20:39 | Author: சாகம்பரி
மனோ சக்தி...!.  இது ஐந்தாம் பரிமாணம் தொடரின் அடுத்த பகுதிதான். ஆழ்மனசக்தி எனப்படும் இதனை பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. நிறைய பதிவுகள் உள்ளன.  அறிவியல் பூர்வமாக நிருபிக்க முடியாத பல சம்பவங்களுக்கு பின்னணியாக இந்த மனோசக்தியை சொல்வதுண்டு. ஏனெனில் அறிவியல் என்பது ஐம்புலன்களால் உணரப்பட்டவற்றிற்கு மட்டுமே விளக்கம் தருகிறது. அனைத்திற்கும் விளக்கம் தரக்கூடிய அறிவியலை நாம் இன்னும் அறியவில்லை என்பதே உண்மை.

இயற்பியல் கோட்பாட்டின்படி ஆற்றலின் ஆதாரமாக ஒரு பருப்பொருள் (physical sysytem) அவசியம் தேவைப்படுகிறது. (energy is the ability a physical system has to do work on other physical systems). உதாரணமாக, கிரிக்கெட் விளையாட்டை பார்க்கலாம். மட்டையின் மோதும் வேகத்தில்தான் பந்து செல்லும் தூரம் நிர்ணயிக்கப்படுகிறது. மட்டையும் பந்தும் மோதும் வேகம்தான் சக்தியின் அடிப்படை. கிரிக்கெட் மட்டைக்கு எப்படி சக்தி கிட்டுகிறது? அதனை வீசும் வீரனின் செயல்பாடுதான் மட்டைக்கு சக்தியை தருகிறது. வீரன்---> மட்டை, மட்டை-->பந்து என சக்தி மாற்றப்படுகிறது. இதனை நாம் ஐம்புலன்களால் உணரவும் முடிகிறது. எனவே பந்து செல்ல வேண்டிய இலக்கு, தொலைவு, மட்டையின் வேகம், அதற்காக செலுத்த வேண்டிய சக்தி என கணக்கிட்டு வேலை செய்ய முடிகிறது. போதுமான பயிற்சியையும் எடுக்க முடிகிறது. இது எதுவுமே இல்லாமல், எந்த இயற்பியல் விசையும் இன்றி வெறும் எண்ணங்களின் உதவியுடன் ஒரு பருப்பொருளை கையாள முடியுமா? வலிவு மிக்க எண்ணங்கள் ஒரு இயற்பியல் சக்தியாக மாறி செயல்படுகின்றன என்பதை நம்ப முடிகிறதா?  முடியும் என்பதே மனோசக்தியின் ரகசியம்.


மனோசக்தியின் உதவியுடன் நோய்களை குணப்படுத்துவது, ஒருவரின் மனதில் உள்ள விசயங்களை அறிவது, நம்முடைய எண்ணங்களை மானசீகமாக பரிமாறிக் கொள்வது, வேறு ஒரு இடத்தில் நடப்பதை உணர்ந்து சொல்வது, ஒரு பொருளை நகர்த்துவது போன்ற அதீத செயல்பாடுகளை பற்றி நிறைய செய்திகள் உள்ளன. நாம் எளிமையான சில விசயங்களை உணர முயற்சிக்கலாம்.

நிறைய சந்தர்ப்பங்களில் நாம் உணர்ந்திருப்போம். ஒரு விசயத்தை நினைத்துக் கொண்டிருப்போம் அது நடந்துவிடும். வெளியூரில் இருக்கும் மகனுடன் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே அவனிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்துவிடும்.

நல்லதோ... கெட்டதோ... எதையாவது நினைத்துக் கொண்டிருப்போம் அது நடந்தேவிடும். நான் சொன்னதுபோலவே நடந்தது பார்த்தாயா என்று சொல்லிக் கொள்வோம். ஆனால் எல்லா சூழ்நிலைகளிலும் அப்படி நடைபெறுவது இல்லை. ஏன்?

சிலருக்கு... சில நேரங்களில்... சில விசயங்களில்... மட்டும் மனோ சக்தி செயல்படுகிறது. எப்போதுமே என்ற உறுதித்தன்மை இல்லாததால்  கேள்விக்குறியாகிவிட்டது. ஏனெனில் அறிவியல் அடிப்படையில் சில நிகழ்வுகளை நிருபிக்க எப்போதும் ஒப்புக் கொள்ளக் கூடிய உண்மையாக இருக்க வேண்டும்.

ஏன் இந்த குளறுபடி? மனோசக்தியை கையாள எண்ணங்கள் வலிமையாக இருக்கவேண்டும். உ-ம், நமக்கு உடல் நலம் சரியாக வேண்டும் என்ற சிந்தனை மற்றவர்களுக்காக நினைப்பதைவிட வலிவு மிக்கதாக இருக்கும்.  உளவியல் ஒப்புக் கொள்ளும் ஒரு வார்த்தை mind power.  இதுதான் மனோசக்தி எனப்படுகிறது.  எண்ணங்கள் அல்லது சிந்தனைகள் இவற்றின் பிறப்பிடம் மூளை என்கிறது அறிவியல். சரி அது எப்போது வலிமை மிக்கதாக மாறும்? அத்துடன் ஆத்ம சக்தி எனப்படும் பிராண சக்தியும் சேரும்போதுதான். ஒரு உதாரணம் பார்ப்போமா? ப்ராண சக்தி பற்றி விரிவாக அடுத்த பதிவில் தொடர்கிறேன்...


11:14 | Author: சாகம்பரி
மேற்குத் தொடர்ச்சி மலையில் கிட்டிய கடல்வாழ் உயிரினங்களின் படிமம்....
நாயினார் தீவில் கிட்டிய தமிழ் கலந்த நாகர் மொழியுருக்கள்.....
இன்னும் வரலாற்றின் மூடப்பட்ட பக்கங்களை புரட்ட புரட்ட பல விசயங்கள் கிட்டுகின்றன. ஒரு பெரும் நிலப்பரப்பும்
தில் வாழ்ந்த மாந்தரில் பெரும்பான்மையானோரும் அழிக்கப்பட்ட செய்திகளை தெரிவிக்கின்றன. புலம் பெயர்ந்து சென்ற மக்களின் மனக்கிலேசங்கள் செவிவழிச் செய்திகளாகவும் கதைசொல்லிகளின் மூலம் கதைகளாகவும் கிட்டுகின்றன. வெவ்வேறு மொழிகளில் சொல்லப்படும் கண்ணகியின் கதையும்,  'எழு கடல் எழு மலை தாண்டி ராஜாவின் உயிர்  இருக்கிறது' என்ற பாட்டி கதைகள்கூட ஊணை காப்பாற்ற உயிரை பிரிந்து வந்த மண்ணின் மைந்தர்களின் ஏக்கமாகவே காட்சியளிக்கின்றன. எழு கடல் என்றால் பொங்கியெழுந்த கடல் என்றும் எழுமலை என்றால் எரிமலையையும் குறிக்கிறது என்பது மெய்யா? எரிமலை சீற்றம் கண்ட கடல் கொண்ட என் நாடு எங்கேயோ இருக்கிறது என்பதை குறித்த வாக்கியம் என்பதும் பொருந்தி வருகிறதே. தொல்லியல்,மரபியல்,கடலியல் சார்ந்த ஆய்வுகள் நடத்திதான் உண்மையை வெளிக்கொணர முடியும். அதுவரை நம் தொலைந்து போன பெருமைகளை மறந்து இருக்க வேண்டும். 

இப்போது நாம் இந்த தொடரின் தலைப்பிற்கு வந்தாக வேண்டும்.....

மனோ சக்தி பற்றி அறியும் முன், மனம் என்பதன் விளக்கம் வேண்டும். சூட்சும உடல்... ஸ்தூல உடல்....  ரொம்பவும் ஆன்மீக விளக்கமாக போய்விடும் என்பதால் இந்த இடத்திற்கு ஒப்புதலாக உயிர் எனப்படும் ஆன்மாவையே மனம் என்று கொள்கிறேன். உடல், உயிர் இரண்டும் சேர்ந்ததுதான் நாம். இவை இரண்டையும் இணைக்கின்ற வித்தை நம்மிடம் இல்லை -அதாவது சாதாரண மனிதர்களிடம் இல்லை. உடலுக்கு காலத்தின் கட்டுப்பாடு உண்டு. உயிருக்கு கிடையாது. உடலுக்கு சக்தி குறைவு, வேகமும் குறைவு ஆனால் உயிருக்கு சக்தியும் வேகமும் அதிகம். எனவே உடலில் இருந்து உயிர் விலகியும் சேர்ந்தும் இருக்கும் வித்தை தெரிந்து கொண்டால் நான் சித்தனாகிவிடுவேன் - அதாவது நான்காவது பரிமாணத்தை கடந்துவிடுவேன். எங்கெல்லாம் நான்காவது பரிமாணத்தின் கட்டுப்பாடு இல்லையோ அங்கெல்லாம் நரை,திரை,மூப்பு,பிறப்பு,இறப்பு கிடையாது. உடலில் இருந்து விடுபட்டுவிடுவதால் ஐந்தாம் பரிமாணத்தில் செயலாற்ற முடியும் - மனோவேகம், நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் பிரசன்னமாகலாம்.

( மரணத்திற்குப் பின் மனிதர்கள் அதிவேகமாக இருக்கும் வேறு பரிமாணத்தை அடைந்துவிடுவதாகவும் அவர்கள் நம்முடனும் இருக்கிறார்கள் என்றும் சித்தர் பாடல் ஒன்று கூறுகிறது.  கரியபவளம் என்ற மூலிகையை விளக்கெண்ணெயில் குழைத்து புருவத்தில் தடவிக் கொண்டால் நம்மை சுற்றி இருக்கும் மற்றோரு பரிமாணமும் அங்கே இருப்பவர்களும் தெரிவார்கள் என்றும் அந்த பாடல் மேலும் கூறுகிறது. பரிட்சித்து பார்க்கும் மனதைரியம் எனக்கில்லை. யாராவது முயற்சித்தால் சொல்லுங்கள்.)

இதெல்லாம் ஆன்மீகக் கட்டுக்கதைகள் என்று தோன்றுகிறதல்லாவா? நான் முதலிலேயே குறிப்பிட்ட worm hole theory இன்ன பிற வார்த்தைகளில்... இதனைத்தான் சொல்கிறது -. பிரபஞ்சத்தில் ஆங்காங்கே புழுத்துளைகள் எனப்படும் மர்மமான துளைகள் உள்ளன. அவற்றின் வழியே பயணிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் அதி தொலைவில் உள்ள இடத்தைக்கூட நொடிகளில் அடையமுடியும். அப்படித்தான் பிரசித்தி பெற்ற 'வாவ்' சிக்னலும் 72நொடிகள் மட்டும் கிட்டியது என்று ஒரு முடிவிற்கு வந்துள்ளனர். இதனை நிருபிப்பதற்காக வார்ம்ஹோல்களை தேடிவருகின்றனர். பிரச்சினை என்னவென்றால் வாவ் சிக்னலை எழுப்பிவிட்டு நொடிகளில் மறைந்துபோன அந்த 'யாரோ' ஒருவருக்கு வார்ம் ஹோலில் பயணம் செய்வதற்கான நுட்பங்களும், அதிவிரைவு பயணத்தை எதிர்கொள்வதற்கான தகுதிகளும், சக்தியும் இருந்தன, அது நம்மிடம் இல்லை. .... அப்படியென்று சொல்லுகிறார்கள்.


உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதுதான் எனக்கும் தோன்றுகிறது. சித்தர்கள்.... முக்காலம் கடந்த தன்மை.... வான்வெளி சஞ்சாரம்.... ஆழ்மன சக்தி....  இதெல்லாம் மிகுந்த செலவு செய்து ஒரு நாள் புதிதாக கண்டுபிடித்த அறிவியல் கோட்பாட்டின்படி சிக்கலான கணித சமன்பாடுகள் கொண்டு நிருபிப்பார்கள். நம்மில் சிலர் அப்போதும் "இதெல்லாம் நாங்க அப்போதே சொன்னோம்" என்றும் பதிவுகள் போடலாம். அதுவரை கேள்வியும் தேடலும் நம் விருப்பத்திற்கே இருக்கட்டும். அறிவியல் தேடலாகவோ இல்லை ஆன்மீகத் தேடலாகவோ இருக்கட்டும்.

என்னுடைய பதிவும் வான்வெளி சஞ்சாரத்தில் நீண்ட நாட்கள் டிஜிட்டல் அலைகளாக பயணிக்க வாய்ப்பு இருப்பதால்...எதிர்காலத் தேவை கருதி இன்னும் சற்று கூடுதலாக பதிவிடுகிறேன். இதற்கு அறிவியல் விளக்கமெல்லாம் தற்சமயம் இல்லை. அடுத்த பதிவிற்கு கதை கேட்கும் மன நிலையில் இருப்பவர்கள் வரலாம்.

அடுத்த பகுதியில் ஏழாம் அறிவான மரபியல் நினைவுகளும், ஐந்தாம் அறிவான மனோசக்தியும் பற்றிய சில விசயங்களை -(பழங்கதைகள்) பேசலாம்.



முந்தைய பதிவுகள்
முதல்பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/2.html
இரண்டாம் பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/1.html
மூன்றாம் பாகம் : http://annaiboomi.blogspot.com/2011/11/3.html
நான்காம் பாகம். http://annaiboomi.blogspot.com/2011/11/4.html
5ம் பாகம்:   பழந்தமிழ் மண்ணின் வரலாறும் இணைந்தது.
6ம் பாகம்    
பழந்தமிழ் மண்ணின் வரலாறும் இணைந்தது.
7ம் பாகம்     பழந்தமிழ் மண்ணின் வரலாறும் இணைந்தது.

22:09 | Author: சாகம்பரி
Thanks to wiki resource- Kumari continent
தமிழ் பழங்குடியின் வாழ்க்கை முறைகளுக்கான ஆதாரம் கற்காலத்திலிருந்து சட்டென்று இரும்பு காலத்திற்கு வந்துவிட்டதை குறிப்பிடுகின்றன. இடைப்பட்ட இரண்டு உலோக காலங்களுக்கான தொல்லியல் சான்றுகள் கிட்டவில்லை. இவை சிந்து-சமவெளி நாகரிகத்தில் கிட்டியுள்ளன. இடையில் என்ன நடந்தது...?

