரியுடன் ஒத்திருந்தன. இதற்கு முன் தெற்காசியாவில் பழைய கற்காலம் ஆரம்பித்ததே 70,000 ஆண்டுகளுக்கு முன்புதான் என்று ஒரு கருத்து இருந்ததை பொய்யாக்கியது இந்த ஆய்வு.
இதற்கான சுட்டி
http://asi.nic.in/asi_exca_imp_tamilnadu.asp
http://www.antiquity.ac.uk/projgall/pappu297/
http://www.thehindu.com/sci-tech/science/article1568651.ece

அங்கே அருகிலேயே அல்லிகுழி மலைத்தொடரில் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் வாழ்ந்த குகைகள் இருக்கின்றன. அவை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இத்தனை தகவல்களும் ஒரு விசயத்தை உறுதிபடுத்துகின்றன. முதல் மனிதனின் தோற்றம் தமிழகத்தில் இருந்தது என்பதுதா
ன் அது. 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே குழுக்களாக மக்கள் வாழ்ந்துள்ள ஒரு நாகரிகமான சமுதாயம் இங்கிருந்தது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.  ஆனால் கற்காலத்திற்கான ஆதாரங்களுக்குப்பின் கிட்டியவை  இரும்பு காலத்திற்கு சென்றுவிடுகின்றன.

கற்காலம் ,செப்புகாலம்,வெண்கல காலம், இரும்பு காலம் என்று பிரிக்கப்பட்ட கால கட்டங்களில் பயணித்த மனித நாகரிகத்தில், தமிழ் பழங்குடியின் வாழ்க்கை முறைகளுக்கான ஆதாரம் கற்காலத்திலிருந்து சட்டென்று இரும்பு காலத்திற்கு வந்துவிட்டதை குறிப்பிடுகின்றன. இடைப்பட்ட இரண்டு உலோக காலங்களுக்கான தொல்லியல் சான்றுகள் கிட்டவில்லை. இவை சிந்து-சமவெளி நாகரிகத்தில் கிட்டியுள்ளன. இடையில் என்ன நடந்தது...?


18:12 | Author: சாகம்பரி
சென்ற பகுதியின் தொடர்ச்சி.....
இவற்றை உணர்ந்திருக்கிறீர்களா?
- சில நிகழ்வுகள் நடக்கும்போது அது ஏற்கனவே நடந்ததுபோல உணர்வோம். ஆனால், நமக்குத் தெரிந்தவரை அது முற்றிலும் புதிதான சூழ்நிலையாக இருக்கும்.
- நொடிகளில் முடிவெடுக்க வேண்டிய சில நிகழ்வுகளை சந்திக்கும்போது யாரோ உடனிருந்து வழிகாட்டுவதைப்போல உணர்ந்து முடிவெடுப்போம். ஏன் அந்த முடிவை எடுத்தோம் என்பதற்கு விளக்கம் கூட நம்மால் சொல்ல இயலாது.
- அப்போதே எனக்குத் தோன்றியது என்று நிறைய முறை சொல்லியிருப்போம்.
- பெரும்பாலும் இதுபோன்ற உணர்வுகள் அந்த சூழ்நிலைக்குள் நாம் செல்லும்போதுதான் தோன்றும். முன்கூட்டியே எதுவும் தோன்றாது.
- ஒரு சிக்கலில் இருக்கும்போது அதற்கான சரியான தீர்வு நாம் உறக்கத்திலிருக்கும்போது கிட்டும்.

இவற்றுக்கெல்லாம் விளக்கம் இருக்கிறதா? 
 
இதற்கு நமக்கு ஏதோ ஒரு இறை சக்தி உதவுவதாக எண்ணுவோம். நல்லது நடந்தால் சரி... வேறு மாதிரி நடந்தால்...

