16:58 | Author: பிரணவன்
வீர மன்னர்கள்
வள்ளல் சிகரங்கள்
வாழவைத்த தெய்வங்கள் என
எண்ணில் அடங்கா
இயற்கைப் புனைப்பெயர்கள்
இந்தியர்களுக்கு. . .

அர்த்த சாஸ்த்திரம்
வான சாஸ்த்திரம்
என அடுக்கடுக்காய்
சாஸ்த்திரங்கள் பல
படைத்த இந்தியர்கள்
அடிமையாக்கப்படுவதா
ஆங்கிலேயர்களால். . .

வீரத்திற்கே விதையாய்
இருந்த நம்மவர்கள்
வீழ்ந்துகிடப்பதா
அன்னியன் காலடியில். . .

எத்தனையோ சடலங்கள்
எண்ணற்ற போர்க்கலங்கள்
ஏமாற்றங்கள் பல கண்டும்
எழுச்சி பெற்றது இந்தியா. . .

அகிம்சை அறங்கள்
ஆயுத போராட்டங்கள் என
அடுக்கடுக்காய் தொடர்ந்தன
அச்சுருத்தல்கள் பல
ஆங்கிலேயர் மேல். . .

அறமும் வீரமும் சேர்ந்தது
அகிம்சையும் ஆயுதமும் சூழ்ந்தது
விற்க வந்தவர்கள் வேட்டையாடுவதா?
விரட்டி அடிக்கப்பட்டனர். . .

வீன்போகவில்லை போராட்டங்கள்
சிந்திய ரத்தமும்
போர்க்கல புழுதியும்
எடுத்து திலகமாய் இட்டுக்கொள்ள
பெறப்பட்டது சுதந்திரம். . .
வென்றது இந்திய தேசிய ஒற்றுமை
வந்தே மாதரம். . .வந்தே மாதரம். . .
23:19 | Author: பிரணவன்
தேசியக்கவி பாரதியின் படைப்புகளை அவ்வளவாக படித்து முடித்திடாதவன் என்ற மன அழுத்தம் எனக்குள் இருந்தாலும், இப்படைப்பின் மூலம் அவருடைய குருமார்கள் மற்றும் நன்பர்கள், அவர்களுக்கிடையேயான கருத்துப் பரிமாற்றம் பற்றி நான் அறியப்பட்டேன் என்பதில் மகிழ்ச்சிகொள்கின்றேன். இப்படைப்பை உங்களுடன் பகிர்ந்துகொள்வதிலும் நான் பெருமிதம் அடைகின்றேன்.

பாரதியின் குருமார்களும், நண்பர்களும். இந் நூலின் ஆசிரியர் ஆர்.சி.சம்பத், இந் நூலை பதிப்பு செய்தவர்கள் தாமரை பப்ளிகேஷன்(பி)லிட். சென்னை. மேலும் இவர் குருவியும் நாரியும், புண்ணியம் தேடி, சிறுவர்களுக்கு லெனின் போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார்.

பாரதியின் ஆன்மீக குருமார் நிவேதிதை தேவி, இவர் சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை ஆவார். இவர்களுக்கு இடையிலான முதல் அறிமுகம், நிவேதிதை அறிமுகத்திற்கு பிறகு பெண் அடிமைத்தனத்தை அறவே அழிக்க பாரதியார் எழுதிய கவிதைகள் அதன் காரணங்கள், நிவேதிதை பற்றிய பாரதியாரின் கவிதை, போன்றவற்றை மேற்கோள் காட்டியுள்ளார் ஆசிரியர்.

குள்ளச்சாமி பாரதியாரின் ஞான குரு, இவரைப் பற்றி பாரதியார் தனது  படைப்புகளான சும்மா, சிதம்பரம், கோபந்தா போன்றவற்றில் எழுதியுள்ளார்,
பாரதிக்கும், குள்ளச்சாமிக்கும் இடையேயான குருத்துப்பரிமாற்றம், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட நெருக்கமான நட்பு போன்றவற்றை எழுதியுள்ளார் ஆசிரியர்.

கோவிந்தசாமி பாரதியாரின் ஞானகுருக்களில் மிகவும் முக்கியமானவர், பாரதியாருக்கு தன் உடல் நலக்குறைவால் ஏற்பட்ட மரண பயத்தை நீக்கியவர்.

யாழ்பாணத்துச்சாமி இவரும் பாரதியாரின் ஞானகுருக்களில் ஒருவர்.

பாரதியாரின் அரசியல் குரு பாலகங்காதர திலகர், இவர்களுக்கு இடையேயான அறிமுகம், நடந்த விசயங்கள் போன்றவற்றை அழகாய் சொல்லியிருக்கின்றார் இப்பதிப்பில் ஆசிரியர்.

மேலும் இவரது நண்பர்கள் 29 பேர் பற்றியும் இந் நூலில் குறிப்பிட்டுள்ளார், இதன் மூலம் பாரதியின் வாழ்க்கையில் குருமார்களும், நண்பர்களும் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கின்றார்கள் என்பது நமக்கு விளங்கும்.

இப்பதிப்பை எழுத காரணமாய் அமைந்த சாகம்பரி அம்மா அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
05:20 | Author: Ravi














வானுலக தேவதைகள்

வாயிற்படி தெய்வங்கள்

வண்ண வண்ண

பட்டாம் பூச்சிகள்

வாசம் மாறா

மலர்கள். . .

விண்வெளிப் பெண்கள்

வீராங்கனைகள் என

பெண்மையின் பரிமாணங்கள்

ஆதிகாலம் தொட்டு

நிகழ்காலம் வரை

பக்குவமாய் கிளை

விரித்துவிட்டன. . .



நிலம் நீர்

ஆகாயம் என

இந்திய இயற்கைத்தாயின்

அத்துனை படைப்புகளிலும்

பெண்மையின் அடையாளம்தான். . .



இருந்தும் சிவமில்லாத

சக்திக்கு  இங்கே

சரீர மதிப்பு

மட்டுமே. . .



கணவனை இழந்துவிட்ட

கைம்பெண் மீது

எத்துனை சமூதாயச்

சாயங்கள். . .



இரண்டே வர்ணத்தைக் கொண்டுள்ள

மனித பிறப்பில்

அர்த்த நாதீஸ்வரரைத் தவிர

வேறு எவருக்குத் தான்

சமபார்வை.?

பெண்மையின் மேல். . . 
        
    மூன்றாம் கோணம் கவிதைப் போட்டியில் பங்குபெற்ற கவிதை 
                                                  
                                               ........பிரணவன்