அதாவது செப்பு காலம், வெண்கல காலம் ஆகியவற்றிற்கான தொல்லியல் சான்றுகள் தமிழ் மண்ணில் கிட்டவில்லை. இலக்கியத்திலிருந்த ஒரு விடை கிட்டுகிறது. ஆரம்ப கால தமிழ் இலக்கியங்களில் ஒரு பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. குமரி கண்டம் என்பதுதான் அது. அப்படி ஒரு நிலப்பரப்பு இருந்ததாக தெரியவில்லை. இலக்கியங்கள் அதனை அழகான விவரித்திருந்தன. அது ஏழு பனை நாடுகள் கொண்டது. அங்கு வசித்தவர் குமரி மாந்தர். இரண்டு பெரிய மலைத்தொடர்களுக்கு இடையே உருவாகியயிருந்த பரந்த நிலப்பரப்பு. குமரி கண்டத்தின் மக்கள் நாகரிகமாக இருப்பிடங்கள் உருவாக்கி வாழ்ந்திருந்தனர். முதலிரண்டு கடற்கோள்கள் நிலநடுக்கம், எரிமலை ஆகியவற்றை உருவாக்கி குமரி கண்டத்தை கடலுக்கடியில் கொண்டு சென்றது என்று கூறப்படுகிறது. இதற்கான புவியியல் ஆதாரம் : http://news.bbc.co.uk/2/hi/science/nature/353277.stm 1990ல் கண்டுபிடிக்கப்பட்டது.

குமரி கண்டம் எனப்படும் பரந்த நிலப்பகுதி தற்போதைய குமரி முனையுடன் இருந்தது என்று கூறப்படுகிறது. இது பற்றி தமிழறிஞர் தேவ நேய பாவாணர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலப்பரப்பு ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவை இணைத்து பரவியிருந்தது. அந்த சமயத்தில் இலங்கை இதனுள்தான் இருந்தது.

மிகப்பெரிய அளவில் நான்கு கடற்கோள்கள்  ஏற்பட்டன. அவைதான் குமரி கண்டத்தின் அழிவிற்கு காரணமானவை என்றும் கூறப்படுகிறது. 2,00,000 ஆண்டுகளுக்கு முன் இருந்த குமரி கண்டத்தின் அழிவு 50,000 ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கடைசியாக ஏற்பட்ட கடற்கோள்தான் காவிரிபூம்பட்டினம் எனப்படும் பூம்புகாரை கடல் கொண்டதாக கூறப்படுகிறது. இது 17,000 வருடங்களுக்கு முன் நடந்ததாக குறிப்புகள் கூறுகின்றன. 1980ல் நடத்தப்பட்ட கடல் ஆய்வுகள் தற்போதைய காவிரிபூம்பட்டினத்தின் கடற்பகுதியில் 75 கி.மீ தொலைவில் கடலுக்கடியில் புதையுண்டிருக்கும் நகரத்தை கண்டுபிடித்துள்ளனர்.

அந்த சமயத்தில், பெரிய பூகம்பங்கள் ஏற்பட்டன. எரிமலை வெடித்தது. கடற்கோள் ஏற்பட்டது. இதன் விளைவாக பரந்த நிலப்பரப்பான குமரி கண்டம் கடலுக்கடியில் சென்றது. ஏராளமானோர் மாண்டனர். இவை வரலாற்று குறிப்புகள். இந்த காலகட்டத்தில் மானசீகமாக பயணித்தால் சில கேள்விகள் எழுகின்றன.

அதிரம்பாக்கம் தொல்லியல் சொல்வது, 15,00,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழுக்களாக வாழும் நாகரிகமான காலகட்டத்தில் தமிழன் வாழ்ந்திருக்கிறான். உலகம் முழுவதும் சரியான தட்பவெப்பம் நிலவாத அந்த காலகட்டத்தில் இங்கே குளிர்ச்சியான பசுமையான தட்பவெப்பம் நிலவியதை உணர முடிகிறது. அதற்கான விலங்கியல் படிமங்கள் கிட்டியுள்ளன. இயற்கையுடன் ஒன்றிய வாழ்வு வாழ்ந்திருக்கிறான்.

கிருஷ்ணகிரி மலைப்பகுதியில்  தொல்லியல் சான்றுகளாக கிட்டியவை 50,000 வருடங்களுக்கு முன் அங்கு வாழ்ந்த மக்கள் பெருங்கற்காலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றன. கல்லை பயன்படுத்
தி ஏர்கலப்பை, போர் ஆயுதங்கள், போன்றவையும் இரும்புகாலத்தின் சான்றாக செங்கற்களால் கட்டப்பட்ட இரும்பு உருக்கும் தொழிற்கூடங்களும் கண்டுபிடிக்கப்படுள்ளன. (இங்கேயும் 50,000 ஆண்டுகள் பழமையான் கற்கால சான்றுகளுக்குப் பிறகு 3000 ஆண்டுகள் பழமையான இரும்புகாலத்திற்கான சான்றுகள் கிட்டுகின்றன.
     
Indus-valley civilization

17,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் மண்ணை, பூகம்பம், எரிமலை, கடற்கோள்கள் என்று இயற்கையின் அழிவு சக்திகள் புரட்டி போட்டிருக்கின்றன. இது போன்ற இயற்கை அழிவுகளை விலங்குகள் முன்கூட்டியே கண்டுகொள்ளத்தக்கவை. இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை வாழ்ந்த மனிதனுக்கும் இந்த சக்தி இருந்திருக்கும் அல்லவா? அப்படியெனில் அழிவு வரப்ப்போவதை உணர்ந்து புலம் பெயர்ந்திருக்கலாமே. சரி அப்படி புலம் பெயர்ந்தால் அவன்னுடைய பாதையை எது வரையறுத்து இருக்கும். இயற்கை வரையறுத்த எல்லைகள்தான் அவர்களுடைய பயணப்பாதையாக இருக்கும். அந்த பயணப்பாதை மேற்குத் தொடர்ச்சி மலையின் வழியாக சென்றது எனில், அதன் முடிவு சிந்து சமவெளியை அடைகிறது. சிந்து நதியின் கரையோரத்தில் இருக்கும் சமவெளி இது இன்றைய ஆப்கானிஸ்தானையும் உள்ளடக்கியது.
      

இந்த கூற்றுக்கு ஆதாரமாக சொல்லப்படுபவை, அங்கு கிட்டிய பசுபதி, ஒற்றை கொம்புடைய நீர்யானையின் வடிவங்களும். இதனை யூனிகார்ன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதிரம்பாக்கம் தொல்லியல் பகுதியில் நீர்யானையின் படிமம் கிட்டியுள்ளது.   ஈரமான நிலப்பகுதியில் மட்டுமே நீர் யானை வசிக்கும். காப்புரிமை சம்பந்தபட்டதால் இங்கே அந்த படத்தை பிரசுரிக்க முடியவில்லை. வாலை பார்க்கும்போது அது குதிரை இல்லை என்று தெரியும்.


சில இடங்களின் பெயர்களும் தமிழ் பெயர்களாக காவ்ரி,பெருனை போன்ற வார்த்தைகள் பிராமி எழுத்து வடிவில் கிட்டியுள்ளன. மீண்டும் தெற்குப்பக்கம் குடியேற்றம் கிமு.3000லிருந்து -இரும்புகாலத்தில் இருந்து ஆரம்பித்து இருக்கலாம் என்று கொள்ளப்படுகிறது. தொல்லியல் ஆராய்ச்சி மட்டுமல்லாமல் கடலியல் ஆய்வுகளும் மேற்கொண்டால்தான் இயற்கை அழித்த தமிழ் வரலாறு தெரியவரும்.

அடுத்த பதிவில் மனோசக்திக்கான சான்றுகள் - அழிந்து போன வரலாற்றில் மறைக்கப்பட்ட பக்கங்களை செவி வழி கதைகளாகவும், இலக்கியவழிசெய்திகளாகவும் உறுதிபடுத்தலாமா?.

இவற்றை கண்டிப்பாக படித்துப் பாருங்கள்.
http://news.bbc.co.uk/2/hi/science/nature/353277.stm
http://balubpos.blogspot.com
http://jayabarathan.wordpress.com/2011/07/15/kumari-kandam-3/

R. Mathivanan, then Chief Editor of the Tamil Etymological Dictionary Project of the Government of Tamil Nadu, in 1991 claimed to have deciphered the still undeciphered Indus script as Tamil, following the methodology recommended by his teacher Devaneya Pavanar, presenting the following timeline (cited after Mahadevan 2002):

    ca. 200,000 to 50,000 BC: evolution of "the Tamilian or Homo Dravida",
    ca. 200,000 to 100,000 BC: beginnings of the Tamil language
    50,000 BC: Kumari Kandam civilisation
    20,000 BC: A lost Tamil culture of the Easter Island which had an advanced civilisation
    16,000 BC: Lemuria submerged
    6087 BC: Second Tamil Sangam established by a Pandya king
    3031 BC: A Chera prince in his wanderings in the Solomon Island saw wild sugarcane and started cultivation in Kumari Kandam.
    1780 BC: The Third Tamil Sangam established by a Pandya king
    7th century BC: Tolkappiyam (the earliest known extant Tamil grammar) 
22:02 | Author: சாகம்பரி
இந்த பதிவு பழந்தமிழர் அறிந்திருந்த சிறப்புமிக்க ஐந்தாம் பரிமாணம் என்னும் மனோசக்தி பற்றியது.

பழந்தமிழரின் வரலாறு தேடி காலப்பயணம்.
முதலில் சில விசயங்களை தெளிவுபடுத்திக் கொள்வோம். தமிழன் என்பது தமிழ்மொழி பேசும் இனம். இதனை குலத்தின் பெயரோடோ, மதத்தின் பெயரோடோ தொடர்புபடுத்தி குழப்பிக் கொள்ள வேண்டாம். அதேபோல தமிழ் மொழி பல மாற்றங்களுக்கு உள்ளானதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இலக்கியத்திலிருந்து - தொல்காப்பியம் -கிமு700-கி.மு300
பழந்தமிழர் வரலாறு என்ற தேடலுக்கு நிறைய விசயங்கள் கிட்டுவது இலக்கியங்களில் இருந்துதான்.  அவை தமிழரின்ன் தோற்றம் பற்றி சுட்டுவது கிமு. 700லிருந்துதான். தலைச்சங்கம் வைத்து பதியப்பட்ட நூல்களுள் முதன்மையானது 'அகத்தியம்' என்ற இலக்கண நூல். அதனுடைய காலம் 'தொல்காப்பியத்திற்கும்' முன் என்று அனுமானிக்க முடிகிறது. ஏனெனில் தலைச்சங்கத்தில் இடம்பெற்றிருந்த புலவர்களுள் அகத்தியரும் ஒருவர். அவருடைய சீடர்களில் ஒருவரான தொல்காப்பியர் விளங்கினார் அன்று கூறப்படுகிறது. இதனைக் கொண்டு தொல்காப்பியத்தின் காலம் கிமு700-கிமு300 வரை இருக்கலாம் என்று பதியப்படுகிறது. தொல்காப்பியம் என்பது இலக்கண நூல். தமிழ் மொழியின்  இலக்கணம் பற்றிய வரையறகள் இதில் இருக்கின்றன.

நம்முடைய தேடல் தமிழரின் தோற்றம் பற்றியது. முதல் இலக்கிய நூல் சொல்வதோ பண்பட்ட முதிர்ந்த மொழியின் லட்சணங்களை. இன்னும் தேடலை பின் நோக்கி நகர்த்த முடிவு செய்தேன். தொல்பொருள் துறையின் பதிவுகளில் கிட்டியது ஆதிச்ச நல்லூர். திருச்செந்தூர் செல்லும் வழியில் தாமிரபரணி படுகையில் உள்ளது.

ஆதிச்ச நல்லூர் - கிமு.1000
அதற்கும் முன்பு வரலாற்று ஆதாரமாக ஆதிச்ச நல்லூரில் கிடைத்த புதைபொருட்களை சொல்லலாம். முதுமக்கள் தாழிகளில் மனித எலும்புக்கூடு மற்றும் மண்பாண்டங்கள், சில உலோக பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை கிமு1800ஐ சேர்ந்தது என்கிறார்கள் இவை கி.மு 10ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என்று உறுதிபடுத்தபட்டன. இதற்கான சுட்டி: http://asi.nic.in/asi_exec_adichchanallur.asp 

இந்த இடத்தில் மேலும் ஒரு குறிப்பு கிட்டுகிறது. வேதிய முறைப்படி செய்பவர் அல்லாதவர் என்று இரு பிரிவினர் உள்ளதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.  வேதகாலம் என்பது கிமு.2000-500 வரை.

செம்பியன் கண்டியூர் -கிமு.2000-கிமு.1000
மயிலாடுதுறையில் செம்பியன் கண்டியூர் என்ற இடத்தில் 2006ல் நடைபெற்ற ஆய்வுகள் அங்கு கிட்டிய பொருட்கள் கற்கோடாரிகள் கற்காலத்தின் பிற்பகுதியை சேர்ந்தவை என்று உறுதிபடுத்தப்படன. தொன்மை கிமு 2000-1000.  
சிந்து சமவெளி நாகரிகத்தின் (கிமு.3300-1300)தொடர்புடைய எழுத்துருக்கள் கிடைத்தன.

மரபியல் ஆதாரம் - 50,000-70,000 வருடங்கள்
தற்கால மனிதன் ஹோமோ சாபியன் இனத்தை சேர்ந்தவன் என்றும் அதற்கு முன்பாக நியாண்டர்தால் இன மனிதன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. நமக்கு மூதாதையர் ஹோமோ சாப்பியனிலிருந்து கணக்கிடப்படுகின்றனர்.  இந்த மனிதன் ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியாவிற்குள் வந்ததாக கூறப்படுகிறது. காலம் 50,000-70,000 முன்பு. இந்த மரபணு மாதிரி மதுரை பக்கத்திலிருக்கும் கிராமத்திலிருக்கும் ஒரு மனிதரின் மரபணு உடன் பொருந்தியது. எனவே ஆசியாவில் மனிதர்கள் குடியேற்றம் 70,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கூறப்பட்டது. ஆஸ்திரேலியாவில் 40,000 வருடங்களுக்கு முன் நிகழந்ததாகவும் பதிவு செய்யப்பட்டது.