அவர்கள் இருவரும் நண்பர்கள். கல்லூரி மாணவர்கள். புது இரு சக்கர வாகனம் வாங்கியாகிவிட்டது. கல்லூரியில் நடந்த கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி. அதீத உற்சாகம் கரைபுரண்டு ஓட, நான்கு வழிச்சாலையில் மிகுந்த வேகத்துடன் வண்டியில் சென்றனர். வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல்  ஒரு கனரக வாகனத்தின் பின் சக்கரத்தில் மோதிவிட்டான். வழக்கமாக இது போன்ற விபத்துக்களில் பின் இருக்கையில் அமர்ந்தவன்தான் மாட்டுவான். வண்டியை ஓட்டுபவன் பெரும்பாலும் தப்பிவிடுவான். ஆனால் இந்த விபத்தில் ஓட்டியவன் உயிரை விட்டான். பின் இருக்கையில் அமர்ந்தவன் மருத்துவ உதவியினால் பிழைத்துவிட்டான்.. தப்பித்தவனிடம் விசாரித்தபோது,  அவன் சொன்னது என்னவெனில், மோதப்போகும் கடைசி  நொடியில் கூட விபத்து தவிர்க்கப்படும் என்று நினைக்க, ஓட்டியவனோ  மோதியே விட்டான். மோதும் முன் கடைசியாக சொன்ன வார்த்தை "சாரிடா...". மன்னிப்பு கேட்க தோன்றிய மனதில் மாற்றுவழி யோசிக்கத் தோன்றவில்லையே. இதுதான் 'விதி' என்றனர். போதாத 'காலம்' என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

ஏதோ ஒன்று அவனை அந்த நிகழ்விற்குள் கொண்டு சென்றதல்லவா... அதுதான் அவனுக்கு வழிகாட்டியது. அதைத்தான் வானுரைபதிவு (ஆகாஷிக் ரெக்கார்டுகள்) என்கிறார்கள். அந்த நேரம், அந்த இடம், அந்த வண்டி, ஓட்டியவன் அனைத்தும் சேர்ந்த ஒரு நிகழ்விற்கான ஒரு காட்சிக்கான அமைப்பு அந்த இடத்தில் அலைகளாக இருந்திருக்கிறது. அந்த சூழ்நிலைக்குள் செல்லவுமே நம்மை பாதிக்க, அதனை செயல்படுத்தும் பாத்திரங்களாக மாறிவிடுகிறோம். இதைத்தான் முதல் பகுதியிலேயே நான்காவது பரிமாணத்தின் திட்டத்தில்தான் உலகின் ஒவ்வொரு அசைவும் நடக்கின்றன என்றேன்.

இன்னும் ஒரு விளக்கம் தருகிறேன். சுவாமி விவேகானந்தர் லாஸ் ஏஞ்சல்ஸில் நடத்திய ஒரு சொற்பொழிவில் குறிப்பிட்டது. அதற்கான சுட்டி இங்கே உள்ளது. விவேகானந்தரின் உரை

மிகவும் ஆச்சரியமான ஒரு நிகழ்ச்சியை சொல்கிறார். விவேகானந்தர் சந்தித்த அந்த மனிதர் ஒரு சாது. அவர் மூன்று தாள்களில் எதையோ எழுதி மடித்து வைத்துக் கொண்டார். விவேகானந்தரும் அவருடைய நண்பர்கள் இருவரிடமும் அவற்றை நீட்டி 'பிரித்துப் படிக்க வேண்டாம். அப்படியே சட்டை பையில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார். சற்று பொறுத்து "நீங்கள் ஏதாவது ஒரு வாக்கியம் எந்த மொழியில் வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள்." என்றாராம். தனியே சென்று விவாதி
த்துவிட்டு, விவேகானந்தர் சமஸ்கிருதத்திலும், அவர் நண்பர்கள் அராபியிலும், ஜெர்மானிய மொழியிலும் நினைத்துக் கொண்டனர். இவை அந்த சாதுவிற்கு தெரியாத மொழிகள். உற்சாகமாக சாதுவிடம் திரும்பி வர 'உங்களிடம் நான் ஏற்கனவே தந்த தாள்களை எடுத்துப் பாருங்கள்' என்றார். அந்தத்தாள்களில் இவர்கள் மூவரும் நினைத்த வாக்கியங்கள் அந்தந்த மொழியிலேயே இருந்தன. கூடவே யார் எந்த வாக்கியத்தை நினைப்பார்கள் என்றும் மிக்ச்சரியாகவே எழுதியிருந்தார். இதற்கு அவர் தந்த விளக்கம் வானுரை பதிவுகள்தான். இதைத்தான் இவன் இப்போது செய்வான் என்பதை வானுரை பதிவுகளின் மூலம் அவரால் அறிய முடிந்தது.