அதிரம்பாக்கம் -15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்.
திருவள்ளுவர் மாவட்டம் பூண்டி நீர்தேக்கம் அருகே அதிரம்பாக்கம் தொல்லியல் ஆய்வில் கிட்டியது ஆச்சரியப்படுத்தியது. 15,00,000 ஆண்டுகளுக்கு முன் பழைய கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கிட்டின. ஆப்பிரிக்காவில் கிட்டிய மாதிரியுடன் ஒத்திருந்தன. இதற்கு முன் தெற்காசியாவில் பழைய கற்காலம் ஆரம்பித்ததே 70,000 ஆண்டுகளுக்கு முன்புதான் என்று ஒரு கருத்து இருந்ததை பொய்யாக்கியது இந்த ஆய்வு.
இதற்கான சுட்டி
http://asi.nic.in/asi_exca_imp_tamilnadu.asp
http://www.antiquity.ac.uk/projgall/pappu297/
http://www.thehindu.com/sci-tech/science/article1568651.ece

அங்கே அருகிலேயே அல்லிகுழி மலைத்தொடரில் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் வாழ்ந்த குகைகள் இருக்கின்றன. அவை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இத்தனை தகவல்களும் ஒரு விசயத்தை உறுதிபடுத்துகின்றன. முதல் மனிதனின் தோற்றம் தமிழகத்தில் இருந்தது என்பதுதா
ன் அது. 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே குழுக்களாக மக்கள் வாழ்ந்துள்ள ஒரு நாகரிகமான சமுதாயம் இங்கிருந்தது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.  ஆனால் கற்காலத்திற்கான ஆதாரங்களுக்குப்பின் கிட்டியவை  இரும்பு காலத்திற்கு சென்றுவிடுகின்றன.

கற்காலம் ,செப்புகாலம்,வெண்கல காலம், இரும்பு காலம் என்று பிரிக்கப்பட்ட கால கட்டங்களில் பயணித்த மனித நாகரிகத்தில், தமிழ் பழங்குடியின் வாழ்க்கை முறைகளுக்கான ஆதாரம் கற்காலத்திலிருந்து சட்டென்று இரும்பு காலத்திற்கு வந்துவிட்டதை குறிப்பிடுகின்றன. இடைப்பட்ட இரண்டு உலோக காலங்களுக்கான தொல்லியல் சான்றுகள் கிட்டவில்லை. இவை சிந்து-சமவெளி நாகரிகத்தில் கிட்டியுள்ளன. இடையில் என்ன நடந்தது...?


18:12 | Author: சாகம்பரி
சென்ற பகுதியின் தொடர்ச்சி.....
இவற்றை உணர்ந்திருக்கிறீர்களா?
- சில நிகழ்வுகள் நடக்கும்போது அது ஏற்கனவே நடந்ததுபோல உணர்வோம். ஆனால், நமக்குத் தெரிந்தவரை அது முற்றிலும் புதிதான சூழ்நிலையாக இருக்கும்.
- நொடிகளில் முடிவெடுக்க வேண்டிய சில நிகழ்வுகளை சந்திக்கும்போது யாரோ உடனிருந்து வழிகாட்டுவதைப்போல உணர்ந்து முடிவெடுப்போம். ஏன் அந்த முடிவை எடுத்தோம் என்பதற்கு விளக்கம் கூட நம்மால் சொல்ல இயலாது.
- அப்போதே எனக்குத் தோன்றியது என்று நிறைய முறை சொல்லியிருப்போம்.
- பெரும்பாலும் இதுபோன்ற உணர்வுகள் அந்த சூழ்நிலைக்குள் நாம் செல்லும்போதுதான் தோன்றும். முன்கூட்டியே எதுவும் தோன்றாது.
- ஒரு சிக்கலில் இருக்கும்போது அதற்கான சரியான தீர்வு நாம் உறக்கத்திலிருக்கும்போது கிட்டும்.

இவற்றுக்கெல்லாம் விளக்கம் இருக்கிறதா? 
 
இதற்கு நமக்கு ஏதோ ஒரு இறை சக்தி உதவுவதாக எண்ணுவோம். நல்லது நடந்தால் சரி... வேறு மாதிரி நடந்தால்...

அவர்கள் இருவரும் நண்பர்கள். கல்லூரி மாணவர்கள். புது இரு சக்கர வாகனம் வாங்கியாகிவிட்டது. கல்லூரியில் நடந்த கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி. அதீத உற்சாகம் கரைபுரண்டு ஓட, நான்கு வழிச்சாலையில் மிகுந்த வேகத்துடன் வண்டியில் சென்றனர். வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல்  ஒரு கனரக வாகனத்தின் பின் சக்கரத்தில் மோதிவிட்டான். வழக்கமாக இது போன்ற விபத்துக்களில் பின் இருக்கையில் அமர்ந்தவன்தான் மாட்டுவான். வண்டியை ஓட்டுபவன் பெரும்பாலும் தப்பிவிடுவான். ஆனால் இந்த விபத்தில் ஓட்டியவன் உயிரை விட்டான். பின் இருக்கையில் அமர்ந்தவன் மருத்துவ உதவியினால் பிழைத்துவிட்டான்.. தப்பித்தவனிடம் விசாரித்தபோது,  அவன் சொன்னது என்னவெனில், மோதப்போகும் கடைசி  நொடியில் கூட விபத்து தவிர்க்கப்படும் என்று நினைக்க, ஓட்டியவனோ  மோதியே விட்டான். மோதும் முன் கடைசியாக சொன்ன வார்த்தை "சாரிடா...". மன்னிப்பு கேட்க தோன்றிய மனதில் மாற்றுவழி யோசிக்கத் தோன்றவில்லையே. இதுதான் 'விதி' என்றனர். போதாத 'காலம்' என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

ஏதோ ஒன்று அவனை அந்த நிகழ்விற்குள் கொண்டு சென்றதல்லவா... அதுதான் அவனுக்கு வழிகாட்டியது. அதைத்தான் வானுரைபதிவு (ஆகாஷிக் ரெக்கார்டுகள்) என்கிறார்கள். அந்த நேரம், அந்த இடம், அந்த வண்டி, ஓட்டியவன் அனைத்தும் சேர்ந்த ஒரு நிகழ்விற்கான ஒரு காட்சிக்கான அமைப்பு அந்த இடத்தில் அலைகளாக இருந்திருக்கிறது. அந்த சூழ்நிலைக்குள் செல்லவுமே நம்மை பாதிக்க, அதனை செயல்படுத்தும் பாத்திரங்களாக மாறிவிடுகிறோம். இதைத்தான் முதல் பகுதியிலேயே நான்காவது பரிமாணத்தின் திட்டத்தில்தான் உலகின் ஒவ்வொரு அசைவும் நடக்கின்றன என்றேன்.

இன்னும் ஒரு விளக்கம் தருகிறேன். சுவாமி விவேகானந்தர் லாஸ் ஏஞ்சல்ஸில் நடத்திய ஒரு சொற்பொழிவில் குறிப்பிட்டது. அதற்கான சுட்டி இங்கே உள்ளது. விவேகானந்தரின் உரை

மிகவும் ஆச்சரியமான ஒரு நிகழ்ச்சியை சொல்கிறார். விவேகானந்தர் சந்தித்த அந்த மனிதர் ஒரு சாது. அவர் மூன்று தாள்களில் எதையோ எழுதி மடித்து வைத்துக் கொண்டார். விவேகானந்தரும் அவருடைய நண்பர்கள் இருவரிடமும் அவற்றை நீட்டி 'பிரித்துப் படிக்க வேண்டாம். அப்படியே சட்டை பையில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார். சற்று பொறுத்து "நீங்கள் ஏதாவது ஒரு வாக்கியம் எந்த மொழியில் வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள்." என்றாராம். தனியே சென்று விவாதி
த்துவிட்டு, விவேகானந்தர் சமஸ்கிருதத்திலும், அவர் நண்பர்கள் அராபியிலும், ஜெர்மானிய மொழியிலும் நினைத்துக் கொண்டனர். இவை அந்த சாதுவிற்கு தெரியாத மொழிகள். உற்சாகமாக சாதுவிடம் திரும்பி வர 'உங்களிடம் நான் ஏற்கனவே தந்த தாள்களை எடுத்துப் பாருங்கள்' என்றார். அந்தத்தாள்களில் இவர்கள் மூவரும் நினைத்த வாக்கியங்கள் அந்தந்த மொழியிலேயே இருந்தன. கூடவே யார் எந்த வாக்கியத்தை நினைப்பார்கள் என்றும் மிக்ச்சரியாகவே எழுதியிருந்தார். இதற்கு அவர் தந்த விளக்கம் வானுரை பதிவுகள்தான். இதைத்தான் இவன் இப்போது செய்வான் என்பதை வானுரை பதிவுகளின் மூலம் அவரால் அறிய முடிந்தது.

சாதாரண நிலையிலிருந்து பார்க்கும்போது திட்டத்தை செயல்படுத்தும் நிலையில் மட்டுமே நாம் இருக்கிறோம் என்பது புரிகிறதல்லாவா? மேலும் அண்டவெளி சுருங்கும் சமயத்தில் பொருட்கள் வாயு மூலக்கூறுகளாக மாறிய பின்பும் அழியாத அலைவடிவாக இந்த  வானுரை பதிவுகள் பிரபஞ்சத்தில் உலவிக் கொண்டேதான் இருக்கும். புதிதாக பிறக்கும் அண்டவெளிக்கு வழிகாட்டியாகும் வாய்ப்பிற்காக காத்திருக்கும் என்பதும் ஒப்புக் கொள்ள முடிகிறதுதானே. 

எத்தனை ராமரோ? எத்தனை கணையாழியோ? என்று அகத்தியர் அனுமனிடம் சொன்னதன் விளக்கமும் இதுதான். எல்லாமே மீண்டும் மீண்டும் நடக்கின்றன. ஓரளவிற்கு விளக்கிவிட்ட நம்பிக்கையில் , இப்போது ஏற்கனவே பதிவிட்ட இந்த வாக்கியங்களை அழுத்தமாக மீண்டும் பதிகிறேன்.

 "ஒவ்வொரு நிகழ்வும் அண்டவெளி நேரத்தால் கட்டப்பட்டுள்ளதால் இதுதான் சாத்தியம். எளிதாக சொல்ல வேண்டுமெனில், இதே போல இந்த விசயத்தை நான் நிறைய முறை பதிவிட்டுக் கொண்டே இருக்கிறேன். நீங்களும் நிறைய முறை படித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனில் அனைத்து நிகழ்வும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவைதான்."

இதுவரை நான்காவது பரிமாணமாகிய 'காலம்' என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள். இப்போது ஒரு கேள்வி எழும். இவ்வாறு காலத்தால் கட்டப்பட்ட நிகழ்வுகளை  முன்கூட்டியே அறிய முடியுமா?  அறிந்தால் சில நிகழ்வுகளை தடுக்க முடியுமே. இதற்கு விடைதான் ஐந்தாவது பரிமாணம் என அழைக்கப்படும் 'மனோசக்தி'.





இந்த பதிவின் ஆரம்பத்தில் நான் கேட்டிருந்த கேள்விகளுக்கும் இதுதான் விடை. நம்மாலும் அந்த வானுரை பதிவுகளை வாசிக்க இயலும்.

இது பற்றி இன்றைய அறிவியல் என்ன சொல்கிறது. ஒரு ஆராய்ச்சியை பற்றி குறிப்பிடுகிறேன். உலகப்புகழ் பெற்ற 'வாவ்' சிக்னல் பற்றிய ஆராய்ச்சிதான் அது.

ஜெர்ரி என்ற விஞ்ஞானி 1977ல் அவருடைய தொலை நோக்கி பதிந்திருந்த விண்வெளி பதிவுகளை ஆராய்ந்த போது ஒரு ஆச்சரியமான அலைவரிசை கிட்டியது. அது நம்முடைய தனுர் மண்டலம் என்றழைக்கப்படும் நட்சத்திர மண்டலத்தில் இருந்து - 200 ஒளியாண்டுகள் - தொலைவில் இருந்து வந்திருந்தது. அதனை மொழிபெயர்த்தபோது கிட்டிய விடை 'வாவ் (WOW)'. பூமியை பார்த்து வெளியுலகத்தில் இருந்து வர்ணிக்கப்பட்ட இந்த சிக்னலை யார் அனுப்பியிருக்க முடியும்.
இதற்கான சுட்டி: http://en.wikipedia.org/wiki/Wow!_signal
Thanks to wiki resource


நம்முடைய விஞ்ஞானிகளுக்கு சிக்கல் என்னவென்றால் அதற்கு பதில் அனுப்பினால், அது அனுப்பப்பட்ட இடத்தை அடைய  200 வருடங்கள் ஆகும். அதற்குள் அனுப்பியவர் உயிருடன் இருப்பா
ர் என்று சொல்ல முடியாது. அது பிரபஞ்சத்தில் குறிப்பிட்ட தொலைவிலிருந்து வந்திருந்தால் அந்த அலை வீச்சு அருகிலிருக்கும் அலைவாங்கியிலும் பதிவாகியிருக்கும். ஆனால் இந்த சிக்னல் மீண்டும் அடுத்த ஒலிவாங்கியில் பதியப்படவேயில்லை. அப்படியென்றால் யாரோ அருகே வந்து சொல்லிவிட்டு சென்றதுபோல இருக்கிறது. காலம் சம்பந்தப்பட்ட கணக்கீடுகளால் இதனை விளக்கமுடியவில்லை. இந்த விசயத்தில் நம்முடைய நான்காம் பரிமாணம் பயன்படாமல் போய்விட்டது. இதனை விளக்கும் பொருட்டு இயற்பியல் புது வார்த்தையை கொண்டு வந்தது. Worm hole(புழுத்துளை என்றால் நல்ல வார்த்தையாகப்படவில்லை). காலத்திற்கு கட்டுப்படாத ஒரு குறுக்கு வழிப்பயணம் இதில் சாத்தியம். 
இதற்கான சுட்டி:http://en.wikipedia.org/wiki/Wormhole


சரி சரி, எளிதாகவே சொல்லகிறேன். வாயு வேகம் மனோ வேகம் என்று படித்திருப்பீர்களே. இதில் மனோவேகத்தைதான் இயற்பியல் தத்தெடுக்கிறது. ஐன்ஸ்டைனின் சில கோட்பாடுகளை கொண்டு இதனை விளக்கவும் முற்படுகின்றனர். இன்னும் நிரூபிக்கப்படவில்லை. சரி, நம் பக்கம் ஏதாவது நடந்திருக்கிறதா என்று பார்ப்போமா?