சாதாரண நிலையிலிருந்து பார்க்கும்போது திட்டத்தை செயல்படுத்தும் நிலையில் மட்டுமே நாம் இருக்கிறோம் என்பது புரிகிறதல்லாவா? மேலும் அண்டவெளி சுருங்கும் சமயத்தில் பொருட்கள் வாயு மூலக்கூறுகளாக மாறிய பின்பும் அழியாத அலைவடிவாக இந்த  வானுரை பதிவுகள் பிரபஞ்சத்தில் உலவிக் கொண்டேதான் இருக்கும். புதிதாக பிறக்கும் அண்டவெளிக்கு வழிகாட்டியாகும் வாய்ப்பிற்காக காத்திருக்கும் என்பதும் ஒப்புக் கொள்ள முடிகிறதுதானே. 

எத்தனை ராமரோ? எத்தனை கணையாழியோ? என்று அகத்தியர் அனுமனிடம் சொன்னதன் விளக்கமும் இதுதான். எல்லாமே மீண்டும் மீண்டும் நடக்கின்றன. ஓரளவிற்கு விளக்கிவிட்ட நம்பிக்கையில் , இப்போது ஏற்கனவே பதிவிட்ட இந்த வாக்கியங்களை அழுத்தமாக மீண்டும் பதிகிறேன்.

 "ஒவ்வொரு நிகழ்வும் அண்டவெளி நேரத்தால் கட்டப்பட்டுள்ளதால் இதுதான் சாத்தியம். எளிதாக சொல்ல வேண்டுமெனில், இதே போல இந்த விசயத்தை நான் நிறைய முறை பதிவிட்டுக் கொண்டே இருக்கிறேன். நீங்களும் நிறைய முறை படித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனில் அனைத்து நிகழ்வும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவைதான்."

இதுவரை நான்காவது பரிமாணமாகிய 'காலம்' என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள். இப்போது ஒரு கேள்வி எழும். இவ்வாறு காலத்தால் கட்டப்பட்ட நிகழ்வுகளை  முன்கூட்டியே அறிய முடியுமா?  அறிந்தால் சில நிகழ்வுகளை தடுக்க முடியுமே. இதற்கு விடைதான் ஐந்தாவது பரிமாணம் என அழைக்கப்படும் 'மனோசக்தி'.





இந்த பதிவின் ஆரம்பத்தில் நான் கேட்டிருந்த கேள்விகளுக்கும் இதுதான் விடை. நம்மாலும் அந்த வானுரை பதிவுகளை வாசிக்க இயலும்.

இது பற்றி இன்றைய அறிவியல் என்ன சொல்கிறது. ஒரு ஆராய்ச்சியை பற்றி குறிப்பிடுகிறேன். உலகப்புகழ் பெற்ற 'வாவ்' சிக்னல் பற்றிய ஆராய்ச்சிதான் அது.

ஜெர்ரி என்ற விஞ்ஞானி 1977ல் அவருடைய தொலை நோக்கி பதிந்திருந்த விண்வெளி பதிவுகளை ஆராய்ந்த போது ஒரு ஆச்சரியமான அலைவரிசை கிட்டியது. அது நம்முடைய தனுர் மண்டலம் என்றழைக்கப்படும் நட்சத்திர மண்டலத்தில் இருந்து - 200 ஒளியாண்டுகள் - தொலைவில் இருந்து வந்திருந்தது. அதனை மொழிபெயர்த்தபோது கிட்டிய விடை 'வாவ் (WOW)'. பூமியை பார்த்து வெளியுலகத்தில் இருந்து வர்ணிக்கப்பட்ட இந்த சிக்னலை யார் அனுப்பியிருக்க முடியும்.
இதற்கான சுட்டி: http://en.wikipedia.org/wiki/Wow!_signal
Thanks to wiki resource


நம்முடைய விஞ்ஞானிகளுக்கு சிக்கல் என்னவென்றால் அதற்கு பதில் அனுப்பினால், அது அனுப்பப்பட்ட இடத்தை அடைய  200 வருடங்கள் ஆகும். அதற்குள் அனுப்பியவர் உயிருடன் இருப்பா
ர் என்று சொல்ல முடியாது. அது பிரபஞ்சத்தில் குறிப்பிட்ட தொலைவிலிருந்து வந்திருந்தால் அந்த அலை வீச்சு அருகிலிருக்கும் அலைவாங்கியிலும் பதிவாகியிருக்கும். ஆனால் இந்த சிக்னல் மீண்டும் அடுத்த ஒலிவாங்கியில் பதியப்படவேயில்லை. அப்படியென்றால் யாரோ அருகே வந்து சொல்லிவிட்டு சென்றதுபோல இருக்கிறது. காலம் சம்பந்தப்பட்ட கணக்கீடுகளால் இதனை விளக்கமுடியவில்லை. இந்த விசயத்தில் நம்முடைய நான்காம் பரிமாணம் பயன்படாமல் போய்விட்டது. இதனை விளக்கும் பொருட்டு இயற்பியல் புது வார்த்தையை கொண்டு வந்தது. Worm hole(புழுத்துளை என்றால் நல்ல வார்த்தையாகப்படவில்லை). காலத்திற்கு கட்டுப்படாத ஒரு குறுக்கு வழிப்பயணம் இதில் சாத்தியம். 
இதற்கான சுட்டி:http://en.wikipedia.org/wiki/Wormhole


சரி சரி, எளிதாகவே சொல்லகிறேன். வாயு வேகம் மனோ வேகம் என்று படித்திருப்பீர்களே. இதில் மனோவேகத்தைதான் இயற்பியல் தத்தெடுக்கிறது. ஐன்ஸ்டைனின் சில கோட்பாடுகளை கொண்டு இதனை விளக்கவும் முற்படுகின்றனர். இன்னும் நிரூபிக்கப்படவில்லை. சரி, நம் பக்கம் ஏதாவது நடந்திருக்கிறதா என்று பார்ப்போமா?

பழந்தமிழரின் வாழ்க்கையில் நான்காவது பரிமாணம் பற்றிய பதிவுகள் இல்லை. ஆனால் ஐந்தாவது பரிமாணம் சம்பந்தப்பட்ட கலைகளில் நம் முன்னோர்கள்  மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதை புரிந்து கொள்ள முடியும். பழந்தமிழர் என்றால் 50,000 வருடங்களுக்கு முந்தைய குமரி மாந்தன் எனப்படும் மூத்த தமிழ்குடியின் வரலாறு பற்றி அடுத்த பதிவில் சற்று விரிவாக பார்ப்போம். 



முதல்பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/1.html
இரண்டாம் பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/2.html
மூன்றாம் பாகம் : http://annaiboomi.blogspot.com/2011/11/3.html
நான்காம் பாகம். http://annaiboomi.blogspot.com/2011/11/4.html

16:46 | Author: சாகம்பரி

அலைகளின் அழியாத்தன்மையும் அவற்றின் பாதிப்பும்.

இப்போது மேலும் ஒரு விசயத்தை நினைவுபடுத்திக் கொள்வோம். சிறிய வயதில் இயற்பியலில் படித்ததுதான். நாம் இந்த உலகத்துடன் தொடர்பு கொள்ளுவது பெரும்பாலும் அலை வடிவங்களாகவே நடக்கின்றன. நாம் ஐம்புலன்களாலும் அறிந்து கொள்ளும் செய்திகள் அலைவடிவங்களாக உள்ளன. உதாரணமாக ஒலி,ஒளி போன்றவை அலைகளாகவே நம் புலன்களை அடைகின்றன. சரிதானே, ஒருவர் நம்மிடம் பேசும்போது அவருடைய பேச்சானது ஒலி அலையாக நம்முடைய செவியை அடைகிறது. அதுபோலவே நாம் காணும் காட்சிகளும் ஒளி அலையாகவே நம்மை அடைகிறது. என்ன ஒன்று, ஒலியைவிட ஒளி விரைவாக செல்லும். அதனால்தான் மின்னலை முதலிலும் இடியை சற்று பொறுத்தும் நம்மால் உணரமுடிகிறது.