பழந்தமிழரின் வாழ்க்கையில் நான்காவது பரிமாணம் பற்றிய பதிவுகள் இல்லை. ஆனால் ஐந்தாவது பரிமாணம் சம்பந்தப்பட்ட கலைகளில் நம் முன்னோர்கள்  மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதை புரிந்து கொள்ள முடியும். பழந்தமிழர் என்றால் 50,000 வருடங்களுக்கு முந்தைய குமரி மாந்தன் எனப்படும் மூத்த தமிழ்குடியின் வரலாறு பற்றி அடுத்த பதிவில் சற்று விரிவாக பார்ப்போம். 



முதல்பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/1.html
இரண்டாம் பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/2.html
மூன்றாம் பாகம் : http://annaiboomi.blogspot.com/2011/11/3.html
நான்காம் பாகம். http://annaiboomi.blogspot.com/2011/11/4.html

16:46 | Author: சாகம்பரி

அலைகளின் அழியாத்தன்மையும் அவற்றின் பாதிப்பும்.

இப்போது மேலும் ஒரு விசயத்தை நினைவுபடுத்திக் கொள்வோம். சிறிய வயதில் இயற்பியலில் படித்ததுதான். நாம் இந்த உலகத்துடன் தொடர்பு கொள்ளுவது பெரும்பாலும் அலை வடிவங்களாகவே நடக்கின்றன. நாம் ஐம்புலன்களாலும் அறிந்து கொள்ளும் செய்திகள் அலைவடிவங்களாக உள்ளன. உதாரணமாக ஒலி,ஒளி போன்றவை அலைகளாகவே நம் புலன்களை அடைகின்றன. சரிதானே, ஒருவர் நம்மிடம் பேசும்போது அவருடைய பேச்சானது ஒலி அலையாக நம்முடைய செவியை அடைகிறது. அதுபோலவே நாம் காணும் காட்சிகளும் ஒளி அலையாகவே நம்மை அடைகிறது. என்ன ஒன்று, ஒலியைவிட ஒளி விரைவாக செல்லும். அதனால்தான் மின்னலை முதலிலும் இடியை சற்று பொறுத்தும் நம்மால் உணரமுடிகிறது.

நம்முடைய எண்ணங்கள்கூட அலைகளாக பரவுவதாக நிருபிக்கப்பட்டுள்ளது. அது மற்றவர்களை பாதிப்பதையும் நிருபித்துள்ளார்கள். இது பற்றி விரிவாக பிறகு பார்ப்போம். இப்போது இந்த படத்தை பாருங்கள்.
      
  
இந்த படத்தில் மூன்று பாகமாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் நம்முடைய புலனால் உணரக்கூடியது. இரண்டாவது தெளிவாக உணரமுடியாது. மூன்றாவது நம்மால் உணரவே முடியாத அளவிற்கு இருக்கிறது. சக்தி குறைந்து கொண்டே போகிறதே தவிர முற்றிலுமாக இல்லையென்று சொல்லமுடியாது(not nullified). சரியான சாதனங்களை பயன்படுத்து பெரிதுபடுத்தி மீண்டும் உணர முடியும். 

உதாரணமாக, நம் அருகில் இருப்பவர் பேசுவது தெளிவாக கேட்கும். அவர் சற்று தொலைவு சென்றவுடன் கேட்பது படிப்படியாக குறைகிறது. இன்னும் அவர் நகரும் போது சுத்தமாக எதுவும் கேட்காது. ஏனெனில் அலையின் அளவு குறைகிறது. சரியான சாதனங்கள் உதவியுடன் கேட்க முடியும்.  இன்னும் விலகிச் செல்லும்போது நம்முடைய சாதனங்கள் உதவி செய்யாது. அதனால் அதனை உணர முடியாமல் போகிறது. ஆனால், அவை வலு குறைந்த அலைகளாக பிரபஞ்சத்தில் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. 

ஒரு தகவல் சொல்கிறேன். பென்சியாஸ்  மற்றும் வில்சன் (Penzias and Wilson) என்ற இயற்பியல் விஞ்ஞானிகள் 1978ல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றனர்.  பெல் ஆய்வக விஞ்ஞானிகளான அவர்கள் CMB எனப்படும் பிரபஞ்சம் சம்பந்தப்பட்ட 'அண்டவியல் நுண்ணலை பின்புல கதிர்வீச்சு' ஆராய்ச்சிக்காக அந்த பரிசை வென்றனர். 1964ல் அண்டவெளியில் பரவியிருக்கும் நுண்ணலைகளை பதிவு செய்து கொன்டிருந்த போது, ஒரு புதிய பதிவொன்று கிட்டியது. மிக அதிக வெப்பவீச்சை பதிவு செய்திருந்த அந்த காஸ்மிக் கதிர்களின் மூலதாரம் நம்முடைய பால்வெளிக்கு வெளியில் இருந்து வந்தது என்று தெரிந்தது. சிலபல அறிவியல் தேடல்களுக்குப் பிறகு அந்த அலைவீச்சானது நெபுலா வெடித்தபோது வெளிப்பட்ட கதிர்வீச்சு (வெடிப்பு தொடங்கிய 3,00,000 வருடங்களுக்குள்) என்று உறுதிபடுத்தினர். அதுவரை (1970வரை) பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி எழுந்த வேறுபட்ட கருத்துக்களை பொய்யாக்கி வெடிப்பின் மூலமே உருவானது என்ற கருத்தை உறுதிபடுத்திய இந்த ஆய்விற்கு நோபல் பரிசு கிட்டியது. 
இதுதான் அவர்கள் உபயோகித்த தொலைநோக்கி.
      

குறிப்பிட்ட அந்த கதிர்வீச்சின் ஒலிவடிவ பதிவு இணையத்தில் கிடைக்கிறது. முடிந்தால் கேட்டுபாருங்கள். மிக அதிகபட்ச அதிர்வெண்களில் பதிவாகியுள்ள அந்த ஒலிப்பதிவை கேட்டு காது வலியெடுத்தால் நான் பொறுப்பல்ல.(எனக்கு இரண்டு நாட்கள் வலியிருந்தது)

இதன் மூலம் நான் சொல்ல வருவது என்னவென்றால் உருவாக்கப்பட்ட  அலைவீச்சு அல்லது கதிர்வீச்சு அழிவடைவதில்லை. அவை பிரபஞ்சத்திலேயே சுற்றி வருகின்றன. இதே போல்தான் ஒரு நிகழ்வு நடக்கும்போது உருவாகும் ஒளி, ஒலி செய்திகள் அலைகளாக நம்மை சுற்றி பரவிக் கிடக்கின்றன. இவற்றை 'ஆகாஷிக் ரெக்கார்டுகள்'  என மெட்டாபிஸிக்ஸ் (புலன் தாண்டிய நுண்ணியல்) ஆய்வுகள் ஒப்புக்கொள்கின்றன. நம் எண்ணங்கள்கூட கதிர்வீச்சுகளாக பரவுவதை பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்த வானுரை பதிவுகள் நம்மை பாதிக்குமா? கண்டிப்பாக பாதிக்கும். அவை நம் சம்பந்தப்பட்டவையாக இருந்தால். உதாரணமாக, பலவிதமான மின்காந்த அலைகளாக வானொலி நிகழ்ச்சிகள் பரவிக்கிடக்கின்றன. சரியான அலைவரிசைக்கு பொருந்தி (tuned)வருகின்ற நிகழ்ச்சியை மட்டும் நம்மால் கேட்கமுடிகிறதல்லவா? அதேபோல, மிகவும் மெல்லிய வீச்சுகளாக தேய்வுற்று கிடக்கும் நமக்குத் தொடர்பு உடைய அலைகளுக்கு சரியான உள்வாங்கியாக(reciever) நாம் விளங்கமுடியும். அதற்கான ஆய்வுச்செய்திகளுக்கு போவதற்கு முன் சில விசயங்களை நாமே உணர முயற்சிக்கலாமா?

இவற்றை உணர்ந்திருக்கிறீர்களா? 
 
- சில நிகழ்வுகள் நடக்கும்போது அது ஏற்கனவே நடந்ததுபோல உணர்வோம். ஆனால், நமக்குத் தெரிந்தவரை அது முற்றிலும் புதிதான சூழ்நிலையாக இருக்கும்.
 
- நொடிகளில் முடிவெடுக்க வேண்டிய சில நிகழ்வுகளை சந்திக்கும்போது யாரோ உடனிருந்து வழிகாட்டுவதைப்போல உணர்ந்து முடிவெடுப்போம். ஏன் அந்த முடிவை எடுத்தோம் என்பதற்கு விளக்கம் கூட நம்மால் சொல்ல இயலாது.
 
- அப்போதே எனக்குத் தோன்றியது என்று நிறைய முறை சொல்லியிருப்போம்.
 
- பெரும்பாலும் இதுபோன்ற உணர்வுகள் அந்த சூழ்நிலைக்குள் நாம் செல்லும்போதுதான் தோன்றும். முன்கூட்டியே எதுவும் தோன்றாது.
 
- ஒரு சிக்கலில் இருக்கும்போது அதற்கான சரியான தீர்வு நாம் உறக்கத்திலிருக்கும்போது கிட்டும்.

இவற்றுக்கெல்லாம் விளக்கம் இருக்கிறதா?
18:34 | Author: சாகம்பரி
இந்த கட்டுரையின் முதல் இரண்டு தொடர்புகள்
முதல்பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/2.html
இரண்டாம் பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/1.html

 


முதலிரண்டு பகுதிகளுக்கே சில கேள்விகள் வந்துவிட்டன. அவற்றை விளக்காமல் அடுத்த பகுதிக்கு செல்ல முடியாது போலிருக்கிறது.


1. ஐன்ஸ்டை
ன் சமன்பாடு, '=' குறி, அணுசக்தி ஆகியவற்றை பற்றி எளிய விளக்கம் .
'=' குறிக்கு அப்படி என்ன முக்கியத்துவம் என்று தோன்றுகிறதல்லவா? ஒரு செய்தியை சமன்பாடாக சொல்லிப்பார்ப்போம்.

தன்னம்பிக்கை+உழைப்பு --> உயர்வு
    இதன் விளக்கம் தன்னம்பிக்கையும் உழைப்பும் இருந்தால் வாழ்க்கையில் உயரமுடியும்.

தன்னம்பிக்கை+உழைப்பு
= உயர்வு
   இதன் விளக்கம் எந்த அளவிற்கு தன்னம்பிக்கையும் உழைப்பும் இருக்கிறதோ அந்த அளவிற்கு உயர்வு கிட்டும் என்பதும்,

   உயர்வு=தன்னம்பிக்கை+உழைப்பு என்றும் கொள்ளலாம்.
   இதன் விளக்கம் உயர்வு இல்லையெனில் தன்னம்பிக்கையோ அல்லது உழைப்போ இல்லையென்றும் கொள்ளலாம். இரண்டு பக்கமும் சமமாகும் இந்த
= குறிதான் ஐன்ஸ்டைனின் சமன்பாட்டை முக்கியத்துவம் பெற்றதாக்கியது.

ஐன்ஸ்டைனின் சமன்பாடு:
 
    
   E - எனப்படுவது ஆற்றல், சக்தி
   M  - ஒரு பொருளின் எடை. இத்துடன் C (ஒளியின் வேகம்)ஐ சேர்க்கும் போது ஆற்றலின் அளவு தெரிய வருகிறது.

இரண்டு விசயம் புரிந்து கொள்வோம்.
1. ஒரு பொருள் ஆற்றலாகவும் ,  ஆற்றல் பொருளாகவும் மாறும்

2. ஒரு பொருளை ஆற்றலாக மாற்றும்போது கிடைக்கவேண்டிய முழு ஆற்றலின் அளவையும் கணக்கிட முடியும். 

  எளிமையாக சொல்ல வேண்டுமெனில் , ஒரு மரத்துண்டை எரிக்கும்போது கிட்டும் சக்தி இந்த சமன்பாட்டை ஒத்துப்போகாது ஏனென்றால், அவை முழுமையாக எரிக்கப்படாமல் கரியாகவும், சாம்பலாகவும் மிச்சம் இருக்கும்.  இது மிகச் சாதாரண வார்த்தைகளில் சொல்லப்பட்டது. இதே கணக்கீட்டை வைத்துதான் ஒரு பொருளின் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தும் அணுவை பிளக்கும் யுக்திகள் புரிந்து கொள்ளப்பட்டன. அணுவை பிளக்கும் முன் செறிவூட்டும் முறைகள் புகுத்தப்பட்டன. செறிவூட்டுவதால் ஒரு பொருளின் எடையை அதிகரிக்க முடியும். எனவே ஆற்றலையும் அதிகரிக்க முடியும்.
மிகவும் செறிவூட்டப்பட்ட மூலக்கூறுகள் விண்மீன்களில் இருக்கின்றன. எனவேதான் அவை ஓளியையும் வெப்பத்தையும் அதிகமாக வெளியிடுகின்றன. நமக்கு மிக அருகில் இருக்கும் விண்மீன் சூரியன் ஆகும்.

போகருடைய குறிப்புகளில் கனநீர் தயாரித்ததாக உள்ளன. சாதாரணமாக 100மிலி நீர் இருக்கும் எடையைவிட கன நீர் பல ஆயிரம் மடங்கு எடை அதிகம் உள்ளதாகவும் யாராலும் தூக்க முடியாத அளவிற்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது அணு கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் முறைகளை தெரிந்து வைத்திருந்தார்கள் (மூலிகையை பயன்படுத்திதான்) அதனால்தான் தாமிரத்திலிருந்து தங்கம் உருவாகும் ரசவாத ரகசியங்கள் தெரிந்திருந்தனர்.

2. அண்டவெளி விரிவடைதல் சுருங்குதல் பற்றிய விளக்கம்

அண்டவெளி எனப்படும் universeன் மையத்தில் மிகுந்த அடர்த்தியுடன் கூடிய வாயு மூலக்கூறுகள் (ஹீலியம் போன்றவை) எரிந்து கொண்டே இருக்கின்றன. இதனால் அதனை சுற்றியுள்ள பொருட்கள் உந்தி வெளித் தள்ளப்பட்டுகின்றன. உ-ம், பறக்கும் பலூன்களை வெப்பத்தை பயன்படுத்தி விரிவடைய வைப்பதுபோல்.