நம்முடைய எண்ணங்கள்கூட அலைகளாக பரவுவதாக நிருபிக்கப்பட்டுள்ளது. அது மற்றவர்களை பாதிப்பதையும் நிருபித்துள்ளார்கள். இது பற்றி விரிவாக பிறகு பார்ப்போம். இப்போது இந்த படத்தை பாருங்கள்.
      
  
இந்த படத்தில் மூன்று பாகமாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் நம்முடைய புலனால் உணரக்கூடியது. இரண்டாவது தெளிவாக உணரமுடியாது. மூன்றாவது நம்மால் உணரவே முடியாத அளவிற்கு இருக்கிறது. சக்தி குறைந்து கொண்டே போகிறதே தவிர முற்றிலுமாக இல்லையென்று சொல்லமுடியாது(not nullified). சரியான சாதனங்களை பயன்படுத்து பெரிதுபடுத்தி மீண்டும் உணர முடியும். 

உதாரணமாக, நம் அருகில் இருப்பவர் பேசுவது தெளிவாக கேட்கும். அவர் சற்று தொலைவு சென்றவுடன் கேட்பது படிப்படியாக குறைகிறது. இன்னும் அவர் நகரும் போது சுத்தமாக எதுவும் கேட்காது. ஏனெனில் அலையின் அளவு குறைகிறது. சரியான சாதனங்கள் உதவியுடன் கேட்க முடியும்.  இன்னும் விலகிச் செல்லும்போது நம்முடைய சாதனங்கள் உதவி செய்யாது. அதனால் அதனை உணர முடியாமல் போகிறது. ஆனால், அவை வலு குறைந்த அலைகளாக பிரபஞ்சத்தில் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. 

ஒரு தகவல் சொல்கிறேன். பென்சியாஸ்  மற்றும் வில்சன் (Penzias and Wilson) என்ற இயற்பியல் விஞ்ஞானிகள் 1978ல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றனர்.  பெல் ஆய்வக விஞ்ஞானிகளான அவர்கள் CMB எனப்படும் பிரபஞ்சம் சம்பந்தப்பட்ட 'அண்டவியல் நுண்ணலை பின்புல கதிர்வீச்சு' ஆராய்ச்சிக்காக அந்த பரிசை வென்றனர். 1964ல் அண்டவெளியில் பரவியிருக்கும் நுண்ணலைகளை பதிவு செய்து கொன்டிருந்த போது, ஒரு புதிய பதிவொன்று கிட்டியது. மிக அதிக வெப்பவீச்சை பதிவு செய்திருந்த அந்த காஸ்மிக் கதிர்களின் மூலதாரம் நம்முடைய பால்வெளிக்கு வெளியில் இருந்து வந்தது என்று தெரிந்தது. சிலபல அறிவியல் தேடல்களுக்குப் பிறகு அந்த அலைவீச்சானது நெபுலா வெடித்தபோது வெளிப்பட்ட கதிர்வீச்சு (வெடிப்பு தொடங்கிய 3,00,000 வருடங்களுக்குள்) என்று உறுதிபடுத்தினர். அதுவரை (1970வரை) பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி எழுந்த வேறுபட்ட கருத்துக்களை பொய்யாக்கி வெடிப்பின் மூலமே உருவானது என்ற கருத்தை உறுதிபடுத்திய இந்த ஆய்விற்கு நோபல் பரிசு கிட்டியது. 
இதுதான் அவர்கள் உபயோகித்த தொலைநோக்கி.
      

குறிப்பிட்ட அந்த கதிர்வீச்சின் ஒலிவடிவ பதிவு இணையத்தில் கிடைக்கிறது. முடிந்தால் கேட்டுபாருங்கள். மிக அதிகபட்ச அதிர்வெண்களில் பதிவாகியுள்ள அந்த ஒலிப்பதிவை கேட்டு காது வலியெடுத்தால் நான் பொறுப்பல்ல.(எனக்கு இரண்டு நாட்கள் வலியிருந்தது)

இதன் மூலம் நான் சொல்ல வருவது என்னவென்றால் உருவாக்கப்பட்ட  அலைவீச்சு அல்லது கதிர்வீச்சு அழிவடைவதில்லை. அவை பிரபஞ்சத்திலேயே சுற்றி வருகின்றன. இதே போல்தான் ஒரு நிகழ்வு நடக்கும்போது உருவாகும் ஒளி, ஒலி செய்திகள் அலைகளாக நம்மை சுற்றி பரவிக் கிடக்கின்றன. இவற்றை 'ஆகாஷிக் ரெக்கார்டுகள்'  என மெட்டாபிஸிக்ஸ் (புலன் தாண்டிய நுண்ணியல்) ஆய்வுகள் ஒப்புக்கொள்கின்றன. நம் எண்ணங்கள்கூட கதிர்வீச்சுகளாக பரவுவதை பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்த வானுரை பதிவுகள் நம்மை பாதிக்குமா? கண்டிப்பாக பாதிக்கும். அவை நம் சம்பந்தப்பட்டவையாக இருந்தால். உதாரணமாக, பலவிதமான மின்காந்த அலைகளாக வானொலி நிகழ்ச்சிகள் பரவிக்கிடக்கின்றன. சரியான அலைவரிசைக்கு பொருந்தி (tuned)வருகின்ற நிகழ்ச்சியை மட்டும் நம்மால் கேட்கமுடிகிறதல்லவா? அதேபோல, மிகவும் மெல்லிய வீச்சுகளாக தேய்வுற்று கிடக்கும் நமக்குத் தொடர்பு உடைய அலைகளுக்கு சரியான உள்வாங்கியாக(reciever) நாம் விளங்கமுடியும். அதற்கான ஆய்வுச்செய்திகளுக்கு போவதற்கு முன் சில விசயங்களை நாமே உணர முயற்சிக்கலாமா?

இவற்றை உணர்ந்திருக்கிறீர்களா? 
 
- சில நிகழ்வுகள் நடக்கும்போது அது ஏற்கனவே நடந்ததுபோல உணர்வோம். ஆனால், நமக்குத் தெரிந்தவரை அது முற்றிலும் புதிதான சூழ்நிலையாக இருக்கும்.
 
- நொடிகளில் முடிவெடுக்க வேண்டிய சில நிகழ்வுகளை சந்திக்கும்போது யாரோ உடனிருந்து வழிகாட்டுவதைப்போல உணர்ந்து முடிவெடுப்போம். ஏன் அந்த முடிவை எடுத்தோம் என்பதற்கு விளக்கம் கூட நம்மால் சொல்ல இயலாது.
 
- அப்போதே எனக்குத் தோன்றியது என்று நிறைய முறை சொல்லியிருப்போம்.
 
- பெரும்பாலும் இதுபோன்ற உணர்வுகள் அந்த சூழ்நிலைக்குள் நாம் செல்லும்போதுதான் தோன்றும். முன்கூட்டியே எதுவும் தோன்றாது.
 
- ஒரு சிக்கலில் இருக்கும்போது அதற்கான சரியான தீர்வு நாம் உறக்கத்திலிருக்கும்போது கிட்டும்.

இவற்றுக்கெல்லாம் விளக்கம் இருக்கிறதா?
18:34 | Author: சாகம்பரி
இந்த கட்டுரையின் முதல் இரண்டு தொடர்புகள்
முதல்பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/2.html
இரண்டாம் பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/1.html

 


முதலிரண்டு பகுதிகளுக்கே சில கேள்விகள் வந்துவிட்டன. அவற்றை விளக்காமல் அடுத்த பகுதிக்கு செல்ல முடியாது போலிருக்கிறது.


1. ஐன்ஸ்டை
ன் சமன்பாடு, '=' குறி, அணுசக்தி ஆகியவற்றை பற்றி எளிய விளக்கம் .
'=' குறிக்கு அப்படி என்ன முக்கியத்துவம் என்று தோன்றுகிறதல்லவா? ஒரு செய்தியை சமன்பாடாக சொல்லிப்பார்ப்போம்.