அண்டவெளி விரிவடையும்போது மையப்பகுதியை விட்டு பயணிக்கும் வாயு மூலக்கூறுகள் குளிர்ந்து விண்மீன்கள், உருவானது. அவை  பருப்பொருளானது
மாறியது போக எஞ்சிய ஆற்றல் மற்ற பொருட்களையும் தன்னகத்தே இழுக்க முயற்சிக்க, அண்டங்கள் (Galaxy), கோள்கள்(planets) உருவாகின.
   
இதேபோல தலைகீழாக நடக்கும்போது விண்மீன்கள், அண்டங்கள், கோள்கள் ஆகியன மீண்டும் வாயு மூலக்கூறுகளாக மாற வாய்ப்பு உள்ளதல்லவா? இதனைத்தான் அண்டவெளி சுருங்குதல் என்கிறார்கள். மையத்திலிருக்கும் எரிதல் நின்றவுடன் ஏற்படும் வெற்றிடம்(black hole) அனைத்தையும் மீண்டும் தன்னகத்தே இழுத்துக் கொள்ளும்  நிலை வரும்போது. வெறும் வாயு மூலக்கூறுகளால் நிரப்பபட்ட ஆற்றல் மிக்க நெபுலா உருவாகும். 

உ-ம், ஓரிடத்தில் வளி மண்டல அழுத்தம் குறையும்போது அதன் அருகிலுள்ள மேகங்களை இழுத்து சேர்த்துக் கொண்டு புயல் உருவாகுவது போல.

3.  காலமாகிய நான்காவது பரிமாணம் பற்றிய விளக்கம்

   "ஒவ்வொரு நிகழ்வும் அண்டவெளி நேரத்தால் கட்டப்பட்டுள்ளதால் இதுதான் சாத்தியம். எளிதாக சொல்ல வேண்டுமெனில், இதே போல இந்த விசயத்தை நான் நிறைய முறை பதிவிட்டுக் கொண்டே இருக்கிறேன். நீங்களும் நிறைய முறை படித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனில் அனைத்து நிகழ்வும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவைதான்."


ஒவ்வொரு பொருளுக்கும் காலசுழற்சி என்பது உண்டு. அண்டவெளிக்கு இருப்பது போலவே தோற்றமும் மறைவும் மீண்டும் தோன்றுதலும். குறிப்பிட்ட நிகழ்வு எனப்படுவது அந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட பொருட்களுடைய காலமும் சேர்ந்ததுதான். 

ஒரு வேளை மதுரை வடக்கு வெளி வீதியில்...

    -  கிமு 200ல்
நான் கண்ணைமூடிக் கொண்டு சென்றிருந்தால் மிருகத்தின் வயிற்றுக்குள் செல்லும் வாய்ப்பு கிட்டியிருக்கும். 
    -  நான் மூன்றாம் நூற்றாண்டில் கண்ணை மூடிக் கொண்டு சென்றிருந்தால் குறைந்த பட்சம் அரசனின் குதிரையின் உதை மட்டும் கிட்டியிருக்கும்.
    -  ஆனால் இப்போது சென்றால் எனக்கு மிக மோசமான விபத்து நேரிடலாம்.  ஏனெனில் அப்போது பேருந்து என்ற பொருளின் காலம் இல்லை.  வடக்கு வெளி வீதி, நான், பேருந்து இத்தனையும் சேர ஒரு காலம் வருகிறது அல்லவா அப்போது 'அந்த நிகழ்வு' ஏற்பட வாய்ப்பு வருகிறது. 

   விபத்து ஏற்படாமலும் போகலாமே என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். நல்லது இந்த கேள்வியை குறித்து வையுங்கள். பிறகு விளக்குகிறேன்.


15:56 | Author: சாகம்பரி
வெடித்து சிதறிக் கொண்டிருக்கும் நெபுலாவிலிருந்து உருவாகும் அண்டவெளி.
இப்போது நாம் கவனித்துக் கொண்டிருப்பது நான்காவது பரிமாணம் காலம் பற்றியே.

காலம் என்ற பரிமாணத்தில் இன்று காலை பத்துமணி, நான், மதுரை, என் வீடு ஆகிய அனைத்தும் ஒன்றாக கட்டுப்படுகின்றன இப்போது இன்னும் கேள்விகளை எழுப்பலாம். கால அளவை பொறுத்தவரை எல்லாவற்றிற்கும் சுழற்சி என்றொரு விசயம் உள்ளது. காலை பத்து மணி மீண்டும் வரும். ஆனால் தேதி மாறும். தேதி என்று நாம் குறிப்பிடுவது ஒரு ஒப்புமை நேரம் மட்டுமே. ஆங்கில வழிமுறையில் கிறிஸ்து பிறந்ததிலிருந்து முதல் வருடம் கணக்கிடப்படுகிறது. ஆனால் நம்முடைய தேடுதலுக்கு இந்த ஒப்புமை நேரம் பயன்படாது. ஒரு பொருளின் இருத்தல் என்பது அண்டவெளியில் அது இருக்கும் காலத்தை குறிப்பிடுகிற்து எனில் நம்முடைய காலத்தின் ஆரம்பமும் அண்டவெளியின் பிறப்பிலிருந்துதான் குறிப்பிடப்பட வேண்டும். எனவே நான்காவது பரிமாணமாகிய காலத்தை அண்டவெளியின் நேரமாக குறிப்பிடுவதுதான் சரி.

அப்படி பார்க்கும்போது ஒரு விசயம் புலப்பட்டது. அண்டவெளியின் உருவாக்கமும் முடிவும் மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றன என்பதே அது.. நெபுலா எனப்படும் ஒரு பெரிய நெருப்பு உருண்டை வெடித்து சிதறியதில் உருவானதுதான் அண்டவெளி என்பது உங்களுக்குத் தெரியும். நெபுலா எப்படி உருவானது? அண்டவெளியின் முடிவில்தான். எப்படி?

கோள்கள், விண்மீன்கள், அண்டங்கள் (நாம் வசிப்பது பால்வெளி அண்டத்தில்) என்ற பலவாறான விண்வெளிபொருட்களை தன்னகத்தே கொண்டுள்ள அண்டவெளி தற்சமயம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. ஏனெனில் இன்னமும் அதன் மையத்தில் வெடிப்புகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. வெடிக்கும் பொருள் தீர்ந்துவிடும் ஒரு நாளில் அங்கே ஒரு வெற்று புள்ளி உருவாகும். வெற்றிடமானது சுற்றியுள்ள பொருட்களை தன்னிடம் மீண்டும் இழுத்துக் கொள்ளும். ரொம்ப சரி, வெளியே தள்ளப்பட்டதெல்லாம் மீண்டும் ஒன்று சேர்ந்து கைகுலுக்கும். ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் மீண்டும் நெபுலா உருவாகும். சற்று அமைதியாக இருந்து மீண்டும் வெடிக்கும். அண்டம் முதல் நீங்கள்,நான்  வரை மீண்டும் அத்தனையும் அந்த அந்த காலக்கட்டத்தில் உருவாகும். இந்த கோட்பாட்டினை உலகம் இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கிறது. ஆனால்....   

அண்டவெளியின் முடிவின் மாதிரி - மத்தியில் இருப்பதுதான் black hole எனப்படும் வெற்றிடம்

ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பட்டினத்தார் 'பெருத்தன சிறுக்கும்.... சிறுத்தன பெருக்கும்' என்றும்  'தோன்றின மறையும்... மறைந்தன தோன்றும்....' என்று இந்த சுழற்சியை  குறிப்பிடுகிறார்.

இதனையே கணிதக்குறிப்பாக சொல்லும்போது equal to =
என்ற குறியினை பயன்படுத்துகிறார்கள்.

இந்த
= குறிதான் எண்ணிலடங்கா கேள்விகளுக்கு விடை தந்த ஐன்ஸ்டைனின் சமன்பாட்டையும் முக்கியத்துவம் பெற்றதாக்கியது.


ரிக் வேதத்திலும் பிந்து(புள்ளி)வில் இருந்து அனைத்தும் தோன்றியதாக குறிப்பிடப்படுகிறது. ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வேதங்கள்தான் உலகத்தின் தோற்றத்தை பற்றிய கோட்பாடுகளை முதன்முதலில் குறிப்பிட்டிருக்கின்றன. இன்றைக்கும் அறிவியல் கணிப்புகள் இதனை ஒட்டியே நிருபிக்கப்பட்டு வருகின்றன.



எனில், அண்டவெளியின் தோற்றத்தை வைத்து இன்றைய நாளை குறிப்பிடமுடியுமா? இதுவும் நம்முடைய பூஜை முறைகளில் உள்ளது.

பூஜை ஆரம்பிக்கும் முன் சொல்லப்படுகின்ற சங்கல்பத்தை படியுங்கள்.

'த்விதீய பரார்த்தே, ஸ்வேத வராககல்பே, வைவஸ்வத மன்வந்த்ரே, அஷ்டாவிம்ஸ்திதமே, கலியுகே, ப்ரதமபாதே, ஜம்பூ த்வீபே,பாரத வர்ஷே, பரத கண்டே, சகாப்தே...' என்று சொல்லப்படும் மந்திர வார்த்தைகள் உலகம் தோன்றிய நாளில் இருந்து இன்றைய நாளினை குறிப்பிடுகிறது.

இப்போது ஆரம்பத்திற்கு செல்லுவோம். முதலில் நான் குறிப்பிட்ட இன்று காலை பத்து மணி உண்மையில் எனக்கு மீண்டும் வர வாய்ப்புள்ளது என்பது புரிகிறதல்லவா? அப்போது கண்டிப்பாக நான் மதுரையில் என் வீட்டில்தான் இருப்பேன். ஒவ்வொரு நிகழ்வும் அண்டவெளி நேரத்தால் கட்டப்பட்டுள்ளதால் இதுதான் சாத்தியம். எளிதாக சொல்ல வேண்டுமெனில், இதே போல இந்த விசயத்தை நான் நிறைய முறை பதிவிட்டுக் கொண்டே இருக்கிறேன். நீங்களும் நிறைய முறை படித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனில் அனைத்து நிகழ்வும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவைதான். நாம் அதனை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். 
நாம் மட்டுமல்ல அண்டவெளியில் உள்ள அத்தனை பொருட்களும். என்ன ஒரு வித்தியாசம், மற்றவை ரொம்பவும் பேசாமல் இதனை செய்கின்றன. ஆனால், நாம்தான் அனைத்தையும் செய்வதாக சத்தம் போட்டு பேசிக் கொண்டே இயற்கை விதித்தவற்றை செய்கிறோம்.

இந்த பதிவு சொல்லும் விசயத்தை ஒரே வாக்கியமாக சொல்ல வேண்டுமெனில் , அனைத்தும் ஏற்கனவே நடந்து பதிவு செய்யப்பட்டவை. நாம் அதனை மறுபடியும் தொடர்கிறோம்.
                               

இதே விசயத்தை வேறுமாதிரி சிந்திக்கவும் முடியும்.
'='  குறியினை பயன்படுத்தி பேசும்போது... இந்த நான்காவது பரிமாணமாகிய காலத்தின் பிடியில் நிகழ்வுகளும் அதன் தொடர்புடையவர்களும் உள்ளார்கள் எனில்   ஒரு நிகழ்வு சம்பந்தப்பட்டவற்றை செயற்கையாக இணைக்கும்போது அந்த காலகட்டத்திற்குள் செல்ல முடியுமா? மீண்டும் தொடர்வோம்.


20:24 | Author: சாகம்பரி

(இது திரை விமரிசனம் அல்ல)
ஒரு ஆரம்பத்திற்காக....
  ஐந்தறிவு  - அறிவு, கேட்கும் அறிவு, தொடும் அறிவு, நுகரும் அறிவு, ருசிக்கும் அறிவு
  ஆறாம் அறிவு - பகுத்தறிவு
  ஏழாம் அறிவு - ஜெனிடிக் மெமரி (மரபியல் சார்ந்த அறிவு...? )

நான்கு பரிணாமங்கள் - நீளம்,அகலம்,உயரம்,நேரம்.
ஐந்தாவது -.....?
குறிப்புகள்: பழந்தமிழரின் அற்புதமான ஆற்றல். அதனை கையாளும் ஆழ்ந்த ரகசியங்கள் நம்மிடம்தான் இருந்தன. ஆயுதமாகவும் கையாளப்பட்டது. கால வெள்ளத்தில் மறக்கப்பட்டு புதைக்கப்பட்டுவிட்டது. அதைப் பற்றி தெரிந்து கொள்ள காத்திருங்கள்.


கேள்வி என்ன வென்றால் ஐந்திற்கும் ஏழிற்கும் என்ன தொடர்பு? இதை தெரிந்து  கொள்ள சில வேலைகளை செய்ய வேண்டும். தூசு படிந்துள்ள கண்ணாடியை துடைக்கும் வேலைதான். அதன் வழியாக பார்த்தால் எதுவும் தெரியாது. அதே போல் மேற்கத்திய நாட்டின் கலாச்சாரத்தின் பிடியிலிருக்கும் நமக்கு நாம் இழந்த ஒரு அதிஅற்புதமான விசயத்தை பற்றி புரிந்து கொள்ள சற்று சிரமமாக இருக்கும். பொருள் ஆற்றல் எனில் ஆற்றல் பொருளாகும் என்ற ஐன்ஸ்டைனின் கருத்தை ஒட்டியே இதன் விளக்கம் கிட்டுகிறது. ஆரம்பத்திலிருந்து பேசலாமா? ஆரம்பம் என்றால் முன்பிருந்து மூத்த காலத்திலிருந்தே.....

இனி ஆரம்பிக்கலாம்.
  பரிமாணம் ஒரு பருப்பொருளின் அளவை குறிக்கும் சொல். இன்னும்கூட விளக்கமாக கூறமுடியும். ஒரு பொருள் ஆக்கிரமிக்கும் இடத்தை அறிந்து கொள்ளும் கணக்கீடுகள். ஒரு பொருளின் அளவை குறிக்கும் முறை ஏன் வந்தது? வியாபாரத்தின் தேவை கருதிதான்.