தன்னம்பிக்கை+உழைப்பு --> உயர்வு
    இதன் விளக்கம் தன்னம்பிக்கையும் உழைப்பும் இருந்தால் வாழ்க்கையில் உயரமுடியும்.

தன்னம்பிக்கை+உழைப்பு
= உயர்வு
   இதன் விளக்கம் எந்த அளவிற்கு தன்னம்பிக்கையும் உழைப்பும் இருக்கிறதோ அந்த அளவிற்கு உயர்வு கிட்டும் என்பதும்,

   உயர்வு=தன்னம்பிக்கை+உழைப்பு என்றும் கொள்ளலாம்.
   இதன் விளக்கம் உயர்வு இல்லையெனில் தன்னம்பிக்கையோ அல்லது உழைப்போ இல்லையென்றும் கொள்ளலாம். இரண்டு பக்கமும் சமமாகும் இந்த
= குறிதான் ஐன்ஸ்டைனின் சமன்பாட்டை முக்கியத்துவம் பெற்றதாக்கியது.

ஐன்ஸ்டைனின் சமன்பாடு:
 
    
   E - எனப்படுவது ஆற்றல், சக்தி
   M  - ஒரு பொருளின் எடை. இத்துடன் C (ஒளியின் வேகம்)ஐ சேர்க்கும் போது ஆற்றலின் அளவு தெரிய வருகிறது.

இரண்டு விசயம் புரிந்து கொள்வோம்.
1. ஒரு பொருள் ஆற்றலாகவும் ,  ஆற்றல் பொருளாகவும் மாறும்

2. ஒரு பொருளை ஆற்றலாக மாற்றும்போது கிடைக்கவேண்டிய முழு ஆற்றலின் அளவையும் கணக்கிட முடியும். 

  எளிமையாக சொல்ல வேண்டுமெனில் , ஒரு மரத்துண்டை எரிக்கும்போது கிட்டும் சக்தி இந்த சமன்பாட்டை ஒத்துப்போகாது ஏனென்றால், அவை முழுமையாக எரிக்கப்படாமல் கரியாகவும், சாம்பலாகவும் மிச்சம் இருக்கும்.  இது மிகச் சாதாரண வார்த்தைகளில் சொல்லப்பட்டது. இதே கணக்கீட்டை வைத்துதான் ஒரு பொருளின் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தும் அணுவை பிளக்கும் யுக்திகள் புரிந்து கொள்ளப்பட்டன. அணுவை பிளக்கும் முன் செறிவூட்டும் முறைகள் புகுத்தப்பட்டன. செறிவூட்டுவதால் ஒரு பொருளின் எடையை அதிகரிக்க முடியும். எனவே ஆற்றலையும் அதிகரிக்க முடியும்.
மிகவும் செறிவூட்டப்பட்ட மூலக்கூறுகள் விண்மீன்களில் இருக்கின்றன. எனவேதான் அவை ஓளியையும் வெப்பத்தையும் அதிகமாக வெளியிடுகின்றன. நமக்கு மிக அருகில் இருக்கும் விண்மீன் சூரியன் ஆகும்.

போகருடைய குறிப்புகளில் கனநீர் தயாரித்ததாக உள்ளன. சாதாரணமாக 100மிலி நீர் இருக்கும் எடையைவிட கன நீர் பல ஆயிரம் மடங்கு எடை அதிகம் உள்ளதாகவும் யாராலும் தூக்க முடியாத அளவிற்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது அணு கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் முறைகளை தெரிந்து வைத்திருந்தார்கள் (மூலிகையை பயன்படுத்திதான்) அதனால்தான் தாமிரத்திலிருந்து தங்கம் உருவாகும் ரசவாத ரகசியங்கள் தெரிந்திருந்தனர்.