அதற்கு முன் முப்பரிமாணம் நமக்குத் தெரியும். நீளம்,அகலம், உயரம்.  நான்காவது பரிமாணம் என்ன? காலம். ஒரு பொருளை குறிப்பிடும்போது அதன் அளவு மிக முக்கியம். அத்துடன் கால அளவிற்கு என்ன அவசியம் வந்தது? இதுவும் வியாபார சிக்கல்களுக்குத்தான். பண்டை காலத்தில் கடல் வழித் தொடர்புகள் வழியாகவே வணிகப்பரிவர்த்தனை நடந்து வந்தது. வணிகப்பொருளின் முப்பரிமாணங்கள் மட்டும் குறிக்கப்பட்டு வந்த காலம். ஒரு முக்கியமான சிக்கல் வந்தது. சில பொருட்கள் குறிப்பிடப்பட்டிருந்த அளவிலிருந்து மாறியிருந்தன. நீண்ட காலம் பயணப்பட்டு வந்ததால் காற்று, மழை போன்ற இயற்கை சக்திகளின் காரணமாக இந்த அளவுகள் மாறியிருப்பது தெரியவந்தது. உ-ம், சூடம். காற்று படப்பட கரைந்துவிடும். எடையும் அளவும் குறைந்துவிடும். இது போன்ற பிரச்சினைகளினால் நாலாவது பரிமாணத்தையும் குறிப்பிடும் வழக்கம் ஏற்பட்டது. அது அந்தப் பொருள் அனுப்பப்பட்ட தேதியை குறிப்பிட்டது. இந்த தேதியில் இந்த அளவுள்ள பொருளை அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டது. (இப்போதுகூட when packed என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதல்லவா?) இந்த காலமாகிய நான்காவது பரிமாணத்தை புரிந்து கொண்டால்தான் அடுத்ததற்கு செல்ல முடியும்.

வெறும் அளவீடுகளாக மட்டுமே இருந்த பரிமாணம் இன்னும் சில முக்கிய ரகசியத்தை தன்னகத்தே கொண்டிருந்ததை நாம் அறிந்திருந்தோம். ஒரு பொருள் ஆக்கிரமிக்கும் அல்லது வியாபித்து இருக்கும் அளவு  என்பதே பரிமாணம் எனில் சில கேள்விகள்...

ஒரு பொருளின் இருப்பை அல்லது வியாபிதத்தை வெறும் முப்பரிமாணமாக குறிப்பிடுவது அதனுடைய இயற்பியல் அளவீடுகள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல அத்துடன் காலத்தையும் குறிப்பிடும்போது இந்த அகண்ட வெளியில் அதனுடைய இருத்தலையும் குறிக்கிறது. ஒரு சிறு பொருளுடன் மட்டும் ஒப்பிடாமல் நாம் வசிக்கும் இந்த பூமி ,சூரிய குடும்பம், அண்டவெளி என்று பார்க்கும்போது ஒரு பெரிய ரகசியம் புலப்படும். 

  இன்று காலை பத்து மணிக்கு  என் வீட்டில் மதுரையில் இருந்த நான்  இரவு பத்து மணிக்கு சென்னையில் இருக்கிறேன், எனும்போது தற்சமயம் நான் என்ற ஒரு இயற்பியல் வரையறைக்குட்பட்ட ஒரு பொருள் மதுரையில் இல்லை என்றாகிறது. சரிதானே அப்படியெனில் இன்று காலை பத்துமணியை மறுபடியும் அடையமுடியுமெனில் நான்  மதுரையில்தானே இருக்கவேண்டும். இது சாத்தியமாகுமா?.அதாவது காலம் என்ற பரிமாணத்தில் இன்று காலை பத்துமணி, நான், மதுரை, என் வீடு ஆகிய அனைத்தும் ஒன்றாக் கட்டுப்படுகின்றன அல்லவா? இன்னும் சற்று விரிவாக அடுத்த பதிவில் பார்க்கலாம்.

20:00 | Author: Ravi
நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்.
நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரைஉண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.
                                                   
           நாலடியார்.   


1. உங்கள் நண்பனுக்கு என்ன வேண்டும் என்று தெரிந்து செய்யுங்கள்.
2. உங்களுடைய கருத்துக்களை அவர்களிடம் திணிக்காதீர்கள்
3. நட்பு உடையுமளவிற்கு எந்த விசயத்திலும் வாக்குவாதம் புரியாதீர்கள்.
4. தேவையான சமயதில் ஊக்கப்படுத்துங்கள்
5. நட்பில் பிழை பொறுத்தல் மிக அவசியம்.
6. உங்களைப்போலவே உங்கள் நண்பனும் இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்.
7. அவர்கள் நன்றாக வாழ்ந்தாலும் அல்லது நிலை தாழ்ந்து போனாலும் விட்டு விலகாதீர்கள்.
8. இரகசியம் காக்கும் தன்மை உங்களிடம் இருப்பது நட்பை பலப்படுத்தும்.
9. அவர்களுடைய தவறுகளை மென்மையாக சுட்டிக்காட்டி சரியான பாதைக்கு கொண்டு செல்ல முயற்சியுங்கள்


  இவை அத்தனையும் நல்லவன் என்று அடையாளம் கண்டு நட்பு கொண்டாடிய ஒருவனுக்காக செய்ய வேண்டும். எப்போதாவது மனிதர்கள் குணம் செயல் மாறுவது உண்டு.அந்த நிலையிலும் நண்பனை விட்டு நீங்காமல் அவனை நல்வழிப்படுத்துவது நட்பின் தன்மையாகும்.

14:22 | Author: சாகம்பரி
ஆதி காலத்தில் இருந்து தொடங்குவோம். சில பெருமைமிக்க செய்திகளை தருகிறேன். கி.முக்களிலேயே அறிவியல், கணிதம், வானவியல், மருத்துவம் ஆகியவற்றில் சிறந்திருந்த நம் மூதாதையர்களின் சிறப்புமிக்க குறிப்புகள் வேதங்களிலும், சித்தர் பாடல்களிலும்  ஓலைச்சுவடிகளாக பதியப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு தருகிறேன்.

அறிவியல் :

* சிறப்பான மருத்துவ குறிப்புகளை சித்தர்களின் ஓலைச்சுவடிகளில் காண முடிகிறது. அகஸ்த்தியர் - மூலிகை மருத்துவத்திலும்(microbiology), போகர் - கனிம மருத்துவத்திலும்(chemical components), புலிப்பாணி விலங்குகளை (biotechnology) பயன்படுத்திய மருத்துவ முறைகளிலும் சிறப்பான குறிப்புகள் தந்துள்ளனர். கதிரியக்க குறிப்புகளையும், அணு அளவில் மாற்றங்களை நிகழ்த்தக் கூடிய ரசவாத குறிப்புகளையும் சுவடிகளின் காணமுடிகிறது கி.மு 3000 அணுவின் அமைப்புகளை மாற்றி வேறு ஒரு கனிமமாக மாற்றும் வித்தையை போகர் குறிபிட்டுள்ளார்.


*. இரத்தும் உறிஞ்சும் அட்டைகளை(leach) வைத்து இப்போது ஆராய்ச்சிகள் உலக அளவில் நடைபெறுகின்றன. முதல் முதலில் 1020ல்தான் இது பற்றிய ஆராய்ச்சிகள் ஆரம்பித்தன. ஆனால் 2500 வருடங்களுக்கு முன்பே ஆயுர்வேதத்தில் இது பற்றிய குறிப்புகள் உள்ளன. மருத்துவ கடவுளாக கருதப்படும் தன்வந்திரி பகவானின் கையில் மருத்துவ உபகர்ணங்களுடன் leach உள்ளது.

* அகஸ்திய சம்ஹிதா என்ற நூலில் ஒரு மின்சார பெட்டரியை தயாரிக்கும் முறை சொல்லப்பட்டுள்ளது.

வானவியல்
* ரிக் வேதத்தின் குறிப்புகளை கொண்டு கி.பி 1315ல் சாயனாச்சார்ய என்ற விஜய நகரப்பேரரசின் அறிஞர் ஒளியின் வேகத்தை குறிப்பிட்டுள்ளார். "ஓ, சூரிய கடவுளே அரை  நிமிஷாவில் 2022 யோசனைகள் கடந்து வரும் உன்னை வணங்குகிறேன்" ஒரு யோசனை என்பது 9 மைல்கள், நிமிஷா என்பது 8/75 வினாடிகள்.. அவருடைய குறிப்பின்படி ஒலிவேகம் -186,413.22 மைல்/வினாடி. நவீன கணிப்பு 186,300மைல்கள்/வினாடி.

*சூரிய கதிர்களில் ஏழு வர்ணங்கள் உள்ளதை கி.மு 1500லேயே ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதையே ஏழு குதிரைகளாக தேரில் பூட்டியுள்ளதாக காட்டினர். நவீன கருத்தின்படி 1671ல் நியூட்டன் முதன்முதலில் ஸ்பெக்டரம் என்று குறிப்பிட்டார்.

* வேதங்களின்படி,  ஒரு பூஜையினை செய்வதற்குமுன் சங்கல்பமாக கூறப்படுகின்ற வாக்கியத்தில் உலகம் ஆரம்பித்த நாலில் இருந்து இன்றைய நாளினை குறிக்கிறோம்."த்விதீய பரார்த்தே, ஸ்வேத வராககல்பே, வைவஸ்வத மன்வந்த்ரே, அஷ்டாவிம்ஸ்திதமே, கலியுகே" என்று வரும்.  இதன்படி 
ஒரு மகாயுகா = 4 யுகங்கள் = 43,20,000 வருடங்கள்
ஒரு மன்வந்திரம் = 30,84,48,000 வருடங்கள் (71 மகாயுகா+1 க்ரேதா யுகம்) 
ஒரு கல்பம் = 432,00,00,000 (14 மன்வந்திரம்+1 க்ரேதா யுகம்) அல்லது 1000 
                                                                                                                                 மகாயுகம் 
ஒரு  கல்பம், இதுதான் உலகத்தின் வயதும்.

     நவீன முறைப்படி 454,00,00,000 ரேடியோமெட்ரிக் முறையில் கணிக்கப்பட்ட வயது. பூமியுடனேயே பிறந்ததாக சொல்லப்படும் நிலவின் மாதிரி கற்களிலும் ஆராய்ச்சி செய்து இது உறுதிபடுத்தப்பட்டது.


            
கணிதம்
கி.மு -3000  - நீளம், எடை ஆகியவற்றை குறிக்கும் அளவீடுகள் வரையறுக்கப்பட்டன.
கி.மு 1500 - வேதகாலம் - வானவியல் கொள்கைகள், கணித வரைபாடுகள், எண்கள் ஆகியன உருவாக்கப்பட்டன.
கி.மு 200  - பூஜ்யம் குறிப்பிடப்பட்டது. அதுவரை நேர்மறை எண்கள்(+) மட்டுமே குறிப்பிடப்பட்டன, எதிர்மறை எண்களையும்(-) குறிப்பிட முடிந்தது.
கி.பி 400 - 1200- கணித சாஸ்திரத்திற்கான முக்கியமான காலகட்டம். கணிதவியல் வல்லுனர்கள் ஆர்யபட்டா, பாஸ்கரா, ஸ்ரீதரா ஆகியோரின் காலம்.
               

ஆர்யபட்டா ஒரு நாள் என்பது 23 மணிகள்,56 நிமிடங்கள், 4 வினாடிகளும் 0.1 விகிதத்தையும் கொண்டது என்று கணித்தார்.  
நவீன கணக்குப்படி 23 மணி,56 நிமிடம்,4 வினாடி மற்றும் 0.091 விகிதம் என்று கணிக்கப்பட்டுள்ளது.அவருடைய ஆர்யபாட்டியா என்ற நூலில் ஒவ்வொருரு கோள்களின் தொலைவும், அது சூரியனை சுற்றி வரும் நாட்களும் நவீன கணிப்புடன் ஒப்பிடும் அளவிற்கு மிகச்சரியாக கூறப்பட்டுள்ளன.

யோகா: இன்றைக்கு உலகம் முழுவது கொண்டாடிக் கொண்டிருக்கும் யோகாசன முறைகள் பதஞ்சலி முனிவரால் உருவாக்கப்பட்டன. இவர் கி.மு 147ல் வாழ்ந்தவர்.

காஷ்யப ரிஷி - முதன்முதலில் அணு என்ற ஒன்றை குறிப்பிட்டார். அணுவையும்(atom) பிளந்து பரம அணு (ந்யூட்ரான்?) என்று ஒன்று உள்ளதையும் குறிப்பிட்டார்.

                                                                                அடுத்த பதிவில் இன்னும் பார்ப்போம்.
Thanks to Hindusutra.com

12:20 | Author: சாகம்பரி

தீரத்தி லேபடை வீரத்திலே-நெஞ்சில்
      ஈரத்தி லேஉப காரத்திலே
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
      தருவதி லேஉயர் நாடு
                                                                                                              -மகாகவி

        நம் அன்னைபூமியின் தொன்மையையும் உயர்வையும் எத்தனையோ பாடல்களும், உரை நடைகளும் எடுத்துரைத்துள்ளன.  இந்த தேசத்தின் பெருமை அதன் வீரமும் ஞானமும் மிக்க வரலாறு மட்டுமல்ல, அதன் மைந்தர்களாகிய நம்முடைய உயரிய சிந்தனைகளும், பேணி வளர்த்த கலாச்சாரமும்தான். உண்மையில் இன்றைக்கு தலைவிரித்தாடும் ஊழலும், லஞ்சமும் பாரத மண்ணில் விளைந்தவை அல்ல. அந்நியர் விதைத்துவிட்டுப் போனது. அதனை தூக்கி எறிவது நம்மிடம்தான் உள்ளது. உரத்து பேசுவதாலோ, சினம் கொண்டு எழுதுவதாலோ இவற்றை துரத்த முடியாது. சட்டங்களோ அவற்றிற்கான தண்டனைகளோ இவற்றை வேரறுக்க முடியாது. நல்லதை விதைப்பதும் பேணி வளர்ப்பதும் நம் கையில்தான் உள்ளது. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இவற்றை கடைபிடித்தாலே போதும். நம் தேசத்தை எத்தனை கேலி பேசினாலும் அழுத்தமாக மறுக்கமுடியாத ஒரு உண்மை உலக அளவில் பயமுறுத்துகிறது. என்றைக்காவது இந்தியா வல்லமை மிக்க தேசமாக மாறும் என்பதே அது.

       இன்றைக்கு நம் பாரத மாதா தளர்வுற்று இருக்கிறாள். ஏனென்றால், நம்முடைய தேசத்தின் வலி மிகுந்த வரலாறும், பெருமை மிக்க ஆக்கங்களும் இன்றைய இளையவர்களுக்கு தெரிய வைக்கப்படவில்லை. சுதந்திர தினம் ஞாயிற்றுக் கிழமையில் வரவில்லை என்ற மகிழ்ச்சிதான் மிகுந்து வருகிறது. செவி வழிச்செய்திகளாக அடுத்தடுத்த தலைமுறைக்கு மாற்றப்பட்டு வந்த மண்ணின் மரபும் வீரமும் ஏதோ ஒரு கட்டத்தில் நூலறுந்து போய்விட்டது போலும். மனம் கூசாமல் தாய் நாடு தரமிழந்து விட்டதாக பேசுகின்றனர்.

       ஒரு இளைஞன் பட்டி மன்றத்தில் பேசுகிறான் "வெறும் பழம் பெருமை பேசிக் கொண்டிருக்கிறோம். அது நம்முடைய முன்னேற்றத்திற்கு கால் காசு பெருமானம் கூட தாராது. வெள்ளையர்கள் நம்மை ஆண்டார்கள். ஆமாம், அதனால்தான் சிறப்புமிக்க இருப்புப்பாதை கிட்டியுள்ளது. நிறைய பாலங்கள் அவர்கள் கட்டியவைதான். இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்திருந்தால் இன்னும் முன்னேற்றம் கண்டிருப்போம்.... " இதற்கு கை தட்டல் வேறு கிட்டியது. அது அவனுடைய சிந்தனையில் உதித்தல்ல. பாலம், அணைக்கட்டு, இருப்புப்பாதை போன்றவற்றை ஆங்கிலேயர்கள் கட்டிய காலத்தின் நிலமையை இளையவர்களுக்கு சொல்லிப் புரியவைக்க தவறி விட்டோம். 80 சதவிகித வரி விதிப்பில் இந்தியர்களை பரதேசிகளாக்கிவிட்டு அவர்கள் கொண்டு சென்ற வரலாறு மறக்கப்பட்டு விட்டனவே.

      நம்முடைய வரலாற்று நாயகர்கள் ஜாதிய ரீதியில் அடையாளம் காணப்பட்டு உருமாற்றம் அடைந்து விட்டனர். உண்மையில் இது போன்று ஒரு புதிய கோலம் பெறப்போகிறோம் என்று அவர்கள் நினைத்துகூட பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களுடைய அன்றைய சிந்தனையை ஆக்கிரமிப்பு செய்திருந்த தாய் மண்ணின் பெருமையும் அதனை காக்கும் கடமையுணர்வும் மறக்கப்பட்டு வருகின்றன. ஜாதி, மதம், இனம் ஏற்கனவே இங்கு இருந்ததுதான். அதெல்லாம் ஒருபோதும் ஒற்றுமையை குலைத்தது இல்லை. வேறு வழியில் வெற்றி கொள்ள முடியாத அன்னிய சூழ்ச்சிக்காரர்கள் அன்றைக்கும் இன்றைக்கும் இதைத்தான் ஆயுதமாக்கினர்.

ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில்
      அன்னியர் வந்து புகல்என்ன நீதி?-ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள்
      சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ? . 
என்ற பாரதியின் வார்த்தைகள் உண்மையின் உறைவிடமாக நின்று ஒன்றுபட்டு நாட்டின் விடுதலை கீதமாக ரீங்கரித்தது. விடுதலையையும் பெற்றோம்.

     இன்றைய நிலையிலிருந்து இன்னும் நிலை பிறழாமல் நம் தேசத்தை உணர்ந்து  மீட்டெடுக்கும் கடமை நமக்கு உள்ளது என்பதை உணர்வோம். இந்த தலைமுறையிலோ அல்லது அதற்கு முந்தைய தலைமுறையிலோ தொடர்பு அற்றுவிட்ட தொன்மை பூமிக்கு ஒரு பந்தம் உண்டாக்குவோம். நினைவுகளாய், சிதிலங்களாய் மாறிக் கொண்டிருக்கும் பெருமை மிக்க வரலாற்றினை மீண்டும் தொடர்வோம்.  மொழி, இனம், மதம் வேற்றுமைகளை தாண்டி நம் தேசத்தின் பெருமையினையும், பெருமை மிக்க மைந்தர்களையும் மீண்டும் அடையாளம் காட்ட இந்த தொடர் ஆரம்பிக்கிறது.                                          
    
    அடுத்த பகுதி ஆதி காலத்திலிருந்து ஆரம்பிக்கிறது. கொஞ்சம் பழம் பெருமை பேசுவோம் .

பாரத தேசமென்று பெயர் -2
09:23 | Author: சாகம்பரி
    பொருளீட்டும் முயற்சியில் மும்பை, பெங்களூர், பூனே என்று வெவ்வேறு திசைக்கு பிரிந்து தொலை தூரத்தில் இருந்தாலும் , வருடம் ஒரு முறை ஒன்றாக சகோதர சகோதரிகள் சில நாட்கள் சேர்வது வழக்கம். இது மூத்தவர்களுக்கு சிறிய வயதின் நினைவுகளின் மறுபதிப்பாக இருந்தாலும், அதே பிணைப்பு இளையவர்களுக்கிடையிலும் இருக்கவேண்டும் என்று இரண்டு வருடங்களுக்கொருமுறையாவது கண்டிப்பாக சந்திப்போம். வழக்கமான விருப்பம் கொடைக்கானல்தான். ஆனால் சென்றமுறை  விடுமுறைக்கு அங்கு சென்று தங்குமிடம், உணவிற்காக சிரமப்பட்டது நினைவிற்கு வந்ததால் இந்த முறை எங்கள் விருப்பம் முன்னார் எனப்படும் மூணார் ஆனது.

சுற்றுலா திட்டமிடும்போது ரொம்பவும் திட்டமிட மாட்டோம். எங்களுடைய  பயண அமைப்பாளர் மீது அப்படி ஒரு நம்பிக்கை. அவருடைய நண்பர் மூணாறில் தங்கும் விடுதி வைத்திருப்பதாக தெரியவுமே கிளம்பிவிட்டோம். மலையாள உச்சரிப்புடன் பேசிய நண்பரின் குரலில் ஏதோ தயக்கம். தங்கும் விடுதியின் வாடகை அதிகமிருக்குமோ என்றுகூட தோன்றியது. அதன் உண்மையான காரணம் பிறகுதான் புரிந்தது. இரண்டு சுமோவை கேட்டவர்களை மறுத்து ரைனோவை தருவித்ததில் எங்களுக்கு சற்று வருத்தம்தான். சுமோவில் இருக்கும் சுதந்திரம் ரைனோவில் இல்லை. சுமோவின் பின்பக்கம் குட்டீஸ்கள் ஆட்டம் போட்டுக் கொண்டு வரும்.  கட்டிவைக்கப்பட்ட உணர்வுடன் மலை ஏறிய பின்னர்தான் புரிந்தது. மிகவும் நெருக்கடியான மலைவளைவுகள் (கொடைக்கானலைவிட அதிகம்) ஒரு படகைப்போல எங்கள் வாகனத்தை ஆட்டியெடுக்க உள்ளேயே குலுங்கிக்கொண்டதோடு சிரமம் முடிந்துவிட்டது. சுமோ எனில் எண்ணிலடங்கா வண்ணம் வாகனத்திற்குள்ளேயே உருண்டிருப்போம். கடவுளுக்கு நன்றி!

போடி தாண்டியதுமே, மலையேற்றம் ஆரம்பிக்கிறது. கொஞ்சம் மலையேறியதுமே சில்லிட்ட காற்று நெற்றியில் இரத்தத்தை உறைய வைத்தது. மூனாரில் சாரல் மழையாம். இப்போது புரிகிறதா மலையாள நண்பரின் தயக்கத்தின் காரணம். பச்சை போர்வை விரித்ததுபோல ஆரம்பித்த மலைச்சாலையை பார்த்து  இளையவர்கள் ( 5 வயதிலிருந்து 23 வயதுவரை உள்ளவர்கள்) போட்ட கூச்சலில் எங்களுக்கு முகம் மலர்ந்தது.   " ஹேய் , இது ஏலக்காய் செடி." " இதிலேருந்துதான் டீ தாயாரிக்கிறார்களாம்" என்று கண்ணில் பட்ட செடிகளை சுட்டியபடி உற்சாகக்குரல்கள். ஏலக்காய் செடியில் இப்போது காய் எதுவும் விட்டிருக்கவில்லை. ஒரு முறை மேகமலை சென்றபோது பார்த்த நினைவு வந்தது. இன்னும் சில பழ மரங்கள். அந்த மண்ணிற்கே உரியது. பாதி மலையேறவுமே  வாகனத்தை நிறுத்தி சோதனை. கேரள எல்லையாம். எங்கள் அலைப்பேசியில் வரவேற்பு செய்திகள் வர ஆரம்பித்தன. ரோமிங் கட்டணத்தை நினைவுபடுத்துகிறார்களாம். மலை முழுவதும் தேயிலைத் தோட்டங்கள். கலைந்த போர்வை போல தோற்றமளித்து எடுத்து உதறி மீண்டும் சரியாக போர்த்தத் தூண்டுகிறது.

மீதிருந்த மலை வளைவுகளில் குலுங்கி குலுங்கி - 24 என்று பார்த்த நினைவு- வழியில் தென்பட்ட கண்ணன் தேவன் தேயிலைத் தோட்டங்களை கடந்து மூணாறை அடைந்தோம். பழைய மூணார் , புது மூணார் என்று பிரிக்கின்றார்கள். நிறைய உணவுவிடுதிகள் பழைய மூணாரில்தான் உள்ளன. நாங்கள் புது மூணாரில் தங்கினோம். நிறைய பேர் தங்கும் வசதியுடன் ரிசார்ட்ஸ் கிடைக்கின்றது. நாங்கள் தங்கியது உணவகத்துடன் கூடிய தங்கும் விடுதி. சிறிய குழந்தைகள் இருக்கும்போது இதைத்தான் விரும்புவோம். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சமயத்தில் பசிக்கும்.  ஆனாலும், மிக அழகாக உடுத்திக் கொண்டு கிளம்புவதில் சமர்த்தர்கள். சுற்றிப்பார்க்க ஒரு பட்டியலே இருந்தது. எங்களுக்கிருந்த விடுமுறையை கணக்கிட்டு சிலவற்றை நாங்கள் தேர்வு செய்ய, மழையால் திகில் கிளப்பிய வனாந்தரப்பகுதிகள் எங்களை சில இடங்களுக்கு மட்டுமே அனுமதித்தது.
   
  எரவிக்குளம் தேசிய பூங்கா- சிறப்பு மிக்க வரையாடுகள் பார்க்கலாம். நாங்கள் சென்றபோது மழையினால் மண் சரிவு ஏற்பட்டு பூங்கா மூடப்பட்டுவிட்டது. 

   
  மாட்டுபட்டி அணை - பெரிய நீர் தேக்கம். சுற்றுலா பயணிகள்  ஷாப்பிங்               
                          இடமாகவும் இருக்கிறது.   
ஆட்டுக்கல் நீர்வீழ்ச்சி - மலையேறுபவர்களுக்கு சொர்க்கம். எங்களைப் போன்றவர்களுக்கு வழுக்குப் பாறைகள் நிறைந்த திகில் பூமி.

 எக்கோ பாயிண்ட் - மலை முகடு. மூணாறைவிட அதிக உயரத்தில் உள்ள இடம். உயரம் செல்ல செல்ல குளிர் அதிகரித்து காது அடைத்துக் கொண்டு பேசுவது புரியாமல் தவித்தோம். சூடான தேநீர் மட்டுமே அதிக விருப்பமாக இருந்தது. 

 ஹைடெல் பார்க் - பூக்களின் தோட்டம். புகைப்பட பிரியர்களுக்கு வரப்பிரசாதம்.

 குறிஞ்சி பூங்கா - இது போடியின் கட்டுப்பாட்டில் உள்ளது. . குதிரை சவாரி அருமை.



சுற்றிப்பார்க்கும் இடங்கள் நிறைய உள்ளன. கொடைக்கானல் போல கூட்டம் இல்லை. நமக்கே நமக்கான குளுமை. சமயத்தில் தலை வலித்தால் இருக்கவே இருக்கிறது மசாலா தேநீர். காடை முட்டை, வேக வைத்த சோளக்கதிர், சீமை இலந்தை போன்றவை கிட்டுகின்றன.  ஒரு உற்சாகமான மன நிலையில் இவற்றை அனைத்து தரப்பினரும் உண்ணுகிறார்கள்.

அதிக பட்ச குளுமையை தந்த காட்டுப்பகுதிகள். இரத்தம் உறிஞ்சும் அட்டைகளுடன் உள்ள தேயிலைத் தோட்டங்கள். பெரும்பாலும் வட இந்தியர்கள் நடத்தும் உணவு விடுதிகள். இட்லிக்காக இரவில் பழைய மூணாரை தேடி யாத்திரை. இரவின் அமைதியில் இன்னும் கூடிப்போன உறைய வைக்கும் குளிர் - சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டோமோ?. மழையுடன் மலைப்பாதையில் திகிலூட்டும் பயணம் - காரோட்டி கடவுளாக தோன்றினார்.. விலை மலிவாக கிட்டிய நல்ல தரமான மசாலா பொருட்கள், டாடாவின் தேயிலை விற்பனை அங்காடிகள். இவைதான் எங்கள் பயணத்தின் கொசுறுச்செய்திகள்.

என்னுடைய அறிவுரை: சரியான நேரம் பார்த்து மூனார் செல்லுங்கள். மூனார் குளிரை அலட்சியமாக நினைக்காமல் கம்பளி உடைகளை எடுத்துச் செல்லுங்கள். ஒவ்வொரு இடத்திற்கும் பொருட்களின் விலையில் ஏற்ற இறக்கம் உள்ளது.  கொடைக்கானல் போல் இல்லாமல் சில சுற்றுலா இடங்கள் தனியார் ஏற்படுத்தியதாக உள்ளன. எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. கிடு கிடு பள்ளங்கள், தொலைவில் தெரியும் மலை முகடுகள், பச்சை பசேலென்ற காட்சிகள், அழகாக பூத்துக் கொலுங்கும் மலர்கள்- நீங்கள் இயற்கை விரும்பிகள் எனில் மூனார் ஒரு சொர்க்கம்தான்.