2. அண்டவெளி விரிவடைதல் சுருங்குதல் பற்றிய விளக்கம்

அண்டவெளி எனப்படும் universeன் மையத்தில் மிகுந்த அடர்த்தியுடன் கூடிய வாயு மூலக்கூறுகள் (ஹீலியம் போன்றவை) எரிந்து கொண்டே இருக்கின்றன. இதனால் அதனை சுற்றியுள்ள பொருட்கள் உந்தி வெளித் தள்ளப்பட்டுகின்றன. உ-ம், பறக்கும் பலூன்களை வெப்பத்தை பயன்படுத்தி விரிவடைய வைப்பதுபோல்.

அண்டவெளி விரிவடையும்போது மையப்பகுதியை விட்டு பயணிக்கும் வாயு மூலக்கூறுகள் குளிர்ந்து விண்மீன்கள், உருவானது. அவை  பருப்பொருளானது
மாறியது போக எஞ்சிய ஆற்றல் மற்ற பொருட்களையும் தன்னகத்தே இழுக்க முயற்சிக்க, அண்டங்கள் (Galaxy), கோள்கள்(planets) உருவாகின.
   
இதேபோல தலைகீழாக நடக்கும்போது விண்மீன்கள், அண்டங்கள், கோள்கள் ஆகியன மீண்டும் வாயு மூலக்கூறுகளாக மாற வாய்ப்பு உள்ளதல்லவா? இதனைத்தான் அண்டவெளி சுருங்குதல் என்கிறார்கள். மையத்திலிருக்கும் எரிதல் நின்றவுடன் ஏற்படும் வெற்றிடம்(black hole) அனைத்தையும் மீண்டும் தன்னகத்தே இழுத்துக் கொள்ளும்  நிலை வரும்போது. வெறும் வாயு மூலக்கூறுகளால் நிரப்பபட்ட ஆற்றல் மிக்க நெபுலா உருவாகும். 

உ-ம், ஓரிடத்தில் வளி மண்டல அழுத்தம் குறையும்போது அதன் அருகிலுள்ள மேகங்களை இழுத்து சேர்த்துக் கொண்டு புயல் உருவாகுவது போல.

3.  காலமாகிய நான்காவது பரிமாணம் பற்றிய விளக்கம்

   "ஒவ்வொரு நிகழ்வும் அண்டவெளி நேரத்தால் கட்டப்பட்டுள்ளதால் இதுதான் சாத்தியம். எளிதாக சொல்ல வேண்டுமெனில், இதே போல இந்த விசயத்தை நான் நிறைய முறை பதிவிட்டுக் கொண்டே இருக்கிறேன். நீங்களும் நிறைய முறை படித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனில் அனைத்து நிகழ்வும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவைதான்."


ஒவ்வொரு பொருளுக்கும் காலசுழற்சி என்பது உண்டு. அண்டவெளிக்கு இருப்பது போலவே தோற்றமும் மறைவும் மீண்டும் தோன்றுதலும். குறிப்பிட்ட நிகழ்வு எனப்படுவது அந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட பொருட்களுடைய காலமும் சேர்ந்ததுதான். 

ஒரு வேளை மதுரை வடக்கு வெளி வீதியில்...

    -  கிமு 200ல்
நான் கண்ணைமூடிக் கொண்டு சென்றிருந்தால் மிருகத்தின் வயிற்றுக்குள் செல்லும் வாய்ப்பு கிட்டியிருக்கும். 
    -  நான் மூன்றாம் நூற்றாண்டில் கண்ணை மூடிக் கொண்டு சென்றிருந்தால் குறைந்த பட்சம் அரசனின் குதிரையின் உதை மட்டும் கிட்டியிருக்கும்.
    -  ஆனால் இப்போது சென்றால் எனக்கு மிக மோசமான விபத்து நேரிடலாம்.  ஏனெனில் அப்போது பேருந்து என்ற பொருளின் காலம் இல்லை.  வடக்கு வெளி வீதி, நான், பேருந்து இத்தனையும் சேர ஒரு காலம் வருகிறது அல்லவா அப்போது 'அந்த நிகழ்வு' ஏற்பட வாய்ப்பு வருகிறது. 

   விபத்து ஏற்படாமலும் போகலாமே என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். நல்லது இந்த கேள்வியை குறித்து வையுங்கள். பிறகு விளக்குகிறேன்.