மலை இறங்கி குளிரிடம் விடைபெற்று போடியின் வெயிலை  உணர்ந்தபோது,  வந்த பாதையை திரும்பிப் பார்த்தபடி குட்டிம்மா கூறியது " ஹம் ஃபிர் சே ஆயேகா" - ( திரும்பவும் வரலாமா?)  அதுதான் எங்களின் விருப்பமும்.

23:19 | Author: பிரணவன்
தேசியக்கவி பாரதியின் படைப்புகளை அவ்வளவாக படித்து முடித்திடாதவன் என்ற மன அழுத்தம் எனக்குள் இருந்தாலும், இப்படைப்பின் மூலம் அவருடைய குருமார்கள் மற்றும் நன்பர்கள், அவர்களுக்கிடையேயான கருத்துப் பரிமாற்றம் பற்றி நான் அறியப்பட்டேன் என்பதில் மகிழ்ச்சிகொள்கின்றேன். இப்படைப்பை உங்களுடன் பகிர்ந்துகொள்வதிலும் நான் பெருமிதம் அடைகின்றேன்.

பாரதியின் குருமார்களும், நண்பர்களும். இந் நூலின் ஆசிரியர் ஆர்.சி.சம்பத், இந் நூலை பதிப்பு செய்தவர்கள் தாமரை பப்ளிகேஷன்(பி)லிட். சென்னை. மேலும் இவர் குருவியும் நாரியும், புண்ணியம் தேடி, சிறுவர்களுக்கு லெனின் போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார்.

பாரதியின் ஆன்மீக குருமார் நிவேதிதை தேவி, இவர் சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை ஆவார். இவர்களுக்கு இடையிலான முதல் அறிமுகம், நிவேதிதை அறிமுகத்திற்கு பிறகு பெண் அடிமைத்தனத்தை அறவே அழிக்க பாரதியார் எழுதிய கவிதைகள் அதன் காரணங்கள், நிவேதிதை பற்றிய பாரதியாரின் கவிதை, போன்றவற்றை மேற்கோள் காட்டியுள்ளார் ஆசிரியர்.

குள்ளச்சாமி பாரதியாரின் ஞான குரு, இவரைப் பற்றி பாரதியார் தனது  படைப்புகளான சும்மா, சிதம்பரம், கோபந்தா போன்றவற்றில் எழுதியுள்ளார்,
பாரதிக்கும், குள்ளச்சாமிக்கும் இடையேயான குருத்துப்பரிமாற்றம், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட நெருக்கமான நட்பு போன்றவற்றை எழுதியுள்ளார் ஆசிரியர்.

கோவிந்தசாமி பாரதியாரின் ஞானகுருக்களில் மிகவும் முக்கியமானவர், பாரதியாருக்கு தன் உடல் நலக்குறைவால் ஏற்பட்ட மரண பயத்தை நீக்கியவர்.

யாழ்பாணத்துச்சாமி இவரும் பாரதியாரின் ஞானகுருக்களில் ஒருவர்.

பாரதியாரின் அரசியல் குரு பாலகங்காதர திலகர், இவர்களுக்கு இடையேயான அறிமுகம், நடந்த விசயங்கள் போன்றவற்றை அழகாய் சொல்லியிருக்கின்றார் இப்பதிப்பில் ஆசிரியர்.

மேலும் இவரது நண்பர்கள் 29 பேர் பற்றியும் இந் நூலில் குறிப்பிட்டுள்ளார், இதன் மூலம் பாரதியின் வாழ்க்கையில் குருமார்களும், நண்பர்களும் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கின்றார்கள் என்பது நமக்கு விளங்கும்.

இப்பதிப்பை எழுத காரணமாய் அமைந்த சாகம்பரி அம்மா அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
00:41 | Author: அன்னைபூமி

இதமான அதிகாலைப்பொழுது, அந்த ஆற்றங்கரை ஓரம் நடந்து செல்கையில் ஈரத்தினுடன் இணைந்த அந்த வாசனை, எந்த வெளியில் நடந்தாலும் அந்த வழிப்பாதையும் அதன் வாசமும் நான் எங்கும் சூவாசித்தறியேன். நம் பார்வைக்கு அப்பார்பட்டு பல விசயங்களில் நாம் நம்மை மறந்து அனுபவித்த விசயங்க்களில் வாசனை நுகர்தலும் நம்மை அறியா நம் மனதுக்குள் நுலைந்த ஒரு அழகிய விசயமாகும். உண்ணும் உணவுகளில் இருந்து உடுத்தும் உடைவரை இந்த வாசமும் அதன் தனித்தன்மையும் மாறாதது. 
          சுவாசம் நம் உயிர் வாழ்வதற்கான விசயம் எனில், வாசம் நம் உணர்வுகளுக்கான விசயங்களில் ஒன்றாகிவிடுகின்றது. ஒவ்வொரு முறை நாம் பிரயாணம் மேற்கொள்ளும் போதும் அந்த இடங்களின் காட்சிகள் மட்டும் மனதில் பதிவதில்லை அந்த மண்ணின் வாசமும் நம் நினைவுகளில் பதியப்படுத்தப்பட்டு விடுகின்றன. 
           நம் பள்ளிப் பருவ நாட்களாகட்டும், கல்லூரி நாட்க்களாகட்டும், பணி செய்த இடமாகட்டும், அதன் வாசனைகளும் நினைவுகளும் நம் நினைவைவிட்டு என்றும் நீங்கியதில்லை. மாலைப்பொழுதில் சாலையோர தேனீர் கடையில் அருந்திய தேனீரின் வாசம், நாம் எந்த பகுதியில் தேனீர் அருந்தினாலும் நம் நினைவுக்கு சட்டென்று வந்துவிடும்.
         நமக்கு பிடித்த விசயங்களையும் அதன் அத்தனை பரிணாமங்களையும் நாம் அதிகம் உள்வாங்கிவிடுகின்றோம். அம்மாவின் கைப்பக்குவ சாதம், ரயில் நிலைய சிற்றுண்டிச் சாலை, கோயில் திருணீறு, திருவிழாக்கால மிட்டாய் கடைகள், தேர்வு நேர வினாத்தாள், வயல் வெளிகளின் பசுமை வாசம் என பல விசயங்கள் நம்மையும் அறியாமல் நம் மனதில் பதிந்தவையாகும்.
         பழகிய, நாம் பழக்கப்படுத்திவிட்ட பல விசயங்கள் நாளடைவில் பழமையென பெயர் பெற்றுவிடுகின்றன. எல்லாவற்றிர்க்கும் பதிலாக நாம் எதைத் தேர்ந்தெடுத்தாலும் நம்மில் உரைந்துவிட்ட அந்த வாசம் என்றும் நம் நினைவில் இருந்து நீங்குவதில்லை. தனிமையில் கண்ணில் நிறைந்த காட்சிகளுக்கு உயிர் கொடுபதும் கூட இந்த வாசனை நினைவுகள் தான்.
          வாசனை ஒன்றேவும் பல நினைவுகளையும் நம் ஞாபகத்திற்கு கொண்டுவந்து விடுகின்றன. வாசம் மாறாது பலவிசங்களையும் நம் நினைவில் வைத்திருக்கும் என்னற்ற நினைவுகள் நாளடைவில் பழமையென பெயர் பெற்றுவிடுகின்றன, இருந்த போதும் அதன் வாசம் மட்டும் என்றும் மாறுபடுவதே இல்லை. . . 

22:12 | Author: Ravi

  
மதுரையில் இருந்து தொடங்குகின்றது எங்கள் பயணம். ஒரு நாள் பயணம் என்பதால் நள்ளிரவு 12 மணிக்கு ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து எங்கள் பயணம் தொடங்குகின்றது. இரவு நேர பயணம் என்பதால் மதுரை – தேனி இடையேயான 75கிலோ மீட்டர் பயண தூரத்தை இரண்டே மணி நேரத்தில் கடக்கின்றது பேருந்து. தேனியை வந்தடைந்த நாங்கள் மலைப்பேருந்து வருவதற்குள் நாளைய பயணத்திற்கு தேவையான பொருட்களை பேருந்து நிலையத்தில் வாங்கிக்கொண்டோம். தேனியில் இருந்து 73கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மேகமலை. 

மேகமலை பகுதியை வன உயிரின சரணாலயமாக தமிழக அரசு 2009 ஜூனில் அறிவித்தது.குமுளி ரோடு - சின்னமனூர்; கண்டமனூர் - எழுமலை வரை 26 ஆயிரத்து 910 எக்டேர் வனப்பகுதி சரணாலயமாக உள்ளது. தற்போது, 16.36 லட்ச ரூபாயை வனத்துறை ஒதுக்கியுள்ளது


     தேனி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலங்களாக வைகை அணை, முல்லைப் பெரியாறு அணை, சோத்துப்பாறை அணை, சுருளி நீர் வீழ்ச்சி, கும்பக்கரை நீர் வீழ்ச்சி, மேகமலை, வெள்ளிமலை மற்றும் போடி மெட்டு ஆகிய இடங்கள் உள்ளன.

மேகமலை செல்லும் மலைப்பேருந்து சரியாக அதிகாலை 3.30 மணிக்கு தேனி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டது, வீரபாண்டி, கோட்டூர், சீலையம்பட்டி வழியாக பேருந்து சின்னமனூரை வந்தடைந்தது. வீரபாண்டியில் உள்ள கௌமாரியம்மன் திருக்கோயில் மிகவும் சிறப்புவாய்ந்த திருக்கோவில் ஆகும். இதன் அருகே முல்லைப்பெரியாறு ஆறு அழகாக இந்தக்கோவிலை கடந்து செல்கின்றது. தேனி கம்பம் நெடுஞ்சாலையில், சின்னமனூரில் இருந்து இடதுகைப்பக்கமாக செல்கின்றது மேகமலை செல்லும் பாதை.


  மேகமலை மேற்கு தொடர்ச்சி மலையின் ஓர் அங்கமாக திகழ்கின்றது. அடர்ந்த வனப்பகுதிகள் நிறைந்த மேகமலை, கேரள பெரியார் புலிகள் காப்பகத்துக்கும், தமிழ் நாட்டில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வன விலங்கு சரணாலயத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது. மலைப்பாதை தொடக்கத்தில் தமிழ்நாடு அரசு வனச்சரகம் சார்பில் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இதைக்கடந்து சென்றால் முருகன் கோவில் வழியே மலைப்பயணம் ஆரம்பம் ஆகின்றது. மலையேற்றம் 20 கிலோ மீட்டர் தான் என்றாலும் மீதம்முள்ள 32 கிலோ மீட்டர் மலைக்குன்றுகளுக்கு இடையேயும் தேயிலைத்தோட்ங்களுக்கு இடையேயும் கழிகின்றது.

மலைப்பாதையில் முதல் நிறுத்தம் கர்டானா எஸ்டேட், தேயிலைத் தோட்டங்களும், ஏலக்காய் தோட்டங்களும் இங்கிருந்தே ஆரம்பம் ஆகின்றது. இந்த நிறுத்தத்திற்கு சற்று முன்னதாக சிறிய தேவாலையம் ஒன்று உள்ளது. இதற்கடுத்து உள்ள ஊர்தான் மேகமலை. இதமான குளிர் காற்று, பனிமூட்டம் வழியாக பேருந்து பயணிக்கின்றது. இதன் பின் ஹைவேவிஸ  என்ற நிறுத்தம் உள்ளது, இங்கே தான் மஞ்சள் ஆறு அணை உள்ளது. இங்கும், மகாராஜா மெட்டு மற்றும் இரவங்களாறு என்ற இடங்களில் மட்டுமே சிற்றுண்டி சாலைகள் உள்ளன.

சரியாக அதிகாலை 7 மணியளவில் மகாராஜா மெட்டு என்ற எல்லைப்பகுதியை வந்தடைந்தது பேருந்து, அடர்ந்த பனி மூட்டமும், இருக்கமான குளிர் காற்றும், எங்களை இனிதே வரவேற்றன. அங்குள்ள சிற்றுண்டி சாலையில் தேனீர் அருந்தினோம், சற்று வித்தியாசமாகவே இருந்தது. மதிய உணவு வேண்டுமெனில் முன்னதாகவே இங்கு சொல்லிவைத்துவிட வேண்டும். இங்குள்ள மலைப் பகுதியின் உச்சியில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கை நாம் பார்க்கலாம். அதிகாலைப் பொழுதில் தேயிலைத் தோட்டங்களை ஒட்டிய வனப்பகுதியில் யானைக்கூட்டங்களையும் நாம் பார்த்து ரசிக்கலாம், மகாராஜ மெட்டு மலை உச்சியில் சிறிய காளி கோவில் ஒன்று உள்ளது. பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாகவே உள்ளது. சாலையோரம் ஈரப்பதம் மிகுந்த புல்வெளிகள் அதிகம், சற்றே தார் சாலையை விட்டு காட்டுப்பகுதிக்குள் கால் வைத்தால் பற்றிக்கொள்கிறது அட்டை, காலி கடிப்பதும் தெரியாது நம் இரத்தத்தை உறிஞ்சுவதும் தெரியாது, இதற்காக நாம் அதிகம் பயம் கொள்ள தேவையில்லை.இரவு நேரங்களில் இங்கே தங்குவது சற்றே கடினம், தங்கும் வசதியுள்ள அறைகள் மிகக்குறைவு, குளிரும் மிக அதிகம்.

வன விலங்குகளான சிறுத்தை, சிங்கவால் குரங்கு, மலை அணில், கேளை ஆடு , புலி, யானை, கரடி, சிறுத்தை புலி, வரையாடு, மிளா,  புள்ளி மான், காட்டெருமை, சோலை மந்தி, நீர் நாய் மற்றும் இன்னும் பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. அடர்ந்த வனப்பகுதி, மஞ்சள் ஆறு அணை, வென்னியாறு அணை, இரவங்களாறு அணை, தேயிலைத் தோட்டங்கள் என இயற்கை எழில்களை ரசித்தபின் 4.30மணிக்கு இரவங்களாறு பேருந்தின் மூலம் தேனிக்கு மீண்டும் பயணம் தொடர்கின்றது. . .....